மெல்லிய காதல் பூக்கும் P30

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (32).jpg

"மன்னிச்சிக்கோங்க அண்ணி எல்லாம் இவங்க பண்ண ட்ராமா தான் எனக்கொண்ணும் தெரியாது" முந்திக்கொண்டு ஸ்ரீநிதி ஜகா வாங்க



"தெரியும், தெரியும் கனிக்காக, அமுதனும் அமுதனுக்காக, கனியும் எதுவேனாலும் செய்வாங்கனு. ஆனா கல்யாண வியாசத்துல ஆள் மாறாட்டம் செய்வாங்கனு நினைக்கல" மலர்விழியும் இன்முகமாகவே சொல்ல

images (45).jpg

"சாரி சிஸ்டர் இவன் கேட்டதும் மறுக்க முடியல"



"நீங்க மட்டும் மறுத்திருந்தீங்க உங்க கல்யாணம் கேள்விக்கு குறிதான்" மலர்விழி அமுதனை பார்க்க கனியும் அவனைத்தான் பார்த்தான்



"ஆமாம்" என்றது அவன் பார்வை



"அடப்பாவி... பத்து வருஷ லவ் டா... காலேஜ் போக ஆரம்பிச்ச போ உண்ண சந்திச்சு உன் ஊருக்கு வந்தப்போ இவளை பாத்து கவுந்துட்டேன். அமேரிக்கா போய் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் கல்யாணம்னு சொன்னதால வரும் வரனேயெல்லாம் செவ்வாதோஷம்னு பொய் சொல்லி தட்டி கழிச்சு கிட்டு இருந்தா எங்களை போய் பிரிக்க பாக்கிறியே" கனி கோபமாக சொல்ல



"உனக்கு ஜஸ்ட் பத்து வருஷம் தான் எனக்கு இருவது வருஷ லவ் டா... எது பெருசு"



"பொய் சொல்லுறான்" மலர்விழி அமுதனை அடிக்க கையொங்க



அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன் "உண்மைத் தாண்டி பபா...{babaa } அன்னைக்கி எங்கம்மா பெல்டால் விளாசினப்போ எனக்காக கண் கலங்கி என்ன தூக்க முடியாம என் கிட்டயே இருந்து அழுதியே அப்போ இருந்து" கீதாராணி அமுதனை அடித்த சம்பவத்தை சொல்ல



"டேய்... அப்போ எனக்கு அஞ்சு வயசுடா... அதுவும் அது ரிஷினு தான் நெனச்சேன். ஆமா அதென்ன பபா னு கூப்டுற" மலர்விழி முறைக்க



"அத அப்பொறம் சொல்லுறேன்" அமுதன் கம்சிமிட்ட அதில் மயங்கியவள் சுதாரித்து



"கால்ல விழுறேன்னு சொன்ன மறந்துடாத"



"முத்தமும் வைக்கிறேன்னு சொன்னேன் டி நீ மறந்துடாத" மனைவிக்கே மயக்கும் புன்னகையால் பதில் சொன்னவன் சடங்குகள் ஆரம்பமாகவுள்ள அவ்விடம் சென்றான்.



அமுதன் சொன்னது போல் மெட்டி அணிவிக்கும் போது அவள் முன் மண்டியிற்று அமர்ந்தவன் அம்மியில் வைத்திருந்த காலை பிடித்து தன் தொடை மீது வைத்து மெட்டி அணிவித்து விட்டு கால்களுக்கு முத்தமிட்டான்.



சபையோர் முன்னிலையில் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத மலர்விழியும் வெக்காத்தால் சிவக்க


8 (2).jpg
"அது சரி அவன் அண்ணன் பண்ணாத பண்ணலைனா இரட்டைனு சொல்லுறதுல அர்த்தமென்ன?" பிரதீபன் சத்தமாக சொல்ல ரிஷியும் கயலும் தங்களின் நியாபகங்களில் மூழ்க




"கல்யாணம் அமுதனுக்குடா... நீங்க ரெண்டு பேரும் டூயட் பாட போய்டாதீங்க"





"இவன் பொண்டாட்டி ஓய்வெடுக்குறான்னு நம்மள போட்டு தாக்குறான். வார் நீ போய் தியாவா இங்க கூட்டிட்டு வா இவன என்னானு கேட்கட்டும்"



"ஏன்டா.... நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?"


"ஓஹ்... ஒஹ்.. நான் கூட இருந்தா உங்க நிம்மதி பறி போய்டுமா அண்ணா பாட்டிக்கும், எனக்கும் ஊட்டிக்கு டிக்கட் போடுங்க" தியா கணவனை முறைத்தவாறே வர



"பாத்தவச்சிட்டியே.... அவ வர்றான்னு தெரிஞ்சே தான் வாய கிளறினியா... உன்ன... இருடா... பழிவாங்காம விடமாட்டேன்" பிரதீபன் உள்குத்தோடு சொல்ல ரிஷி கண்டு கொண்டானில்லை.



அதற்கிடையில் அருந்ததியை பார்த்துவிட்டு வந்த மணமக்களை பெற்றோர் அச்சத்தை தூவி ஆசிர்வதிக்க, எல்லா சடங்குகளும் நிறைவானது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top