மெல்லிய காதல் பூக்கும் P18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடுத்த டீசரோடு வந்துட்டேன். நாளை இரவு அல்லது வியாழன் UD தர try பண்ணுறேன்.:geek::geek:


8 (17).jpg

"ஹனிமூன் எங்க போலாம் பேபி டால்?"



"எங்கவேனா போலாம்"



"ம்ம்.. இல்ல நீயே சொல்லு"



தியா யோசிக்க ப்ரதீபனின் அலைபேசி அடித்தது எரிச்சலுடன் திரையை நோக்க அமுதன் என்று வரவும் "கரடி சரியான நேரத்துக்குத்தான் போன் பண்ணுவான்" திட்டிக் கொண்டே அனைக்க போக



அலைபேசியை பிடுங்கிய தியா ஸ்பீக்கர் மூடில் போட்டு விட்டு கணவனின் மடியில் அமர்ந்துக் கொண்டாள்.

images (8).jpg

மறுபக்கம் அமுதன் மூன்று தடவை ஹலோ என்ற பின் தான் பிரதீபன் "சொல்லுடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே உன் கிட்ட பேசிட்டு வந்தேன். கல்யாணமானவனுக்கு ஆயிரம் வேல இருக்கும் புரிஞ்சிக்கடா" கை தியாவின் இடையை அளவிட வாய் மட்டும் பேசிக் கொண்டிருந்தது



தியா அவனை தடுத்தவாறே புன்னகைக்க அமுதனுக்கு பிரதீபன் சொன்னது புரியவில்லை போலும் "டேய் இந்த மலர்விழி அப்பா கிட்ட பொய் சொல்லுறா டா.. நீ வா உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்"



"அதான் தெரியுமே! அந்த மினிஸ்டர் பழிவாங்க போறேன்னு சொன்னவை அப்பா கிட்ட ஹீரோவா சொன்னாலே"



"அதில்லடா நான் அந்த டயரிய படிச்சேன். நீ வா உன் கிட்ட பேசணும். ரிஷியை இதுல கூட்டு சேர்க்க வேணாம்"



"ஏன் டா.... "



"கயல் அவன் வாழ்க்கைல வந்த பிறகு மாறினவன் ஆக்சிடண்ட்டுக்கு பிறகு ரொம்பவே மாறிட்டான். கண்டிப்பா பழிவாங்க போறேன்னு கிளம்பினா தடுப்பான் நீ வா"



"வா வானா எங்க வர சொல்லுற" கடுப்பாகி பிரதீபன் கத்த தியாவுமே ஒரு கணம் பயந்து விட்டாள்.

images (22).jpg

"மலர் சென்னைக்கு கிளம்புறா.... என்ன அவசரம் னு தெரியல. நானும் போறேன். நீயும் வா" துணிகளை பெட்டியில் அடுக்கியவாறே அமுதன் பதட்டத்தோடு பேசிக் கொண்டிருக்க



"அவ போகட்டும் விடுடா நீ எதுக்கு பதறுற, உனக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்கலையே"



"என்ன போட்டு வாங்க பாக்குறியா, வந்தா அடி பின்னி எடுத்துடுவேன். இப்போ என்ன தெரியணும் உனக்கு? நான் மலர லவ் பண்ணுறேன்னு தெரியனுமா? ஆமா நான் மலர லவ் பண்ணுறேன்" கோபத்தில் ஒத்துக் கொண்டானா? அல்லது தன் மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று சொன்னானா? அமுதன் பதட்டமாகவே பேசிக் கொண்டிருக்க



"டேய் நீ அவள லவ் பண்ணுற அவளுக்காக துடிக்கிற, நடுவுல நான் எதுக்குடா" மேலும் அவனை வெறுப்பேத்த அமுதன் மலர்விழியை காதலிப்பதாக சொன்னதில் கண்களை அகல விரித்திருந்தாள் தியா.



"வேணாம் பிரதீபா... என்ன வெறுப்பேத்தாத. சொன்னா கேளு"



"டேய் பதறாம வீட்டுக்கு வா உன் கிட்ட பேசணும்" என்றவன் அலைபேசியை துண்டித்திருந்தான்.



"என்னங்க இது அமுதன் அந்த மலர்விழி லவ் பண்ணுறாரா?"



"நீ எதுக்கு வாய பொளக்குற? என் தங்கச்சிய அவன் லவ் பண்ணுறான்" மேலும் தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தான் பிரதீபன்.

:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் அமுதன் இப்போ எதுக்குடா
பிரதீபனை டிஸ்ஸுடர்ப்பு பண்ணுறே
அவனே நொம்ப நாள் கழிச்சு
இப்பத்தான் பொஞ்சாதியை
லவ்விஸ் பண்ண வந்திருக்கான்
இதுக்குத்தான் சின்ன பசங்க கூட
சாவகாசம் வைச்சிக்காதேன்னா
கேட்டியா பிரதீப்

ஐ அமுதன் பையன் மலர்விழிக்கிட்ட
கவுந்ததை ஒத்துக்கிட்டான்
ஆனால் இந்த தியா அக்காவுக்கு
எதுக்கு இம்புட்டு ஷாக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top