நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயல் அப்படியே கண்ணன் கேட்டதை எல்லாம் நீ குடுத்தட்டு தான் வேற வேலை செய்யுற
பாவம் கண்ணன் தெரியாம ஒரு தாலிய கட்டிப்புட்டு மாட்டிக்கிட்டான்
 

JayanthiMurali

Active Member

எல்லாரும் சாப்பிட செல்லவும் கண்ணன் தங்களை சுற்றிலும் யாருமில்லாததை சுற்றி பார்த்தவன்..........


“யாரு உனக்கு மாமா............ அவனா.........”



“அவுகதான்......... எனக்கும் அவுகள பிடிக்காதுதான்..........ஆனா என்ன கோக்குமாக்கு பண்ணியாவது எங்க அக்காவ கல்யாணம் பண்ணியிருக்காருல.......... நாளப்பின்ன அவுக முகத்துல நாம அடிக்கடி முழிக்கனும்ல..........அதுனால எப்பப்பாத்தாலும் மூஞ்சிய இப்புடி வெறப்பா வச்சிருக்காதிங்க........அவுக கிட்ட கொஞ்சம் பேசி பழகுங்க......... பத்தீங்களா......... அவுக ஹனிமூன்லாம் போயிட்டு வந்திருக்காங்க............”



ஹனிமூனப் பத்தி இவ ஏன் பேசுறா........... ஒருவேள இவளுக்கும் நம்மகூட ஹனிமூன் வரணும்னு ஆசையா இருக்குமோ...........ச்சே......நல்ல சான்ஸ் ஆனா இப்ப போயி கடைபயலுக ரெண்டுபேரு லீவு போட்டுருக்காங்களே...........இப்ப என்ன பண்ணுறது...........கண்ணணுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது. பரவால்ல இவ அக்கா வந்ததுலயும் நமக்கு இப்புடி ஒரு சான்ஸ் கிடைக்குமோ.....



“அதுனால சும்மா என்னைய மாமான்னு கூப்புடனும்னு சொல்லாதீங்க.........நீங்களும் பாவம்தான்........கொஞ்சம் கொஞ்சமா எங்க அக்காவ மறக்க பாருங்க........புரியுதா......... அப்புறம் எப்ப பாத்தாலும் வாசு மாமா மேல உள்ள கோபத்துல என்னைய மொறைக்காதீங்க............ பாவம் எங்க அக்காக் கூட இந்தா உங்கள மறந்துட்டு மாமாவோட நல்லா பேசி பழகிட்டா....... நீங்களும் ஒரு வருசமோ....... இல்ல ரெண்டு வருசமோ டயம் எடுத்து கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாருங்க........”( ஆத்தி கயலு உன்னோட அறிவுக்கு நீ இங்க பிறந்திருக்க வேண்டியவளே இல்ல..........)



என்னது நான் இவ அக்காவ மனசுல நினச்சிருக்கனா........நான் என்னமோ இவ அக்காவோடு டூயட் பாடுன மாதிரியே பேசுறாளே......... பொண்ணுபாத்த அன்னைக்கு ஒரு ரெண்டு நிமிசம் பாத்திருப்பமா........... அதுக்கப்பறம் ஒருதவணக்கூட நிமிந்து பாக்கல......... இவ அக்கா பண்ணுனத சொன்னா இந்த லூசு நம்புமா...... மேக்கொண்டு இவ அக்கா மாதிரி. இவளும் நம்மள குறைச்சு மதிச்சுருவாளோ......... வேணாம் கண்ணா......வேணாம் கொஞ்ச கொஞ்சமா இவ மனச மாத்தப்பாரு.......... அவசரமே படாத கண்ணா.....ச்சே........ கொஞ்ச நேரம் நம்மள எப்புடியெல்லாம் நினைக்கவச்சுட்டா..........



“எனக்கு பசிக்குது சாப்புட போவமா.............” என்று முகத்தை பாவம் போல் வைத்து........ கண்ணனை அழைக்க.........



அவளை நிமிர்ந்து பார்த்த கண்ணன் எல்லோரும் நெற்றியில் குங்குமம் வைத்ததால் கயலின் முகத்தில் பெரிய பொட்டு மாதிரி இருந்தது.” இங்க வா…..” என்றவன்.......தன் கர்சீப்பை எடுத்து அவள் முகத்தை துடைத்தான்......... அந்த தாலிகட்டு சேலையில் அவளை பார்க்கையில் கல்யாணத்தன்று பார்த்ததுபோல் இருந்தது.......... நல்ல வெள்ள பிகரா....... இருக்கான்னு பாத்தா......... இப்புடி மக்கு பிகரா........ இருக்காளே............என்று நினைத்தான்......



அவன் நெற்றியிலும் அதிக குங்குமத்தை கண்டவள்........ அவனிடமிருந்து கர்சிப்பை வாங்கி அவன் முகத்தையும் துடைத்துவிட்டாள்.......

கயலின் கையை மெதுவாக பிடித்தவன்.......”.நான் உன்கிட்ட ஒன்னு சொல்லவா........”



“சொல்லுங்க......... ஆனா சீக்கிரம் சொல்லுங்க........எனக்கு பசிக்குது.........”



“நான் ஒன்னும் உங்க அக்கான்னு நினச்சு உங்கிட்ட பழகல............உன்னைய புடிச்சுதான் பழகுறேன்...........புரியுதா........”

“சரி.......”



“என்ன சரி.........”.இவளுக்கு என்ன புரிஞ்சுச்சுன்னு உடனே சரின்னு சொல்லுறா.........



“இல்ல நீங்க.............என்னோட மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே இப்புடி சொல்லுறீங்க......... நீங்க கவலப்படாதீங்க......... நான் உங்க மனச புரிஞ்சு நடந்துக்குவேன்......... எங்க அம்மாக்கூட உங்க மனசு கோணாம நடக்கச் சொன்னாங்க......”.



அதான்னே பாத்தேன்......... இது இனி வேளைக்காகாது....... என்று நினைத்தவன்.......அவளை மெதுவாக இழுத்து அவள் இரு கன்னத்திலும் முத்தமிட்டான்........



“ஏன்...... இப்புடி பண்ணுறீங்க........எங்க காலேஜ்ல இதுமாதிரி பேட்டச் பண்ணுனா சப்புனு அறைய சொல்லியிருக்காங்க........

அன்னைக்கும் இப்புடித்தான் பண்ணுனீங்க.......... இந்த மீச வேற செமையா குத்துது........ இப்ப நானும் அமுதாவும் பேசிக்கிட்டு இருந்தோம்ல...... அப்ப அவ சொன்னா நீங்க இந்த மாதிரி பேட்டச் பண்ணுனா ஒண்ணும் சொல்ல வேணாம்........விடு பாவம்னு சொல்லிட்டு சிரிக்குறா.......”.



கண்ணனோ........ அப்ப அமுதாதான் என்னைய இன்னைக்கு அறையிலிருந்து காப்பாத்துனதா.......ம்ம்ம் சாதாரண முத்தம் அதுவும் கன்னத்துல........ அதுக்கே அறையனும்ங்குறா....... வேற என்னமாச்சும் பண்ணுனா....கத்தி கலாட்டவே பண்ணிருவாளோ...... அந்த அமுதா பொண்ணு நம்மள பத்தி என்ன நினைக்கும்...... இனிமே அது முகத்தப் பாத்து எப்புடி பேசுறது....... ஆனா இவ இன்னும் யாருகிட்டயெல்லாம் சொன்னான்னு தெரியலயே “ஆமா.......நான் முத்தம் குடுத்தத வேற யாருகிட்டயெல்லாம் சொன்ன.......”



“அமுதாதானே என்னோட பெஸ்ட் ப்ரண்ட்........ அதுனால நானும் அவளும் எதயும் மறச்சு பேசமாட்டோம்..........வேற யாருகிட்டயும் சொல்லல. அவளும் இனிமே நீங்க இதுமாதிரி செஞ்சா யாருகிட்டயும் சொல்ல வேணாம் ........என்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லிட்டா........ அப்புறம் எனக்கு ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளரலயாம்......... என்ன திமிரு...... நான் ஒரு பாடத்துல கூட அரியர் வைக்கல....... ஆனா எத்தன அரியர் அவ வச்சிருக்கா தெரியுமா......... நல்லா மண்டைல நாலு கொட்டு வச்சேன்........ அப்புறம்....புருசன்தான் முத்தம் குடுப்பாருன்னும் தெரியும்........ ஆனா நீங்க எங்க அக்காவ நினச்சுகிட்டு எனக்கு முத்தம் குடுக்கக் கூடாது......சரியா....(..நல்லவேள அமுதா சொன்னமாதிரி சொல்லிட்டோம்....... இவருபாட்டுக்கு நம்மள மக்குன்னு நினைச்சிராம......) (இனிமேயா..... நினைக்கனும்.....) அப்புறம் இந்த மீசை பயங்கரமா குத்துது........”



“அதுக்கு என்னோட மீசைய எடுக்கச்சொல்லுறியா........”



“ச்சே.....ச்சே...... உங்க முகத்துக்கே..... இந்த மீசைதான் அழகு.......அதுனால மீசைய எடுக்கவேணாம்....”(அப்புறம் நான் எப்புடி உங்கள ஐயனாருன்னு கூப்புடுறது)

“அப்புறம்....”

“இனிமே முத்தமே குடுக்காதீங்க.....சரியா.......”. கண்ணன் ஙே........... என்று விழிக்க.......”ஐயோ..... அம்மா எனக்கு பசி உயிர் போகுது........வாங்க” என்று அவன் கையை இழுத்தபடி சாப்பிட கூட்டிச் சென்றாள்.
No girl is like this in real, dear author don't make Jenelia like heroine character, it's quite irritating
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top