மழைக்காலை
தேகம் தீண்டும் தென்றல்
மேகம் மறைக்கும் கதிர்கள்
குளிரால் வந்த சிலிர்ப்பு
கண் முன்னே வானவில்
இன்னும் இன்னும்
இயற்கையை ரசித்திட
தூண்டுதே
கண்ட காட்சி எல்லாம்
மரத்தில்
மறைந்திருக்கும்
மழைத்துளியே
மண்ணில் விழும்
முன்
உன் மாயவலையில்
என்னைப்பிணைத்தாயே
கனியிவள்
இவள் மேல்
காதல் கொண்டாயோ?