அதிகார விளக்கம் :-
உறுப்புநலனழிதல் என்ற அதிகாரம் தலைவன் பிரிவைத் தாங்கமுடியாத தலைவியின் உறுப்புக்கள் அழகு இழப்பதைச் சொல்கிறது.
தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றபின் அவன் நினைவாகவே உள்ளாள் தலைமகள். அவனையே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் ஒளி இழந்தன. அவன்உடனிருந்த நாட்களில் பூரித்திருந்த அவளது தோள்கள் வருத்தத்தால் வாடி, தொடி கழலும் அளவு, மெலிந்தன. தலைவன் நிலை என்ன? அவன் வினைமுடிந்து திரும்பும் நேரமிது. அதுசமயம் காதலியையும் பிரியும்போது நிகழ்ந்தனவற்றையும் நினைக்கிறான். அவளது நெற்றியும் கண்ணும் ஒன்றன்பின் ஒன்றாகப் பசந்தது அவனது எண்ண ஓட்டத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இன்னும் மற்ற உறுப்புக்களும் அழகிழந்திருக்கும்; விரைந்து அவளிடம் சென்று ஆற்ற வேண்டும்! என்று அவன் எண்ணுகிறான் என்ற குறிப்புடன் அதிகாரம் நிறைவு பெறுகிறது.
வறுமை போக்க வெளியூர் சென்றவரை எண்ணியபடி நறுமலரை கண்டு நாணுகிறது கண். நாடுபவர் நாடிவாராததை கண்டு கண்களில் பனி வருகிறது. மணமான நாட்களில் பருந்திருந்த தோள் அவர் பிரிவை உணர்த்தும்படி இளைத்திருக்கிறது. பிரிந்த கொடியவரின் கொடுமை உரைக்கிறது என் வளையல்கள். வளையலும் அதை அணிந்த தோள்களும் அவர் கொடியவர் என உரைக்க செய்தது. வாடிய தோள் கண்டு எழும் புசலால் நெஞ்சே பெருமைகொள். கூடி மகிழ்ந்த கைகள் தடவிய நெற்றியில் பசலை படர்ந்தது. காற்றும் புகாதபடி அணைத்து மகிழ்ந்த பெண்ணின் கண் இன்று பெரும் மழை உண்டாக்கியது. கண்ணில் பசப்பு கலைந்தது முன்பு கூடி மகிழ்ந்ததை நினைத்து.