படம் பார்த்து கவிதை சொல்....

Advertisement

Sundaramuma

Well-Known Member
நானும்......... but for the situation.......

அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....

:D:D:D
:rolleyes::ROFLMAO::ROFLMAO:
 

Sundaramuma

Well-Known Member
அம்மா...
உன் பாதங்களை அரியணையாக்கி
எவ்வளவு நீ தேய்த்தாலும்
உன் போல் வெண்ணிறம் வராத
கார்வண்ணன், கருத்த அழகனே நான்
போதும்! விட்டுவிடு என்னை...
Same thinking at first sight ....:LOL::love:
 

Sundaramuma

Well-Known Member
அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
o_O:rolleyes::ROFLMAO:
Engum Eshwar ....ethilum Eshwar
 

Sundaramuma

Well-Known Member
கண்ணா..
ஆனந்தமாய் குளித்திடு
இன்பமாய் நனைந்திடு
இது போல் இனி வாய்க்காது
கால்வாய்களை ...
தார வார்த்து விட்டோம்...
கார்ப்பேரட்டுகளுக்கு....
களித்து குளித்து விடு இன்றே.
Hahaaaa....Namma Pons:D:D
 

Sundaramuma

Well-Known Member
கருமை நிறக் கண்ணன் என்ற பெயரடா உனக்கு..
கத்திரி வெயிலில் மேலும் கருத்துவிடாதே!!
நாளை பெண் கிடைப்பது கஷ்டம்..

நிறத்தில் ஒன்றுமில்லை அம்மா..
என் தோற்றம் எதுவாகினும்
அந்த ராதையின் காதல் இந்த கண்ணனுக்கே!!

கமலநயனனை வெண்மையாக்கும் முயற்சியில்
இறங்கிய அன்னையின்
மனதை அறிந்து
புன்னகையோ பாலனுக்கு!!
:D:DNice
 

Sundaramuma

Well-Known Member
மாயவன் குளியல்
அன்னையவள் திண்டாட்டம்
கண்களை நீர்திவலைகள்
முற்றுகையிட
அதில் கிலி கொண்டு
கண்ணனவன்
தன் பிஞ்சுப்பாதங்களை உதைத்து
கைகளை அசைத்து
திமிற
அரவணைக்கும்
அன்னையின் கைகள்
அத்திவலைகளை
துணியாய் மாறி
துடைக்க
அதில்
அந்த கருநீல நிற மேனியவன்
தன் கள்ளச்சிரிப்பை
பிரபலிப்பாக்க
அதில் எந்தன்
உள்ளம் மதி மயங்கிய
விந்தையினை
என்னவென்று சொல்வது??
Wow (y)(y)
 

Sundaramuma

Well-Known Member
தாய்மை
கடலையே தனதாய் கொண்டவனின்
கண்ணை மூடும்
தண்ணிரீல் இருந்து காப்பாற்ற



கண்ணா
உன் பொக்கை
ஜொல்லில்
பிறந்ததோ இந்த பூமி



யார் நீ
வானமும் கடலும் உன் நிறம்
புரிந்தது என் இடம்



மாயவனே
நீல நிறம்
நீ கொண்டால் வண்ணம்

நான் கொண்டால் பின்னம்


கள்ளழகா
எண்ணமெல்லாம்
உன் வண்ணம்
ஆள்கிறதே எனை

அனுதினம்


பாற்கடலின்
சொந்தக்காரனே
நீ
சொம்புனீரில்
குளிக்கும் அழகில்
சொக்கி போகிறேன்
சொகுசுக்காரா



காத்தலின் காதலனே
கட்டுண்டு இருக்கின்றாய்
தாய்மையை போற்றி
Theiveegam:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top