tnx dear super sonneengaசூப்பர். தெம்பிளி (கிங் கோகனட்) சிங்களச் சொல் சரி தானே. கூகிளில் பார்த்தேன் அது செவ்விளநீர் தானே. இதுக்குக் கண்டிப்பாக முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும். சிங்களவர்கள் தேங்காய் எண்ணெய் தானே தலைக்குப் பாவிப்பார்கள். மலையாள மக்களும் அப்படித் தான் என்று நினைக்கின்றேன். நாங்களும் தேங்காய் எண்ணெய் பாவிக்கின்றோம் முன்பு அம்மா சாதாரண தேங்காயில் தான் எண்ணெய் காய்ச்சியிருக்கிறா. பிறகு கடையி வாங்குவது சரியில்லை இங்கு அதுக்கு டிமான்ட் அதிகம் விலையும் கூட. நாங்கள் முன்பு தலைக்குத் தேங்காய் எண்ணெய், செவ்வரத்தம்(செம்பருத்தி) இலைச் சாற்றுடன் முட்டை வெள்ளைக்கரு கலந்து தலைக்கு வைக்கிறது. தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடி கறுப்பாகவும் ,நீளமாகவும் இருந்தது. புரட்டாசி சனி என்றால் நல்லெண்ணெய் அரப்புக் குளியல், சீகாக்காய்க் குளியல் என்று இருந்தோம் எப்போ இந்தக் கிரகம் பிடிச்ச ஷம்போ வந்துதோ ஸ்கூலுக்கோ, டியூசனுக்கோ, கோவிலுக்கோ நேரம் போயிடும் என்று அதைத்தூக்கி வைக்கிறது. பிறகு இங்கும் வந்து அதே கிரகம் தான் இப்போ தலைமுடி எலிவாலா இருக்கு. வெள்ளைக்காரன்தான் தான் தேங்காயையும், தேங்கா எண்ணெயயும் தான் கண்டுபிடிச்ச மாதிரிக் கூவிக்கூவி அறா
விலைக்கு விற்கிறான்.
View attachment 3973View attachment 3974
yes sinhala sol thaan.