மண்ணில் தோன்றிய வைரம் 33

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று பெஸ்ட ஆப்ஷன் கன்ஸ்ரக்ஷனால் மருத்துவ முகாம் ஒன்று கம்பனி ஊழியர்களுக்கும் கண்ஸ்ரக்ஷன் சைட்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது....
அதிக நிதி புழக்கம் உள்ள நிறுவனங்கள் வரி கட்டணத்தில் சிறிதளவு கழிவினை பெறுவதற்கும் தங்கள் நிறுவனத்தின் நற்பெயரினை மேம்பெறச்செய்து தங்களது மார்க்கட் சாரினினை அதிகரிப்பதற்காகவும் சி.எஸ்.ஆர்(கார்ப்பரேட் சோர்ஷல் ரெஸ்பான்சிபிலிட்டி) செயற்திட்டங்களில் ஈடுபடுவர்.... இதில் இரு வகைப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும். முதல்வகை நிறுவனங்கள் சமூகத்தை முன்னேற்றுவது தொடர்பான செயல்களில் ஈடுபடும். இரண்டாவது வகை நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு உதவும் விதமாகவும் அவர்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுத்து அவர்களிடம் நற்பெயரை பெறும் நோக்கத்துடனும் செயற்படும்.
பெஸ்ட் ஆப்ஷன் இரண்டாவது வகை நிறுவனம்..... கம்பனியின் உயர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலத்தை பரிசோதித்து குறைகள் இருந்தால் அதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தரவென்று முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டே வருடாவருடம் மருத்துவமுகாம் நடைபெறும்..... இந்த முகாமின் முக்கிய சிறப்பு சில நோய்களுக்கான உணவுக்கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும்... இதற்கு ஒரு நாள்போதாது என்ற காரணத்தால் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து இந்த மருத்துவ முகாம் இடம்பெறும்.
சாரு அஸ்வினிற்கு அந்த முகாம் பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தாள்... ஆகவே அம்முறை அவனே முன்வந்து அந்த முகாம் ஒழுங்கமைப்பை பொறுப்பேற்றிருந்தான். அவன் பெறுப்பேற்றதற்கு காரணம் அவனது ஜிலேபியே... அவள் அதை வருடாவருடம் நடாத்துவதற்காக கூறிய காரணமே இம்முறை அவனை பொறுப்பெடுத்து நடத்த உந்தியது...
இருவரும் அன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதே சாரு முகாம் பற்றி கூறத்தொடங்கினாள்.
“ரௌடி பேபி நம்ம கம்பனியில் வருடா வருடம் அடுத்தடுத்து வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மெடிக்கல் காம்ப் ஒன்று கண்டாக்ட் பண்ணுவோம். அதில் செக்கப் மட்டும் இல்லாமல் சில நோய்கள் பற்றிய அவாய்ர்னஸ் செஷன்ஸ் மற்றும் சில நோய்களுக்கான உணவு கட்டுப்பாட்டுமுறைகள் பற்றி ஸ்பெஷலிஸ்ட் பேசுவாங்க..... இந்த காம்ப் அம்மாவோட நினைவு தினம் வருகின்ற மாதம் தான் வழமையாக நடைபெறும். அதனால இந்த முறை இதை நீ பொறுப்பெடுத்து செய்தால் உன்னோட ஜிலேபிக்கு ரொம்ப ஹேபியா இருக்கும்...”
“என்னோட ஜிலேபி கேட்டு நான் ஏதும் செய்யாம விடுவேனா??? ஓகே ஜிலேபி அதை நான் பர்பர்க்டா செய்து முடிக்கின்றேன்....ஆனா எனக்கு இதை நீ ஏன் அத்தையோட நினைவு தினம் வருகின்ற மாதத்தில் கண்டாக்ட் பண்ணுறனு தெரியனும்??”
“சும்மா ஒரு ட்ரிபியூட்டா தான்”
“ஜிலேபி உன்னோட ரௌடி பேபி ரொம்ப ஸ்மார்ட் சோ உண்மையை மறைக்காமல் சொல்லு..... எதனால இந்த காம்ப் எவ்ரி இயர் கண்டாக்ட் பண்ணுற??? என்னோட ஜிலேபி எது செய்தாலும் அதுக்கு ஒரு வெலியுபல் ரீசன் இருக்கும்... சோ லெட் மி நோ த ரீசன்”
“ஹாஹா எப்படிடா எதை மறைத்தாலும் கண்டுப்பிடிக்கிற?? எப்படி உன்னால மட்டும் என்னை சரியா கெஸ் பண்ண முடியிது???”
“அது அப்படி தான்... இப்போ நீ ரீசனை சொல்லு..”
“அது அம்மாவுக்காக தான்”
“அத்தைக்கு என்னானது?”
“அம்மா வலிப்பு வந்து இறந்துட்டாங்க”என்று சாரு சிறிது நேரம் அமைதியாக இருக்க அவளது துக்கம் அறிந்த அஸ்வினோ அவளை ஆற்றும் விதம் அறியாது தவிக்க
“ஜிலேபி.... எது நடக்கவேண்டுமென இருக்கோ அது நடந்தே தீரும். ஒரு தவறு நடக்கிறதென்று தெரிந்தால் அது நம் சக்திக்கு உட்பட்டதா இருந்தா மட்டுமே அதை நம்மால் தடுக்க முடியும்... ஆனால் பிறப்பும் இறப்பும் நம்மை படைத்த ஆண்டவனாலேயே தடுக்கமுடியாதவை... இது தான் இயற்கையின் விதி... இதுக்கு நீயோ நானோ விதிவிலக்கல்ல.. ஒருத்தர் இறந்து போயிட்டாங்கனா அவங்க நம்மை விட்டுட்டு போய்ட்டாங்கனு சொல்றோம். ஆனால் நம்மை விட்டு பிரிந்து சென்றது அவங்களோட உடம்பு மட்டும் தான்.... அவங்களோட நியாபகங்களும் நினைவுகளும் எப்பவும் நம்மோட தான் இருக்கும். அவங்க நம்ம மனசுக்கு பிடித்தவங்கனா அவங்களோட ஆன்மா எப்பவும் நமக்கு துணையாக இருக்கும். என்னோட அத்தையும் அப்படிதான். உன்னைவிட்டு பிரிந்தது அவங்களோட உடல் மட்டும் தான்.....ஆனா அவங்களோட ஆன்மா உனக்கு எப்போதும் காவலா மட்டும் இல்லாம உன்னை சரியான பாதையில் வழிகாட்டிட்டு தான் இருக்கிறது... உதாரணமா எடுத்துக்கோ நீ அன்புக்கு ஏங்கினாய்... உன்னை காதல் வசனம் பேசி நயவஞ்சகர் யாராவது உன் வாழ்க்கையை சீரழிச்சிருக்கலாம்....... இல்லைனா நீ பொண்ணுதானேனு உன்னை பிசினஸ் சர்க்கிலில் உள்ளவங்க ஏதாவது உன்னை காயப்படுத்துகின்ற அளவுக்கு ஏதும் பண்ணியிருக்கலாம். அவ்வளவு ஏன் அன்றைக்கு சஞ்சுவும் ராம் சாரும் இல்லாவிடின் உன்னோட நிலை என்ன???? எப்படி உன்னோட வாழ்க்கை சீர்குலைவதற்கு ஏகப்பட்ட வழிகள் இருந்த போதும் நீ எந்தவித கறையும் இல்லாம பளிச்சிடுவதற்கு காரணம் உங்க அம்மா உன்கூட உனக்கு காவலாக இருப்பது தான். அவங்க உயிரோடு இல்லாட்டியும் அவங்க ஆன்மா உனக்கு துணையா இருந்திருக்கு..... சோ அத்தை இல்லைனு நீ எப்பவும் கவலைப்படக்கூடாது.... அத்தை எப்பவும் உன் கூட தான் இருக்காங்க புரிந்ததா??” என்று அஸ்வின்அவளது கையினில் சிறு அழுத்தம் கொடுத்து அவள் முகம் பார்த்து கேட்க
“ம்...” என்று சாரு அஸ்வினின் தோளின் மீது சாய்ந்தாள்
“ என்னோட சமத்து ஜிலேபி. இப்ப சொல்லு அத்தைக்கு என்னாச்சி?” என்று அவளது தலையை நிமிர்த்தி கேட்க
“ அம்மாவுக்கு வீசிங் இருந்தது... அதுக்கு மெடிசின் எடுத்துட்டு தான் இருந்தாங்க...ஒருநாள் திடீர்னு பிட்ஸ் வந்தது... ஆஸ்பிடல் கூட்டிட்டு போகிற வழியில் இறந்துட்டாங்க........
அப்போ அம்மோவோட டெத்திற்கு ரீசன் நிமோனியானு சொன்னாங்க... ஆனாலும் நிமோனியா அவ்வளவு சீரியஸ் இல்லையேனு டாக்டர்ஸ் கிட்ட கேட்டப்போ அவங்க சாப்பிட்ட ஏதோ தான் நிமோனியாவ சிவியர் ஆக்கி அவங்களுக்கு பிட்ஸ் உண்டாக்கி பிரீத் பண்ண முடியாம இறந்துட்டதா டாக்கடர்ஸ் சொன்னாங்க.... டாக்டர்ஸ் அவங்க என்ன சாப்பிட்டதா விசாரிச்சாங்க.... அன்றைக்கு பகல் அம்மா ரொம்ப நாளைக்கு பிறகு சிங்கறால் பிரைட்ரைஸ் செய்திருந்தாங்க... அது தான் அன்றைக்கு லஞ்ச் னு டாக்கடரிடம் சொன்னப்போ அவங்க அது நிமோனியாவுக்கு அலர்ஜியான புட் அதான் அவங்களுக்கு பிட்ஸ் வந்ததுனு சொன்னாங்க...... இதைக்கேட்டவுடன் அன்று பகல் அந்த பிரைட்ரைஸை ரசித்து சாப்பிட்ட அம்மாவோட முகம் என் கண்முன்னே வந்து என்னிடம் “நல்லா இருக்கு சாருமா நாளைக்கும் செய்து சாப்பிடலாம்” என்று ஒலித்தது போல் இருக்க நான் அங்கேயே மயங்கி விழுந்துட்டேன்..” என்று விட்டு மீண்டும் அஸ்வினை அணைத்து அழத்தொடங்கினாள் சாரு.......
அவளை அணைத்து அஸ்வின் அவளது தலையை கோதியவாறு இருக்க சிறிது நேரத்தில்
“சாருமா........” என்று அஸ்வின் அழைக்க
“வேணா அஸ்வின் அப்படி கூப்பிடாத அம்மாவும் இப்படி தான் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு மீண்டும் அவன் மார்பில் தலைவைத்து அழுதாள் சாரு...
தன்னவளின் அழுகை அவளது மனபாரத்தை குறைக்கும் என்று அவன் அறிவு கூறினாலும் அவன் மனமோ மிகவும் கலங்கியது...... ஆனாலும் தன்னவளை ஆசுவாசப்படுத்த தன்னாலே முடியும் என்று அஸ்வின்
“ஓய் ஜிலேபி நான் எங்க அத்தை கூட கா....” அவனது திடீர் பேச்சில் குழம்பிய சாரு தலையை நிமிர்த்தி பார்க்க
“இப்படி ஒரு அழகான பாப்பாவ அழுகுனிபாப்பாவா வளர்த்திருக்காங்களே.... நானும் இவ்வளவு நாள் இந்த பாப்பாக்கு அழவே தெரியாது சமத்து பாப்பானு நினைத்திருந்தேன்.... ஆனா இந்த பாப்பா லீட்டர் லீட்டரா தண்ணியை ஸ்டோர் பண்ணி வைத்திருக்குனு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போயிருச்சே...” என்ற அஸ்வினை முறைத்த சாரு
“தெரிந்திருந்தா என்ன பண்ணி இருப்ப??”
“வேற என்ன பண்ணியிருப்பேன்?? வீட்டில் இன்னும் ரெண்டு வாட்டர் டேங் வாங்கி வைத்திருப்பேன்” என்று அசால்டாக அஸ்வின் கூற அவனை அருகில் இருந்த தன் ஹான்ட் பேக்கினால் அடித்தாள் சாரு....
“ஓய் ஜிலேபி இப்படி வெப்பன்ஸ் எல்லாம் யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்...”
“உன்னை இத்தோடு விட்டதே பெரிது....என்னையே கலாய்ப்பியா ரௌடி பேபி...??”
“ஹாஹா உன்னை கலாய்க்காம வெறு யாரை ஜிலேபி கலாய்ப்பது?? சரி இப்போ அத்தையை பற்றி சொல்லு”
“சொல்லுறேன்.... உங்க அத்தையை பற்றி மட்டும் இல்லை... அவங்க புருஷனை பற்றியும் சொல்லுறேன்” என்று தன் குடும்பம் பற்றி கூறத்தொடங்கினாள் சாரு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top