அடப் போடா கூமுட்டை வேலு
இவன் சொத்தை அத்தை பொண்ணு வாய்க்கு வந்ததைப் பேசுவாளாம்
அதுக்கு குறிஞ்சி சரியான பதில் கொடுத்தால் தப்பாம்
தன் பொண்ணுதான் இவனுக்குன்னு சொத்தை சொல்லும் பொழுது வாயில் கமர்க்கட் இருந்த மாதிரி இறுக்கமா வாயை மூடிக்கிட்டு இருந்துட்டு இப்போ வந்து குறிஞ்சி தவறாக ஒண்ணும் பேசிடக் கூடாதுன்னு எந்த இதுக்கு முட்டாள் வேலு நினைக்கிறான்?
இதெல்லாம் இருக்கட்டும்
இவங்க இரண்டு பேரும் பேசுறதை தாமரை பார்த்தால் என்ன ஆகுமோ?
அருமையான பதிவு மகேஸ்வரி.பொண்ணு வீட்டுல வந்து போற வரைக்கும் அவங்க முன்னாடி வரக்கூடாதுன்னு குறிஞ்சியை ரூமில் இருக்க சொன்ன தாமரை,இப்போ பொண்ணு வீட்டுக்கு குறிஞ்சியை எப்படி கூட்டிட்டு வந்துச்சு.
வீட்ல இவ்வளவு பேர் இருக்காங்க யாரையும் கண்டுக்காம பாவாட்ட போறாளே தாரிணி.
அப்பா வழியில் இருக்கற சொந்தம் அத்தை மட்டும்னு,அவங்க என்ன சொன்னாலும் பேசாம இருப்பானா.அத்தை பேசறப்போவே பேச்ச முறிச்சு விட்டிருக்கனும்னு இப்போ நெனச்சு என்ன செய்ய.வேலுக்கு பொண்ணு ரெடியா இருக்கறத கேட்டு தாமரைக்கு சந்தோஷம்
தாமரை இவ்வளவு கண்டிப்பா இருந்தும் குறிஞ்சி வாய் அடங்க மாட்டேங்குது,குறிஞ்சி பேசியதை மட்டும் தாமரை கேட்டிருந்தா நெஜமாவே தொவைச்சு காயப்போட்டிருக்கும்.
குறிஞ்சி எடுத்த புடவை தான் தனக்கு நல்லா இருக்கும்னு புவனா எடுக்கறாளே.
தாரிணியின் பேச்சுக்கு குறிஞ்சி முகத்துல அடிச்சது போல நல்லா பதில் சொன்னா.இவன் என்ன வம்பிழுத்தவளை விட்டுட்டு,குறிஞ்சிய சத்தம் போடறான்.இவங்க பேசறதை தாமரை பார்த்தாலே குறிஞ்சியை ஒருவழி பண்ணுவா,தேவிகா பார்த்தா என்ன ஆகுமோ.