பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 91. பெண் வழிச் சேறல், குறள் எண்: 906 & 907.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 906:- இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்.

பொருள் :- மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 907:- பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

பொருள் :- மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மான்பு மிகுந்தவராக முடியாது. மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம் மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பெறு அடையமுடியாது. பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார். பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top