மெல்லிய காதல் பூக்கும் P27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? குட்டி டீசெர் தான். எழுத ஆரம்பிச்சா தான் நாளைக்கு UD போட முடியும் னு ஆரம்பிச்சு எழுதினது.:geek::geek:


download (20).jpg

கைது செய்யப்பட்ட ரத்னவேல் உடனடியாக சென்னைக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கீதாராணியின் உடல்நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பின்னே விமானம் மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.



உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர் குழு கூறி இருந்த பொழுதும் கீதாராணி பயணம் செய்யும் நிலைமையில் இல்லாதபடியால் அவளை கைதி செய்ய முடியாமல் கமிஷ்னர் திணற, விமானம் மூலம் அழைத்து செல்ல முடியுமா என்று மலர்விழி மருத்துவரை அணுகி கேட்டு அவள் செய்த ஏற்பார்ட்டின் பேரிலையே கீதாராணி சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப் பட்டாள்.



மருந்தின் வீரியமும், வலியின் தாக்கமும் கீதாராணி சுயநினைவில்லாமலையே இருக்க, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாமல் ஆழ்ந்த உறக்கத்திலையே இருந்தாள்.





ரத்னவேலுக்கெதிரான பல ஆதாரங்கள் சிக்கியும் வாய் திறக்க மறுத்த அவரை பதினைந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

images (11).jpg

மலர்விழி தந்தையையும், அத்தையையும் மனதால் வெறுத்தாலும் அவர்கள் தண்டனை பெற்று திருந்துவார்கள் என்று நெஞ்சோரத்தில் பேராசைக் கொண்டு தினமும் அவர்களை சந்திக்க காவல் நிலையம், மருத்துவமனை என அலைந்துக் கொண்டிருந்தாள்.





ரத்னவேலை சந்திப்பவள் அன்னையின் நியாபங்களை தூண்டி அன்பாக பேசினாள். செய்த குற்றங்களுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ளுமாறு பணித்தாள்.





கீதாவால் உணவை உண்ண முடியாததால் நீர் ஆகாரம் தான் வழங்கப் பட்டது. ஊட்டி விட்டது மட்டுமல்லாது சிந்தும் பொழுதெல்லாம் மலர்விழி துடைத்தும் விட அவளை புரிந்துக் கொள்ள முடியாமல் அமுதனும் அவளுடன் செல்ல கரிசனமான அவளின் செய்கைகள் அவனை எரிச்சலூட்ட வார்த்தையாலும், முகசுளிப்பாலும் அதை காட்ட ஆரம்பித்தான்.





அன்றும் மலர்விழி கீதாவின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அமுதன் கதவருகில் கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் எண்ணமெல்லாம் அலை பாய்ந்துக் கொண்டிருக்க "இவள் எந்த ரகம்? பழி வாங்க வேண்டும் என்று துடித்தாள், செத்து ஒழியட்டும் என்று விட்டு விடாமல் எதற்கு இவ்வளவு கருணை?. படுத்திருப்பது என்னை பத்து மாசம் சுமந்து பெற்ற அன்னை ஆனாலும் என் மனதில் "ஐயோ பாவம்" என்ற எண்ணம் தோன்ற வில்லையே! இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் தோன்றி இருக்குமோ? ஒருவேளை மலருக்கு அமுதவள்ளி அத்தையின் குணமோ!"



"அப்போ உனக்கு கண்டிப்பா உன் அம்மா குணம் தான்" அவன் மனசாட்ச்சி அவனை கேலி செய்ய, புயலென உள்ளே நுழைந்தான் ரிஷி.

images (54).jpg

:love::love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வந்துட்டான்ய்யா வந்துட்டான்
எங்கள் தானைத் தலைவர் ரிஷி வந்துட்டான்ய்யா
வந்தவன் இவங்க மூணு பேரையும் கிழி கிழின்னு கிழிக்கப் போறான் அவனையும் இந்த பழி வாங்கும் ஆட்டத்துல சேர்த்துக்கலைன்னு
ரிஷிக்கு இவர்கள் மூவரின் பதில் என்னவாக இருக்கும்?
ஆமாம் மலர்விழிக்கு கீதா அத்தை சொத்தை மேல திடீர்னு ஏன் பாசம் பாயசம் பொங்கி வழியுது?
வாட்டு மேட்டரு, மிலா டியர்?
 
Last edited:

rajienia

Well-Known Member
Malar nee pasama elam pana nebagapaduthuna mattum un athaiyum appa bum thirinthiruvangala Ena thirinthita matheri nadika vena seyunga fraud 420 ga athugalam nambiratha :sneaky::sneaky:parava ela amutha entha matheri situation la un amma charater unaku erukathu thappe ela:devilish::devilish:vanthutan la vanthutan la rishi avan epo pasama vanthurukana kolaveriyoda vanthirukana onum theriyalaye:geek:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Malar nee pasama elam pana nebagapaduthuna mattum un athaiyum appa bum thirinthiruvangala Ena thirinthita matheri nadika vena seyunga fraud 420 ga athugalam nambiratha :sneaky::sneaky:parava ela amutha entha matheri situation la un amma charater unaku erukathu thappe ela:devilish::devilish:vanthutan la vanthutan la rishi avan epo pasama vanthurukana kolaveriyoda vanthirukana onum theriyalaye:geek:
உண்மை தான் திருந்தாத ஜென்மங்கள்
ரிஷி என்ன சொல்ல போறான்னு பார்க்கலாம்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top