முரண்பாடே காதலாய் 9

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
காதலாய் அணைக்கும் கரங்களுக்குள் சிறுபறவையாய் தன்னை ஒப்புவிக்கும் பெண்ணவள்...!
மாகாளியாய் மாறி
அக்னிஜுவாலையை கக்குவாள் ...
தன்னிடம் காமம் கொண்டு நெருங்குபவர்கள் மேல்..!!

அத்தியாயம் 9:

"டேய் மித்ரா ..! என்னதான்டா ஆச்சி உனக்கு ?? நேத்து நைட் என்னனா லாரில அடிப்பட்டவன் மாதிரியே வந்து நின்ன....காலையில பேய பார்த்த மாதிரி கத்தி எழுப்பிவிட்டுட்ட...இப்போ என்னனா என்ன இடம்னு கூட சொல்லாம இங்க கூட்டிட்டு வந்து உட்காரவைச்சிருக்க ..என்னதான்டா எரும ஆச்சி உனக்கு ??" - என்று யஷி தன் அருகில் ஏதோ யோசனையில் புருவம் சுருங்க அமர்ந்திருந்த மித்ரனிடம் கேட்டாள்.

￰காலையிலிருந்து எதுவும் பேசாமல் உம்மென்று இருக்கும் இந்த மித்ரன் யஷிக்கு புதியது . எப்பவும் இருவரும் ஒன்றாய் இருந்தால் அங்கு அமைதி என்பதர்க்கே இடம் இல்லாமல் போகும் . அப்படி இருக்கையில் மித்ரனின் இவ்வமைதி அவளை பயம் கொள்ள செய்தது . அதிலும் நேற்று அவன் இருந்த நிலை...எப்பொழுதும் தாயாய் அவளை மடிசாய்ப்பவன் நேற்று சேயாய் மடிசாய்ந்திருந்தானே .

அவனின் நிலை மாற்ற காலை முதல் யஷி ஏதேதோ பேச முயற்சிக்க விடையாய் கிடைத்ததோ அவனின் மௌனம் மட்டுமே . இதோ இருவரும் தற்பொழுது அவ்வூரிலிருந்து பல மைல் தூரங்களை கடந்து இந்த கட்டிடத்தின் வரவேற்பறை போன்ற இடத்தில் அமர்ந்திருக்கும் வரையிலும் அவனின் அவ்வமைதி தொடர்கிறது .

மித்ரனோ அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் , " யஷிமா ...! இது ஹாஸ்பிடல் கொஞ்சம் மெதுவா பேசுடா " என அடக்கினான் .

"என்னது ஹாஸ்பிடலா ??" என சுற்றும்முற்றும் பார்த்தவாறு வியப்பாய் கேட்ட யஷியின் குரல் கிசுகிசுப்பாய் வெளிவந்தது மித்ரனின் அடக்கலில்.

அந்த இடத்தின் அமைதி மற்றும் அங்காங்கே இருந்த ஒரு சில முதியவர்களை கண்டு இதை ஓர் ஆசிரமம் என்று தான் அவள் எண்ணியிருந்தாள்.

அவளின் கிசுகிசுப்பான குரலில் நீண்ட நேரத்திற்கு பிறகு மெல்லியதாய் புன்னகைத்தது மித்ரனின் இதழ்கள்.

அந்நேரம் அவர்களின் முன்வந்து நின்றார் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்.
சந்தனநிற காட்டன் புடவையை நேர்த்தியாய் கட்டி, நிமிர்வுடன் இருந்தவரின் முகமோ.. அமைதியை காட்ட கூர்மையான கண்களோ எதிரிலிருப்பவரை ஆராய்ச்சியாய் பார்த்தது.

அவரை கண்டு இருவரும் எழுந்துகொள்ள ...மித்ரன், " ஹலோ மேடம் !! ஐயம் மித்ரன் , நேத்து ஈவினிங் கால் பண்ணிருந்தேனே".

"ஓ அந்த தம்பியா ...!! நீங்க '￰டாமினிய' பார்க்கணும்னு சொல்லிருந்திங்கல!! என்கூட வாங்க தம்பி நான் உங்கள கூட்டிட்டு போறேன் " என்றவர் அவனின் அருகில் நின்றிருந்த யஷியை சந்தேகமாய் பார்த்தார்.

அவரின் பார்வையை புரிந்துகொண்டவன் யஷியை தன் தோள்வளைவில் கொண்டுவந்து , "என்னை எந்த அளவுக்கு நீங்க நம்புறீங்களோ அதே அளவுக்கு இவளையும் நம்பலாம் மேடம் . நாங்க இரண்டு பேரும் வேற வேற இல்ல " என்றவனின் குரல் திடமாய் வெளிவந்தது.

அவனின் திடத்தில் மெலிதாய் சிரித்துக்கொண்டவர் தன்னை தொடருமாறு தலையசைத்த படி முன் சென்றார்.

மித்ரன் ஒருவித பதட்டத்துடன் அவரை தொடர , 'டாமினி' என்ற பெயரில் ஏதோ யோசனையில் நின்றிருந்த யஷியும் அவனின் கை இழுப்பிற்குச் சென்றாள்.

இறுதியில் இருவரும் ஒரு அறையில் நின்றிருந்தனர். இவ்வளவு நேரம் இல்லாத மருந்து நெடி நாசியை தீண்டிச் சென்றதில் தன் யோசனையை கலைந்த யஷி , அவ்வறையை ஆராய்ந்தாள்.

தற்பொழுது இது மருத்துவமனை தான் என ஒத்துக்கொள்ளும்படி அனைத்து மருத்துவ உபகாரணங்களுடன் இருந்தாலும், சன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு இருளில் மூழ்கியிருந்த அறை திகிலை மூட்டியது.

முன் நின்றிருந்த அப்பெண்மணி , "இங்க எப்பவும் இப்படித்தான் அவ முழிச்சிட்டிருக்கும்போது வெளிச்சத்தை பார்த்தா கூட கத்த ஆரம்பிச்சிடுவா. முதல்ல கத்த மட்ட ஆரம்பிக்கிறவ கொஞ்ச நேரத்துலயே இங்க இருக்க எல்லாத்தையும் எங்க மேல தூக்கி எறிய ஆரம்பிச்சதும் இல்லாம நாங்க தடுக்கிறதுக்காக அவ கிட்ட போனா கூட தன்னை தானே அழிச்சிக்க பார்த்தா ....அதுல இருந்து இவளோட அறை சன்னல் மூடப்பட்டு அறையை இருட்டா தான் வச்சிற்ப்போம்" என்று அவ்வறையின் இருளுக்கு நீண்டதாய் ஓர் விளக்கமளித்தார் .

பேசிகொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு அவ்வறையின் மின்விளக்கை அவர் எரியவிட ,

திடீரென வந்த வெளிச்சத்தில் ,"யாரை பற்றி பேசுகிறார் " என்ற கேள்வியுடன் நின்றிருந்த யஷி அவ்வெளிச்சம் கூசியதில் கண்களை கசக்கி கொள்ள, மித்ரனின் கை அவளின் மற்றொரு கையை இறுக்கமாய் பற்றியது .

அவனின் உள்ளங்கை வியர்த்திருக்க இறுக்கமாய் பற்றிருந்த கை நடுங்கியது.

அதில் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ தன் கண்களையும் இறுக்கமாய் மூடியிருந்தான். அவனின் இடது கண்
ஓரம் முத்தாய் ஓர் துளி பளபளக்க யஷியின் மற்றொரு கரம் தானாய் அதை துடைத்தது .

அப்படி என்ன நேர்ந்தது என்று அவள் முன்னால் பார்க்க, அங்கு கட்டிலில் ஒருவர் படுத்திருந்தார் .

சற்று முன்சென்று பார்க்க , பச்சை வண்ண போர்வை உடலை மறைத்திருக்க ....வெளியில் தெரிந்த இரண்டு கைகளிலும் ஆங்காங்கே ஊசி குத்திய தடயங்கள் மற்றும் சற்று பெரிதாய் கீறல்கள் போன்ற தழும்புகள் இருந்தது.

நிமிர்ந்து அவரின் முகம் பார்த்த யஷி அதிர்ந்து கண்களை இறுக்க மூடியபடி மித்ரனின் தோள்வளைவில் முகம் புதைத்தாள் .

முழுதாய் மொட்டை அடிக்கப்பட்டு ஒருபக்கம் முகம் தீயில் வெந்த தடயத்துடன் , உதடு பெயருக்காய் சிறிது ஒட்டியபடி இருக்க ஒரு கண் இருந்த இடத்தில் பஞ்சால் ஏதோ மருந்திட்டிருந்தனர் .

" மி...மித்...மித்ரா.!! யார் இது ?? என்னாச்சி இவங்களுக்கு ?"

"வெளிய போய் சொல்றேன்மா " என்று தன் கைவளைவிலே கூட்டிவந்தவன் வெளியில் நாற்காலியில் அவளை அமரவைத்துவிட்டு மீண்டும் உள்சென்று அவர்களை அழைத்து வந்தவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தான்.

தன் அருகில் வந்தவனை இறுக பற்றிக்கொண்ட யஷி, " சொல்லுடா யார் இது ?? என்னாச்சி அவங்களுக்கு ? உனக்கு எப்படி தெரியும் ?" என பதட்டத்துடன் அடுத்தடுத்து கேட்டாள்.

"என்னை அந்த வார்த்தை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சி யஷிமா....அந்த வார்த்தைல நம்ப தெரிஞ்சிக்க வேண்டிய ஏதோ ஓர் விஷயம் இருப்பதாய் என்னோட மனசு திரும்ப திரும்ப சொல்லுச்சு , அதும் அந்த குரல் உனக்கு " என ஆரம்பித்த மித்ரன் அக்குரலை பற்றி இப்பொழுது அவளிடம் சொல்ல விரும்பாமல் நிறுத்தினான்.

அவன் நிறுத்தியதில் யஷி கேள்வியாய் பார்க்க , தன் பேச்சை தொடர்ந்தவன்

" எனக்கென்னவோ அந்த வார்த்தையை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி நியாபகம் . அங்கிள்க்கு இத பத்தி தெரிஞ்சிருக்குமான்னு கேக்கத்தான் நான் காலையிலையே கிளம்பறதா இருந்தேன். ஆனா திடிர்னு என் ரூம்ல இருந்த உன்னோட போட்டோ காத்துல கீழ விழுந்திடுச்சு...அண்ட் அதுல தான் எனக்கான விடையும் இருந்திச்சி "

-என்றவன் அன்றைய நினைவில் அந்த படம் கீழே விழுந்ததுக்கும் தங்களை பின்தொடரும் காற்றின் உருவமே காரணம் என்பதை உணர்ந்திருந்தவன் , அது எங்க கிட்ட என்ன எதிர்பார்க்குது ?? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் .

அவன் சொல்வதை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்த யஷி , அவன் பாதியில் நிறுத்தி எதையோ யோசித்ததில் அவனின் தலையில் ஓங்கி தட்டி," ஒழுங்கா நிறுத்தாம முழுசா சொல்லுடா ".

" அந்த போட்டோல நீ ஒரு நியூஸ்பேப்பர் வச்சிஇருப்ப யஷிமா அது தான் ...அதுதான் எனக்கான தடயம் .ஆம் அதுலதான் இந்த வார்த்தை இருந்திச்சி.அந்த போட்டோவை அடிக்கடி பார்த்ததுல தான் அந்த வார்த்தையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துருக்கு. அந்த போட்டோ ஒருவருஷத்துக்கு முன்னாடி எடுத்தது தான . சோ நிச்சயம் எதுனா கண்டுபிடிக்கமுடியும் நினைச்சி
நான் அந்த பத்திரிக்கை அலுவகத்துக்கு நேத்து போனேன் யஷிமா .அங்க இருந்த மேலாளர் கிட்ட விசாரிச்சதுல தெரிஞ்சது , அந்த செய்தியை சேகரிச்சது சூர்யா -ன்ற பொண்ணுதான்னு " என்றவன் நேற்று தான் சென்ற இடத்தில் தெரிந்துகொண்ட அனைத்தையும் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.

ஓர் வருடம் முன்பு :

"சார் இங்க பாருங்க, நான் கண்டுபிடிச்ச எல்லா விஷயமும் உண்மை தானானு நூறு தடவைக்கு மேல உறுதிபடுத்திட்டு தான் இத எழுதினேன். இதுல இருக்குற ஒரு வார்த்தை ...ஒரு வார்த்தை பொய்னு நிரூபிக்க சொல்லுங்க.நான் எழுதுவது தவறானதுனு பகிரங்கமா மன்னிப்பு கேக்குறேன் " என்றபடி தன் கையிலிருந்த செய்தித்தாளை தனது மேலாளர் முன்வைத்தாள் சூர்யா.

தனது மூக்குக்கண்ணாடியை சரிசெய்துகொண்ட அம்மேலாளர் , "பாருமா சூர்யா..! எனக்கு உன்ன பத்தியும் தெரியும், ****கட்சிக்காரனுங்க பத்தியும் நல்லா தெரியும்.நான் முப்பது வருஷமா இந்த துறைல இருக்கேன்... நாங்க பத்திரிக்கை காரங்க அநியாயத்தை தட்டி கேட்போம்னுலாம் நம்பளால எதுவும் பண்ணமுடியாது . புரிஞ்சிக்கோமா இது தான் நிதர்சனம் " என்றவருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாததால் அவளின் கண்களை பார்க்காமல் அவள் தூக்கியெறிந்த செய்தித்தாளை பார்த்தபடி உரைத்தார் .

"எது சார் ?? எது சார் நிதர்சனம் ?? பொண்ணுங்கனா இவனுங்களுக்கு கிள்ளுக்கீரையா போயிடிச்சா . பொண்ணுங்கள தங்களோட தேவைய தீர்க்குற பொருளா பார்க்குர இந்த ****** பொறுக்கிங்களுக்கு தான் சார் அந்த கடவுள் கூட துணையா இருக்காரு . சின்னப்பொண்ணு சார் அந்த பவித்ரா .இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல அவளை போய் ..." முழுதாய் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு .

"சூர்யா...! ரிலாக்ஸ் ...எனக்கு உன்னோட கோபமும் ஆதங்கமும் புரிதுமா ஆனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது . உன்னால முடிஞ்ச காரியம் இத பத்தி வெக்கிகொண்டுவந்துட்ட ...இந்த விஷயம் சில பேருக்காவது போய்ச்சேர்ந்துர்க்கும் இனி அவனுங்க இப்படி பண்ண பயப்படுவாங்க.இதுவே உனக்கு கிடைச்ச வெற்றி தானமா".

அதற்க்குமேல் அவரிடம் வாதாட விரும்பாதவள் இவரால் வேறு என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில் இயலாமை பெருமூச்சை விட்டபடி வெளிவந்து தனக்குரிய இடத்தில் அமர்ந்தவள் முன்வந்தமர்ந்தான் ஹரிஷ் ."என்னாச்சி சூர்யா ! மேலாளர் என்ன சொன்னாரு இந்த விஷயத்துல அவரால எதுவும் பண்ணமுடியுமா ?" எனக் கெட்டவன் அவளின் இரண்டு வருட நண்பன் . இந்த பத்திரிகையில் சேர்ந்தநாள் முதல் ஆவலுடன் அனைத்திலும் உதவியாய் இருப்பவன் ...அவளின் நம்பிக்கைக்குரியவன்.

அவனின் கேள்விக்கு அவள் இடவலமாய் தலையசைக்க , அதில் அவளுடன் சேர்ந்து அவனின் முகமும் சோர்ந்தது .

என்ன செய்வது என தீவிரமாய் அவள் யோசிக்க ஆரம்பிக்க அதன் விளைவாய் அவளின் புருவங்கள் சுருங்க, அவளை பார்த்தவாரே இருந்த ஹரிஷ் , "என்ன யோசிக்கிற சூர்யா ?? எனக்கு தெரியும் இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ் ஆனது . ஆனா நம்மளால முடிஞ்சது இத இனிமே தொடராம தடுக்குறது . அத தான் நீ பண்ணிட்டியே ...உன்னாலதான் இப்போ அவன் கம்பி எண்ணிட்டிருக்கான் கூடிய சீக்கிரம் அவனுக்கு தண்டனையும் கிடைக்க போகுது .அப்றம் என்ன ?"

அவனின் கேள்வியில் அவனை ஆழ்ந்து பார்த்தவள் அவனின் மேல் இருந்த நம்பிக்கையில் ," ஹரிஷ் ....! நீ என்ன நினைச்ச ? இந்த பவித்ரா கேஸ்க்காக தான் நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்தேனா ? உனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு ஹரிஷ் . இதுல இப்போ கம்பி எண்ணிட்டிருக்கானே அவன் வெறும் அம்பு மட்டும் தான் அதும் நூத்து கணக்கான அம்புல ஒருத்தன் . இந்த ஒரு அம்பை உடைக்குறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை "

அவள் சொல்வதை புரியாத பாவனையுடன் ஹரிஷ் பார்க்க , தனது மேஜை அலமாரியை திறந்தவள் அதில் அவள் சேமித்து வைத்திருந்த குறிப்பை எடுத்து அவன் முன் போட்டாள்.

தான் தெரிந்துகொண்டதை யஷியிடம் சொல்லிக்கொண்டிருந்த மித்ரனின் பேச்சை தடை செய்தது அவனிற்கு வந்த கைப்பேசி அழைப்பு .

"கதிரேசன்னா தான் கூப்புட்றாரு .." என்றபடி அழைப்பை ஏற்றவன் அப்பக்கம் சொன்னதை கேட்டதில் அதிர்ந்தான் .

அவன் கைபேசியை அணைக்க , "என்னடா நம்ப அவர்கிட்ட சொல்லாமலே கிளம்பி வந்துட்டோமே அத கேக்குறதுக்காக கூப்பிட்டாரா ?ஆனா அதுக்கு ஏன்டா நீ இப்டி முழிக்குற?" என தொடர் கேள்வியில் அவனை மூழ்கடித்தாள்.

"பாப்பா ...நம்ப இருக்க ஊர் எல்லைல ரெண்டு பேரோட சடலம் போலீஸ் கண்டுபிடிச்சிருகாங்க...அண்ட் அது சம்பந்தமா ஊர்ல இருக்க எல்லோரையும் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு " என்றவனின் மேனியை சில்லென்ற காற்று தழுவிச்செல்ல , காதோரமாய் சன்னமான சிரிப்பொலி கேட்டது .

"அதுசரி..! ஏற்கனவே ரெண்டு கொலை நடந்த ஊர் தான இது . நீ அந்த சூர்யா பத்தி சொல்லுடா "

அக்குரலின் சிரிப்பொழியில் இந்த சடலங்களுக்கும் இந்த குரலுக்கும் சம்பந்தம் இருக்குமா என்பது போல் யோசித்தவன் , யஷியின் பேச்சில்.."ஷிட்! இத எப்படி மறந்தேன் மத்தத போல அந்த ரெண்டும் யஷி சொன்னமாதிரி ஏன் கொலையா இருக்க கூடாது . தென் இந்த குரல் இது ...." என பலவாறு யோசித்தவன் பேசிக்கொண்டிருந்த யஷியின் கைகளை பிடித்து இழுத்தபடி தாங்கள் வந்த காருக்கு கூட்டிச்சென்றான் .

"டேய் ....எங்கடா போற??அந்த சூர்யா என்னடா ஆனா ?? பவித்ரா கேஸ்னு எதோ சொன்னியே முழுசா சொல்லுடா இடியட்" என கத்த ,

"அப்ப்பா....கொஞ்சம் வாய மூட்றி...நம்ப இப்போ கிளம்பியாகணும் .நீ வண்டில ஏறு மீதிய வழில சொல்றேன்"என அதட்டி அவளை அங்கிருந்து கிளப்பினான் .

--------------------------------------------------------------------------------

சின்னம்பாளையம் :

"பாஸ்.... நம்ப அஸ்வந்த்தும் , ஹரியும் ரெண்டுநாளா காணோம் பாஸ் " என்ற ஜான் பாஸ் என்றழைக்கப்பட்டவனின் பார்வையில் ,

"எனக்கு இந்த விஷயம் நேத்து நம்ப இங்க வந்ததுக்கு அப்றம் தான் பாஸ் தெரிஞ்சிது . நான் அத வழக்கம் போல தான் நினைச்சேன் ஆனா...ஆனா" எனத் தயங்கியவன் ,

"இந்த ஊர் எல்லைல ரெண்டு சடலத்தை போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க பாஸ் அதுவும் நம்மளுக்கு சொந்தமான இடத்துல . அந்த இடம் நம்ப இரண்டு பேர தவிர அவங்களுக்கு மட்டும் தான தெரியும் " மூச்சுவிடாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒப்புவித்த ஜானின் கன்னம் சுளீரென்றது எதிரிலிருந்தவனின் கைவீச்சில் .

"யூ...***************" வாயில் வந்த கேவலமான வார்த்தைகளில் திட்டியவன்,

"யாருனே தெரியாத ஒருத்தன் நம்பாளுங்க ஒவ்வொருத்தரா கொன்னுட்டு இருக்கான். என்னோட கணக்குபடி பார்த்தா அவன் நம்மளோட இந்த தொழில்ல இருக்குறவங்கள தான் தூக்குறன்னு நான் இங்க வருவதற்கு முன்னாடியே நீ எனக்கு குடுத்த குறிப்பை வச்சி கண்டுபிடிச்சி உன்கிட்ட சொன்னேன் தானே??"

ஜான் பதில் சொல்லமுடியாமல் தலை குனிய ,

"ஷிட்....!! அப்படி இருந்தும் இத எப்படி நீ சாதாரணமா விட்ட ஜான் ....உனக்குதெரியும்ல யஸ்வந்த்தும் , ஹரியும் தான் நம்பளோட இந்த தொழிலுக்கு ஆணிவேர்னு " , அவனால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போக குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ,

"ஜான் ...!கமான் , வண்டிய எடு அந்த இடத்துக்கு போலாம் ...நான் பாக்கணும் " என்றான்￰.

"பாஸ் ...! அங்க நிறைய போலீஸ் இருப்பாங்க பாஸ்...இப்போ அது நம்ப இடம்னு தெரிஞ்சா ரிஸ்க் " என்ற ஜான் எதிரிலிருந்தவனின் தீப் பார்வையில் அடுத்த இரண்டு நிமிடத்தில் வண்டியை கிளப்பி இருந்தான்.

---------------------------------------------------------------------------------

சந்திரமதியின் காடு :

"ம்ம்க்கும்....என்னாச்சி ஏன் ஒரு மாத இருக்கீங்க ??" என நீண்ட நேரமாய் அமைதியாய் முகம் சுருங்கியபடி இருந்த சந்திராதித்யனிடம் கேட்டாள் அனகா.

சந்திரன் வானில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்க அவ்வறையின் சன்னலின் வழியே உள்நுழைந்த நிலவொளி அவள் மேனியை தீண்ட, இயற்கையான அழகில் மிளிர்ந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான் சந்திராதித்யன்.

நிலவொளி அவனை தீண்டாமல் இருக்க அங்கிருந்து தள்ளி அமர்ந்திருந்தவனின் கண்கள் இத்தனை நேரம் இருந்த தவிப்பை எல்லாம் மறந்து அவளை நிதானமாய் ஆராய்ந்தது.

அவனின் தவிப்பை அறிந்துகொள்ள கேட்டவள் அவளின் மனம் கவர்ந்தவனின் இந்த ஆராய்ச்சி பார்வையில் , தானாய் உடல் நடுங்க கன்னம் சிவந்தாள் .

அவளின் கன்னசிவப்பு நிலவொளியில் அவனுக்கு தெளிவாய் தெரிய தனக்குள் அவள் மேல் தோன்றும் விருப்பத்திற்க்கு எதிரொலி அவளிடம் இருப்பதில் அவனின் உள்ளம் குத்தாட்டம் போட்டது .

சிறிது நேரம் அவளின் கன்னசிவப்பை ரசித்தவனுக்கு திடீரென ஓர் கேள்வி தோன்றியதில் அவன் கண்களின் ரசிப்பு நீங்கி சந்தேகம் தொக்கியது.

"அனகா ...! இங்கு வருவதற்கு முன்பே அதாவது மயங்கிருந்த உன்னை நான் கண்டுகொள்ளும் முன்பே நீ என்னை அறிவாயா ???" எனக் கேட்டான்.

அத்தனை நேரம் அவனின் ரசிக்கும் பார்வையில் உருகிக்கொண்டிருந்த அனகா, இக்கேள்வியில் அவன் தன்னை கண்டுகொண்டானோ ?? என அதிர்ந்து விழித்தாள் .

சந்திராதித்யனோ அவளின் பதிலுக்காய் தடதடக்கும் தன் இதயத்தை தடவியபடி அவளின் முகபாவங்களை படிக்க முற்பட்டான் .

-காதலாகும் .......
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
காதலாய் அணைக்கும் கரங்களுக்குள் சிறுபறவையாய் தன்னை ஒப்புவிக்கும் பெண்ணவள்...!
மாகாளியாய் மாறி
அக்னிஜுவாலையை கக்குவாள் ...
தன்னிடம் காமம் கொண்டு நெருங்குபவர்கள் மேல்..!!

அத்தியாயம் 9:

"டேய் மித்ரா ..! என்னதான்டா ஆச்சி உனக்கு ?? நேத்து நைட் என்னனா லாரில அடிப்பட்டவன் மாதிரியே வந்து நின்ன....காலையில பேய பார்த்த மாதிரி கத்தி எழுப்பிவிட்டுட்ட...இப்போ என்னனா என்ன இடம்னு கூட சொல்லாம இங்க கூட்டிட்டு வந்து உட்காரவைச்சிருக்க ..என்னதான்டா எரும ஆச்சி உனக்கு ??" - என்று யஷி தன் அருகில் ஏதோ யோசனையில் புருவம் சுருங்க அமர்ந்திருந்த மித்ரனிடம் கேட்டாள்.

￰காலையிலிருந்து எதுவும் பேசாமல் உம்மென்று இருக்கும் இந்த மித்ரன் யஷிக்கு புதியது . எப்பவும் இருவரும் ஒன்றாய் இருந்தால் அங்கு அமைதி என்பதர்க்கே இடம் இல்லாமல் போகும் . அப்படி இருக்கையில் மித்ரனின் இவ்வமைதி அவளை பயம் கொள்ள செய்தது . அதிலும் நேற்று அவன் இருந்த நிலை...எப்பொழுதும் தாயாய் அவளை மடிசாய்ப்பவன் நேற்று சேயாய் மடிசாய்ந்திருந்தானே .

அவனின் நிலை மாற்ற காலை முதல் யஷி ஏதேதோ பேச முயற்சிக்க விடையாய் கிடைத்ததோ அவனின் மௌனம் மட்டுமே . இதோ இருவரும் தற்பொழுது அவ்வூரிலிருந்து பல மைல் தூரங்களை கடந்து இந்த கட்டிடத்தின் வரவேற்பறை போன்ற இடத்தில் அமர்ந்திருக்கும் வரையிலும் அவனின் அவ்வமைதி தொடர்கிறது .

மித்ரனோ அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் , " யஷிமா ...! இது ஹாஸ்பிடல் கொஞ்சம் மெதுவா பேசுடா " என அடக்கினான் .

"என்னது ஹாஸ்பிடலா ??" என சுற்றும்முற்றும் பார்த்தவாறு வியப்பாய் கேட்ட யஷியின் குரல் கிசுகிசுப்பாய் வெளிவந்தது மித்ரனின் அடக்கலில்.

அந்த இடத்தின் அமைதி மற்றும் அங்காங்கே இருந்த ஒரு சில முதியவர்களை கண்டு இதை ஓர் ஆசிரமம் என்று தான் அவள் எண்ணியிருந்தாள்.

அவளின் கிசுகிசுப்பான குரலில் நீண்ட நேரத்திற்கு பிறகு மெல்லியதாய் புன்னகைத்தது மித்ரனின் இதழ்கள்.

அந்நேரம் அவர்களின் முன்வந்து நின்றார் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்.
சந்தனநிற காட்டன் புடவையை நேர்த்தியாய் கட்டி, நிமிர்வுடன் இருந்தவரின் முகமோ.. அமைதியை காட்ட கூர்மையான கண்களோ எதிரிலிருப்பவரை ஆராய்ச்சியாய் பார்த்தது.

அவரை கண்டு இருவரும் எழுந்துகொள்ள ...மித்ரன், " ஹலோ மேடம் !! ஐயம் மித்ரன் , நேத்து ஈவினிங் கால் பண்ணிருந்தேனே".

"ஓ அந்த தம்பியா ...!! நீங்க '￰டாமினிய' பார்க்கணும்னு சொல்லிருந்திங்கல!! என்கூட வாங்க தம்பி நான் உங்கள கூட்டிட்டு போறேன் " என்றவர் அவனின் அருகில் நின்றிருந்த யஷியை சந்தேகமாய் பார்த்தார்.

அவரின் பார்வையை புரிந்துகொண்டவன் யஷியை தன் தோள்வளைவில் கொண்டுவந்து , "என்னை எந்த அளவுக்கு நீங்க நம்புறீங்களோ அதே அளவுக்கு இவளையும் நம்பலாம் மேடம் . நாங்க இரண்டு பேரும் வேற வேற இல்ல " என்றவனின் குரல் திடமாய் வெளிவந்தது.

அவனின் திடத்தில் மெலிதாய் சிரித்துக்கொண்டவர் தன்னை தொடருமாறு தலையசைத்த படி முன் சென்றார்.

மித்ரன் ஒருவித பதட்டத்துடன் அவரை தொடர , 'டாமினி' என்ற பெயரில் ஏதோ யோசனையில் நின்றிருந்த யஷியும் அவனின் கை இழுப்பிற்குச் சென்றாள்.

இறுதியில் இருவரும் ஒரு அறையில் நின்றிருந்தனர். இவ்வளவு நேரம் இல்லாத மருந்து நெடி நாசியை தீண்டிச் சென்றதில் தன் யோசனையை கலைந்த யஷி , அவ்வறையை ஆராய்ந்தாள்.

தற்பொழுது இது மருத்துவமனை தான் என ஒத்துக்கொள்ளும்படி அனைத்து மருத்துவ உபகாரணங்களுடன் இருந்தாலும், சன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு இருளில் மூழ்கியிருந்த அறை திகிலை மூட்டியது.

முன் நின்றிருந்த அப்பெண்மணி , "இங்க எப்பவும் இப்படித்தான் அவ முழிச்சிட்டிருக்கும்போது வெளிச்சத்தை பார்த்தா கூட கத்த ஆரம்பிச்சிடுவா. முதல்ல கத்த மட்ட ஆரம்பிக்கிறவ கொஞ்ச நேரத்துலயே இங்க இருக்க எல்லாத்தையும் எங்க மேல தூக்கி எறிய ஆரம்பிச்சதும் இல்லாம நாங்க தடுக்கிறதுக்காக அவ கிட்ட போனா கூட தன்னை தானே அழிச்சிக்க பார்த்தா ....அதுல இருந்து இவளோட அறை சன்னல் மூடப்பட்டு அறையை இருட்டா தான் வச்சிற்ப்போம்" என்று அவ்வறையின் இருளுக்கு நீண்டதாய் ஓர் விளக்கமளித்தார் .

பேசிகொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு அவ்வறையின் மின்விளக்கை அவர் எரியவிட ,

திடீரென வந்த வெளிச்சத்தில் ,"யாரை பற்றி பேசுகிறார் " என்ற கேள்வியுடன் நின்றிருந்த யஷி அவ்வெளிச்சம் கூசியதில் கண்களை கசக்கி கொள்ள, மித்ரனின் கை அவளின் மற்றொரு கையை இறுக்கமாய் பற்றியது .

அவனின் உள்ளங்கை வியர்த்திருக்க இறுக்கமாய் பற்றிருந்த கை நடுங்கியது.

அதில் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ தன் கண்களையும் இறுக்கமாய் மூடியிருந்தான். அவனின் இடது கண்
ஓரம் முத்தாய் ஓர் துளி பளபளக்க யஷியின் மற்றொரு கரம் தானாய் அதை துடைத்தது .

அப்படி என்ன நேர்ந்தது என்று அவள் முன்னால் பார்க்க, அங்கு கட்டிலில் ஒருவர் படுத்திருந்தார் .

சற்று முன்சென்று பார்க்க , பச்சை வண்ண போர்வை உடலை மறைத்திருக்க ....வெளியில் தெரிந்த இரண்டு கைகளிலும் ஆங்காங்கே ஊசி குத்திய தடயங்கள் மற்றும் சற்று பெரிதாய் கீறல்கள் போன்ற தழும்புகள் இருந்தது.

நிமிர்ந்து அவரின் முகம் பார்த்த யஷி அதிர்ந்து கண்களை இறுக்க மூடியபடி மித்ரனின் தோள்வளைவில் முகம் புதைத்தாள் .

முழுதாய் மொட்டை அடிக்கப்பட்டு ஒருபக்கம் முகம் தீயில் வெந்த தடயத்துடன் , உதடு பெயருக்காய் சிறிது ஒட்டியபடி இருக்க ஒரு கண் இருந்த இடத்தில் பஞ்சால் ஏதோ மருந்திட்டிருந்தனர் .

" மி...மித்...மித்ரா.!! யார் இது ?? என்னாச்சி இவங்களுக்கு ?"

"வெளிய போய் சொல்றேன்மா " என்று தன் கைவளைவிலே கூட்டிவந்தவன் வெளியில் நாற்காலியில் அவளை அமரவைத்துவிட்டு மீண்டும் உள்சென்று அவர்களை அழைத்து வந்தவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தான்.

தன் அருகில் வந்தவனை இறுக பற்றிக்கொண்ட யஷி, " சொல்லுடா யார் இது ?? என்னாச்சி அவங்களுக்கு ? உனக்கு எப்படி தெரியும் ?" என பதட்டத்துடன் அடுத்தடுத்து கேட்டாள்.

"என்னை அந்த வார்த்தை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சி யஷிமா....அந்த வார்த்தைல நம்ப தெரிஞ்சிக்க வேண்டிய ஏதோ ஓர் விஷயம் இருப்பதாய் என்னோட மனசு திரும்ப திரும்ப சொல்லுச்சு , அதும் அந்த குரல் உனக்கு " என ஆரம்பித்த மித்ரன் அக்குரலை பற்றி இப்பொழுது அவளிடம் சொல்ல விரும்பாமல் நிறுத்தினான்.

அவன் நிறுத்தியதில் யஷி கேள்வியாய் பார்க்க , தன் பேச்சை தொடர்ந்தவன்

" எனக்கென்னவோ அந்த வார்த்தையை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி நியாபகம் . அங்கிள்க்கு இத பத்தி தெரிஞ்சிருக்குமான்னு கேக்கத்தான் நான் காலையிலையே கிளம்பறதா இருந்தேன். ஆனா திடிர்னு என் ரூம்ல இருந்த உன்னோட போட்டோ காத்துல கீழ விழுந்திடுச்சு...அண்ட் அதுல தான் எனக்கான விடையும் இருந்திச்சி "

-என்றவன் அன்றைய நினைவில் அந்த படம் கீழே விழுந்ததுக்கும் தங்களை பின்தொடரும் காற்றின் உருவமே காரணம் என்பதை உணர்ந்திருந்தவன் , அது எங்க கிட்ட என்ன எதிர்பார்க்குது ?? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் .

அவன் சொல்வதை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்த யஷி , அவன் பாதியில் நிறுத்தி எதையோ யோசித்ததில் அவனின் தலையில் ஓங்கி தட்டி," ஒழுங்கா நிறுத்தாம முழுசா சொல்லுடா ".

" அந்த போட்டோல நீ ஒரு நியூஸ்பேப்பர் வச்சிஇருப்ப யஷிமா அது தான் ...அதுதான் எனக்கான தடயம் .ஆம் அதுலதான் இந்த வார்த்தை இருந்திச்சி.அந்த போட்டோவை அடிக்கடி பார்த்ததுல தான் அந்த வார்த்தையை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துருக்கு. அந்த போட்டோ ஒருவருஷத்துக்கு முன்னாடி எடுத்தது தான . சோ நிச்சயம் எதுனா கண்டுபிடிக்கமுடியும் நினைச்சி
நான் அந்த பத்திரிக்கை அலுவகத்துக்கு நேத்து போனேன் யஷிமா .அங்க இருந்த மேலாளர் கிட்ட விசாரிச்சதுல தெரிஞ்சது , அந்த செய்தியை சேகரிச்சது சூர்யா -ன்ற பொண்ணுதான்னு " என்றவன் நேற்று தான் சென்ற இடத்தில் தெரிந்துகொண்ட அனைத்தையும் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.

ஓர் வருடம் முன்பு :

"சார் இங்க பாருங்க, நான் கண்டுபிடிச்ச எல்லா விஷயமும் உண்மை தானானு நூறு தடவைக்கு மேல உறுதிபடுத்திட்டு தான் இத எழுதினேன். இதுல இருக்குற ஒரு வார்த்தை ...ஒரு வார்த்தை பொய்னு நிரூபிக்க சொல்லுங்க.நான் எழுதுவது தவறானதுனு பகிரங்கமா மன்னிப்பு கேக்குறேன் " என்றபடி தன் கையிலிருந்த செய்தித்தாளை தனது மேலாளர் முன்வைத்தாள் சூர்யா.

தனது மூக்குக்கண்ணாடியை சரிசெய்துகொண்ட அம்மேலாளர் , "பாருமா சூர்யா..! எனக்கு உன்ன பத்தியும் தெரியும், ****கட்சிக்காரனுங்க பத்தியும் நல்லா தெரியும்.நான் முப்பது வருஷமா இந்த துறைல இருக்கேன்... நாங்க பத்திரிக்கை காரங்க அநியாயத்தை தட்டி கேட்போம்னுலாம் நம்பளால எதுவும் பண்ணமுடியாது . புரிஞ்சிக்கோமா இது தான் நிதர்சனம் " என்றவருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாததால் அவளின் கண்களை பார்க்காமல் அவள் தூக்கியெறிந்த செய்தித்தாளை பார்த்தபடி உரைத்தார் .

"எது சார் ?? எது சார் நிதர்சனம் ?? பொண்ணுங்கனா இவனுங்களுக்கு கிள்ளுக்கீரையா போயிடிச்சா . பொண்ணுங்கள தங்களோட தேவைய தீர்க்குற பொருளா பார்க்குர இந்த ****** பொறுக்கிங்களுக்கு தான் சார் அந்த கடவுள் கூட துணையா இருக்காரு . சின்னப்பொண்ணு சார் அந்த பவித்ரா .இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல அவளை போய் ..." முழுதாய் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு .

"சூர்யா...! ரிலாக்ஸ் ...எனக்கு உன்னோட கோபமும் ஆதங்கமும் புரிதுமா ஆனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது . உன்னால முடிஞ்ச காரியம் இத பத்தி வெக்கிகொண்டுவந்துட்ட ...இந்த விஷயம் சில பேருக்காவது போய்ச்சேர்ந்துர்க்கும் இனி அவனுங்க இப்படி பண்ண பயப்படுவாங்க.இதுவே உனக்கு கிடைச்ச வெற்றி தானமா".

அதற்க்குமேல் அவரிடம் வாதாட விரும்பாதவள் இவரால் வேறு என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில் இயலாமை பெருமூச்சை விட்டபடி வெளிவந்து தனக்குரிய இடத்தில் அமர்ந்தவள் முன்வந்தமர்ந்தான் ஹரிஷ் ."என்னாச்சி சூர்யா ! மேலாளர் என்ன சொன்னாரு இந்த விஷயத்துல அவரால எதுவும் பண்ணமுடியுமா ?" எனக் கெட்டவன் அவளின் இரண்டு வருட நண்பன் . இந்த பத்திரிகையில் சேர்ந்தநாள் முதல் ஆவலுடன் அனைத்திலும் உதவியாய் இருப்பவன் ...அவளின் நம்பிக்கைக்குரியவன்.

அவனின் கேள்விக்கு அவள் இடவலமாய் தலையசைக்க , அதில் அவளுடன் சேர்ந்து அவனின் முகமும் சோர்ந்தது .

என்ன செய்வது என தீவிரமாய் அவள் யோசிக்க ஆரம்பிக்க அதன் விளைவாய் அவளின் புருவங்கள் சுருங்க, அவளை பார்த்தவாரே இருந்த ஹரிஷ் , "என்ன யோசிக்கிற சூர்யா ?? எனக்கு தெரியும் இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ் ஆனது . ஆனா நம்மளால முடிஞ்சது இத இனிமே தொடராம தடுக்குறது . அத தான் நீ பண்ணிட்டியே ...உன்னாலதான் இப்போ அவன் கம்பி எண்ணிட்டிருக்கான் கூடிய சீக்கிரம் அவனுக்கு தண்டனையும் கிடைக்க போகுது .அப்றம் என்ன ?"

அவனின் கேள்வியில் அவனை ஆழ்ந்து பார்த்தவள் அவனின் மேல் இருந்த நம்பிக்கையில் ," ஹரிஷ் ....! நீ என்ன நினைச்ச ? இந்த பவித்ரா கேஸ்க்காக தான் நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்தேனா ? உனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு ஹரிஷ் . இதுல இப்போ கம்பி எண்ணிட்டிருக்கானே அவன் வெறும் அம்பு மட்டும் தான் அதும் நூத்து கணக்கான அம்புல ஒருத்தன் . இந்த ஒரு அம்பை உடைக்குறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை "

அவள் சொல்வதை புரியாத பாவனையுடன் ஹரிஷ் பார்க்க , தனது மேஜை அலமாரியை திறந்தவள் அதில் அவள் சேமித்து வைத்திருந்த குறிப்பை எடுத்து அவன் முன் போட்டாள்.

தான் தெரிந்துகொண்டதை யஷியிடம் சொல்லிக்கொண்டிருந்த மித்ரனின் பேச்சை தடை செய்தது அவனிற்கு வந்த கைப்பேசி அழைப்பு .

"கதிரேசன்னா தான் கூப்புட்றாரு .." என்றபடி அழைப்பை ஏற்றவன் அப்பக்கம் சொன்னதை கேட்டதில் அதிர்ந்தான் .

அவன் கைபேசியை அணைக்க , "என்னடா நம்ப அவர்கிட்ட சொல்லாமலே கிளம்பி வந்துட்டோமே அத கேக்குறதுக்காக கூப்பிட்டாரா ?ஆனா அதுக்கு ஏன்டா நீ இப்டி முழிக்குற?" என தொடர் கேள்வியில் அவனை மூழ்கடித்தாள்.

"பாப்பா ...நம்ப இருக்க ஊர் எல்லைல ரெண்டு பேரோட சடலம் போலீஸ் கண்டுபிடிச்சிருகாங்க...அண்ட் அது சம்பந்தமா ஊர்ல இருக்க எல்லோரையும் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு " என்றவனின் மேனியை சில்லென்ற காற்று தழுவிச்செல்ல , காதோரமாய் சன்னமான சிரிப்பொலி கேட்டது .

"அதுசரி..! ஏற்கனவே ரெண்டு கொலை நடந்த ஊர் தான இது . நீ அந்த சூர்யா பத்தி சொல்லுடா "

அக்குரலின் சிரிப்பொழியில் இந்த சடலங்களுக்கும் இந்த குரலுக்கும் சம்பந்தம் இருக்குமா என்பது போல் யோசித்தவன் , யஷியின் பேச்சில்.."ஷிட்! இத எப்படி மறந்தேன் மத்தத போல அந்த ரெண்டும் யஷி சொன்னமாதிரி ஏன் கொலையா இருக்க கூடாது . தென் இந்த குரல் இது ...." என பலவாறு யோசித்தவன் பேசிக்கொண்டிருந்த யஷியின் கைகளை பிடித்து இழுத்தபடி தாங்கள் வந்த காருக்கு கூட்டிச்சென்றான் .

"டேய் ....எங்கடா போற??அந்த சூர்யா என்னடா ஆனா ?? பவித்ரா கேஸ்னு எதோ சொன்னியே முழுசா சொல்லுடா இடியட்" என கத்த ,

"அப்ப்பா....கொஞ்சம் வாய மூட்றி...நம்ப இப்போ கிளம்பியாகணும் .நீ வண்டில ஏறு மீதிய வழில சொல்றேன்"என அதட்டி அவளை அங்கிருந்து கிளப்பினான் .

--------------------------------------------------------------------------------

சின்னம்பாளையம் :

"பாஸ்.... நம்ப அஸ்வந்த்தும் , ஹரியும் ரெண்டுநாளா காணோம் பாஸ் " என்ற ஜான் பாஸ் என்றழைக்கப்பட்டவனின் பார்வையில் ,

"எனக்கு இந்த விஷயம் நேத்து நம்ப இங்க வந்ததுக்கு அப்றம் தான் பாஸ் தெரிஞ்சிது . நான் அத வழக்கம் போல தான் நினைச்சேன் ஆனா...ஆனா" எனத் தயங்கியவன் ,

"இந்த ஊர் எல்லைல ரெண்டு சடலத்தை போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க பாஸ் அதுவும் நம்மளுக்கு சொந்தமான இடத்துல . அந்த இடம் நம்ப இரண்டு பேர தவிர அவங்களுக்கு மட்டும் தான தெரியும் " மூச்சுவிடாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒப்புவித்த ஜானின் கன்னம் சுளீரென்றது எதிரிலிருந்தவனின் கைவீச்சில் .

"யூ...***************" வாயில் வந்த கேவலமான வார்த்தைகளில் திட்டியவன்,

"யாருனே தெரியாத ஒருத்தன் நம்பாளுங்க ஒவ்வொருத்தரா கொன்னுட்டு இருக்கான். என்னோட கணக்குபடி பார்த்தா அவன் நம்மளோட இந்த தொழில்ல இருக்குறவங்கள தான் தூக்குறன்னு நான் இங்க வருவதற்கு முன்னாடியே நீ எனக்கு குடுத்த குறிப்பை வச்சி கண்டுபிடிச்சி உன்கிட்ட சொன்னேன் தானே??"

ஜான் பதில் சொல்லமுடியாமல் தலை குனிய ,

"ஷிட்....!! அப்படி இருந்தும் இத எப்படி நீ சாதாரணமா விட்ட ஜான் ....உனக்குதெரியும்ல யஸ்வந்த்தும் , ஹரியும் தான் நம்பளோட இந்த தொழிலுக்கு ஆணிவேர்னு " , அவனால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போக குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ,

"ஜான் ...!கமான் , வண்டிய எடு அந்த இடத்துக்கு போலாம் ...நான் பாக்கணும் " என்றான்￰.

"பாஸ் ...! அங்க நிறைய போலீஸ் இருப்பாங்க பாஸ்...இப்போ அது நம்ப இடம்னு தெரிஞ்சா ரிஸ்க் " என்ற ஜான் எதிரிலிருந்தவனின் தீப் பார்வையில் அடுத்த இரண்டு நிமிடத்தில் வண்டியை கிளப்பி இருந்தான்.

---------------------------------------------------------------------------------

சந்திரமதியின் காடு :

"ம்ம்க்கும்....என்னாச்சி ஏன் ஒரு மாத இருக்கீங்க ??" என நீண்ட நேரமாய் அமைதியாய் முகம் சுருங்கியபடி இருந்த சந்திராதித்யனிடம் கேட்டாள் அனகா.

சந்திரன் வானில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்க அவ்வறையின் சன்னலின் வழியே உள்நுழைந்த நிலவொளி அவள் மேனியை தீண்ட, இயற்கையான அழகில் மிளிர்ந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான் சந்திராதித்யன்.

நிலவொளி அவனை தீண்டாமல் இருக்க அங்கிருந்து தள்ளி அமர்ந்திருந்தவனின் கண்கள் இத்தனை நேரம் இருந்த தவிப்பை எல்லாம் மறந்து அவளை நிதானமாய் ஆராய்ந்தது.

அவனின் தவிப்பை அறிந்துகொள்ள கேட்டவள் அவளின் மனம் கவர்ந்தவனின் இந்த ஆராய்ச்சி பார்வையில் , தானாய் உடல் நடுங்க கன்னம் சிவந்தாள் .

அவளின் கன்னசிவப்பு நிலவொளியில் அவனுக்கு தெளிவாய் தெரிய தனக்குள் அவள் மேல் தோன்றும் விருப்பத்திற்க்கு எதிரொலி அவளிடம் இருப்பதில் அவனின் உள்ளம் குத்தாட்டம் போட்டது .

சிறிது நேரம் அவளின் கன்னசிவப்பை ரசித்தவனுக்கு திடீரென ஓர் கேள்வி தோன்றியதில் அவன் கண்களின் ரசிப்பு நீங்கி சந்தேகம் தொக்கியது.

"அனகா ...! இங்கு வருவதற்கு முன்பே அதாவது மயங்கிருந்த உன்னை நான் கண்டுகொள்ளும் முன்பே நீ என்னை அறிவாயா ???" எனக் கேட்டான்.

அத்தனை நேரம் அவனின் ரசிக்கும் பார்வையில் உருகிக்கொண்டிருந்த அனகா, இக்கேள்வியில் அவன் தன்னை கண்டுகொண்டானோ ?? என அதிர்ந்து விழித்தாள் .

சந்திராதித்யனோ அவளின் பதிலுக்காய் தடதடக்கும் தன் இதயத்தை தடவியபடி அவளின் முகபாவங்களை படிக்க முற்பட்டான் .

-காதலாகும் .......
Nice EP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top