மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
முதலில் மகனின் ஹெல்த் பாருங்கள் ராசிதா டியர்
அவருக்கு உடல்நலம் சரியானவுடன் அப்புறமா வந்து அப்டேட்ஸ் கொடுங்கப்பா
போன கொரங்கு கொரானாவை யாரோ வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி திரும்பவும் வருதாமில்லே
இல்லை இதுவும் புரளியான்னு தெரியலை
சாஹி துக்கடாவோ பால் பக்கோடாவோ ஏதோ ஒண்ணு பார்த்திபனுக்கு செஞ்சு கொடுத்து பனிமலர் அக்மார்க் மனைவியாகிறாளோ?
ஆனாலும் நம்ம நண்டுவுக்கு மூக்கு மூணு கிலோ மீட்டருக்கு வாசம் புடிக்குதுதான்
ஹா ஹா ஹா
ஆனாலும் ஆல் இன் ஆல் அழகு ராசா நம்ம பஞ்ச் பேசும் பெருமகனார் பஞ்ச பூதம் பார்த்திபனுக்கு பயந்து இப்பிடி பேக்கடிக்கலாமா?
வீரத் திருமகன் பூததுக்கு இது அழகா?
இன்னுமா பனிமலரின் நகையை வைச்சு லாரி வாங்கவில்லை?
எப்போ லாரி வாங்கி எப்போ பார்த்திபன் ஓட்டி எப்போ அவன் சம்பாரிச்சு எப்போ கடனை அடைக்கிறது?
இதுக்கு நடுவிலே நகை கொடுக்காத ஆத்திரத்தில் நித்யகலாவும் அவ புருஷனும் குட்டையைக் குழப்பாமல் இருக்கணும்
காதல்ன்னு எவன் சொல்லி என்ன துன்பம் மலருக்கு வந்தது?
பனிமலர் பார்த்திபனிடம்தான் இருக்கிறாள்ன்னு பிரியனுக்கு இன்னும் தெரியலையோ?