ஹாய் கியூட்டிபாய்ஸ் மெல்லிய காதல் பூக்கும் கதைக்கு intro தேவையே இல்ல சோ குட்டி டீசரோடு வந்துட்டேன்.
கயல்விழி ப்ரதீபனிடம் தான் பாத்திருக்கும் பெண் தியா என்றதும் ஒருகணம் திகைத்தவன் "உன் விருப்பம் குட்டிமா" என்று மட்டும் சொல்ல
"இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகா முடியாது. முதல்ல பொண்ண பாருங்க பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். உங்களுக்கு பிடிக்கலையா வேற பொண்ணு பார்க்கலாம்" நீ பார்த்தால் போதும் என்றவனை வலுக்கட்டாயமாகத்தான் இழுத்து வந்திருந்தாள்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த ஆண்களை கண்டு விழியின் முகம் பார்த்து தியா நிற்க,
"தியா உனக்கு ஒரு மாப்புள பாத்திருக்கேன். மாப்புள என் அண்ணண்" என்று விழி சொல்லி முடிக்கும் முன்
"என்னது உங்கண்ணன நா கல்யாணம் பண்ணிக்கணுமா?" தியா அதிர்ச்சியாக கேக்க அங்கே இருந்த ரிஷி மற்றும் பிரதீபன் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
ரிஷியிடம் வந்தவள் "இங்க பாருங்க நீங்க விழியோட அண்ணனா இருக்கலாம், அதுக்காக எல்லாம் உங்கள கல்யாணம் பண்ண முடியாது. பாட்டிய விட்டு வரமாட்டேன்"
குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்பவளை கடிய முடியாமல் பிரதீபன் பார்க்க அவளின் மறுப்புக்கான காரணம் புரிந்து ரிஷியும், கயலும் சிரித்தனர்.
அவர்கள் சிரிப்பதையும் பொருட்படுத்தாது தான் சொல்ல வந்ததை சொல்லி விட்ட நிம்மதியில் தியா நகர
"ஒரு நிமிஷம் எனக்கு கல்யாணம் ஆச்சு என் பொண்டாட்டி இங்க இருக்கா" என்ற ரிஷி கயல்விழியை அணைத்துக் கொள்ள
வாயை பிளந்த தியா "அப்போ இவரு யாரு? அன்னைக்கு திலகாம்மா இவர்தான் விழி புருஷன் னு சொன்னாங்க" விழிவிரித்து யோசிக்க
"இவர் என் அண்ணன் திவ்யா" கயல் சொல்ல
"அம்மா இருக்குற நிலைமைக்கு என்ன சொன்னாலும் நம்புறியா?" பிரதீபன் அவள் அகல விரித்த கண்களை பாத்திருக்க,
"அம்மாக்கு என்ன அவங்க நல்லா இருக்காங்க" கண்களை சுருக்கியவள் கோபமாக பேச
அவளின் ஒற்றை வார்த்தையில் திலகாவின் மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்துக் கொண்ட பிரதீபன்
"இன்னும் என்ன அம்மா னு சொல்லி கிட்டு அத்த னு சொல்லு" தியாவை அதட்டியவன் மறைமுகமாக அவன் சம்மதத்தை கோடிட்டு காட்ட அதை புரிந்துக் கொண்டு கயல் ரிஷியை அணைத்துக் கொள்ள
"வா நாம கிளம்பலாம் இல்லனா உன் அண்ணன் நம்மள கரடி னு சொல்லிட போறான்" ரிஷி கயலை அணைத்தவாறே அவர்களின் இரண்டாவது தேனிலவை பற்றி பேசியவாறு அகன்றான்.
கயல்விழி ப்ரதீபனிடம் தான் பாத்திருக்கும் பெண் தியா என்றதும் ஒருகணம் திகைத்தவன் "உன் விருப்பம் குட்டிமா" என்று மட்டும் சொல்ல
"இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகா முடியாது. முதல்ல பொண்ண பாருங்க பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். உங்களுக்கு பிடிக்கலையா வேற பொண்ணு பார்க்கலாம்" நீ பார்த்தால் போதும் என்றவனை வலுக்கட்டாயமாகத்தான் இழுத்து வந்திருந்தாள்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த ஆண்களை கண்டு விழியின் முகம் பார்த்து தியா நிற்க,
"தியா உனக்கு ஒரு மாப்புள பாத்திருக்கேன். மாப்புள என் அண்ணண்" என்று விழி சொல்லி முடிக்கும் முன்
"என்னது உங்கண்ணன நா கல்யாணம் பண்ணிக்கணுமா?" தியா அதிர்ச்சியாக கேக்க அங்கே இருந்த ரிஷி மற்றும் பிரதீபன் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
ரிஷியிடம் வந்தவள் "இங்க பாருங்க நீங்க விழியோட அண்ணனா இருக்கலாம், அதுக்காக எல்லாம் உங்கள கல்யாணம் பண்ண முடியாது. பாட்டிய விட்டு வரமாட்டேன்"
குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்பவளை கடிய முடியாமல் பிரதீபன் பார்க்க அவளின் மறுப்புக்கான காரணம் புரிந்து ரிஷியும், கயலும் சிரித்தனர்.
அவர்கள் சிரிப்பதையும் பொருட்படுத்தாது தான் சொல்ல வந்ததை சொல்லி விட்ட நிம்மதியில் தியா நகர
"ஒரு நிமிஷம் எனக்கு கல்யாணம் ஆச்சு என் பொண்டாட்டி இங்க இருக்கா" என்ற ரிஷி கயல்விழியை அணைத்துக் கொள்ள
வாயை பிளந்த தியா "அப்போ இவரு யாரு? அன்னைக்கு திலகாம்மா இவர்தான் விழி புருஷன் னு சொன்னாங்க" விழிவிரித்து யோசிக்க
"இவர் என் அண்ணன் திவ்யா" கயல் சொல்ல
"அம்மா இருக்குற நிலைமைக்கு என்ன சொன்னாலும் நம்புறியா?" பிரதீபன் அவள் அகல விரித்த கண்களை பாத்திருக்க,
"அம்மாக்கு என்ன அவங்க நல்லா இருக்காங்க" கண்களை சுருக்கியவள் கோபமாக பேச
அவளின் ஒற்றை வார்த்தையில் திலகாவின் மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்துக் கொண்ட பிரதீபன்
"இன்னும் என்ன அம்மா னு சொல்லி கிட்டு அத்த னு சொல்லு" தியாவை அதட்டியவன் மறைமுகமாக அவன் சம்மதத்தை கோடிட்டு காட்ட அதை புரிந்துக் கொண்டு கயல் ரிஷியை அணைத்துக் கொள்ள
"வா நாம கிளம்பலாம் இல்லனா உன் அண்ணன் நம்மள கரடி னு சொல்லிட போறான்" ரிஷி கயலை அணைத்தவாறே அவர்களின் இரண்டாவது தேனிலவை பற்றி பேசியவாறு அகன்றான்.