அருமையான பதிவு லதா பைஜூ
.அப்பா தான் மகனை புரிஞ்சுக்காம அடிக்கிறார்
. அம்மா தேவ் அடிவாங்காமல் இருக்கனும்னு நெனைக்கிறாரே
,தவிர ஓவியம் வரையாமல் இருக்க முடியாது என கூறும் மகனின் மனதை புரிந்து கொள்ளவில்லை
.
பரிட்சை முடிந்ததும் தேவ் அப்பா அடித்தது,அம்மா அழுதது,தம்பி டிராயரை பிடித்து இழுப்பதை மறக்காமல் படமாக வரைந்தது அவன் மனது பட்ட வேதனையை காட்டுது
.
என் வாழ்க்கையை நான் தான் முடிவு பண்ணுவேன்.என் திறமைக்கு மரியாதை இல்லாத இடத்துல
மூச்சு முட்டி வாழறதை விட,என் ஓவியத்தோட சந்தோஷமா,சுதந்திரமா வாழுவேன் என சொல்லி வீட்டை விட்டு வந்த தேவ்,இன்று தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு வளர்ந்து இருப்பது அருமை
.
தேவ்வின் பேச்சு தான் நாட்டியத்தை தேர்ந்தெடுக்க வைத்தது என அம்மு சொல்ல,ஓவியத்தை பார்த்ததும் அம்முவின் முகத்தில் தோன்றிய சிரிப்பு தான்,தனக்கு நம்பிக்கையை கொடுத்தது என சொல்பவன்,தன் ஓவியத்தில் ஓவியாவின் சாயல் தெரிவதாக சொல்வது பிரம்மிக்க வைக்குது
.
ஓவியர் முன் நாட்டியம் ஆடிய ஓவியாவுக்கு,பிரம்மா ஓவியத்தை பரிசாக கொடுத்தானா
.