நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-13
சகுந்தலா தன் மாமியாரிடம்
” அத்த..........இப்ப இங்க என்னதாத்த நடந்துச்சு..........ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்க..........நீங்க ஏத்தே கயல இந்த மாப்ளக்கு கட்டிக்குடுக்க ஒத்துக்கிட்டீங்க...........எனக்கு அப்புடியே தலைய சுத்துது...........” என்று புலம்ப........
“இங்கன பாரு சகுந்தலா..............நான் என்னைக்கும் எம்பேரன் பேத்திகளுக்கு நல்லதுதான் செய்வேன்னு தெரியுமுல்ல............”
“ஆத்தி என்னத்த இப்படி சொல்லிபுட்டீங்க உங்களபத்தி எனக்கு தெரியாதா............ ஆனா அங்க என்ன நடந்துச்சுன்னு................”
“ஏன் ஒம்மக சுதா ஒன்னும் சொல்லலையா................”
“இல்லத்த இந்த வாசுபையன் திடீருன்னு கையப்புடிச்சு இழுத்து தாலிய கட்டிப்புட்டாருனு சொல்லுறா....................சொல்லிப்புட்டு ஒரே அழுகையா அழுகுறா............... அதப்பாத்துப்புட்டு கோபமே வராத ஒங்க மகனே வெட்டப்போறேன் குத்தப்போறேன் எடுடா அருவாளங்குறாரு............அழகர் மாமாதான் அவரை சமாதானப்படுத்திக் கூட்டிக்கிட்டு வராரு............”
“சரி கீழவா அங்க போயி பேசிக்குவோம்...ஆனா ஒன்னமட்டும் நினப்புல வச்சுக்க நான் என்ன பேசுனாலும் அதுல நம்ம குடும்பமானமும் இருக்கு உனக்கு இன்னும் ரெண்டு பொம்பளபிள்ளங்களுக்கு கல்யாணம் பண்ணனும் .........அவன்கிட்டயும் சொல்லிவை........தேவையில்லாம பேசி குட்டய குழப்பவேணாமுன்னு.............என்ன புரியுதா..........”.
காந்திமதி மெதுவாக படியில் இறங்க............வாசுவையும் சுதாவையும் சில உறவினர்கள் அழைத்துவர.....
கயலை தூக்கிக்கொண்டு இறங்கிய கண்ணன் கடைசி மூன்றுபடி இருக்கும்போது பாதையில் இருந்த கவனத்தை மீண்டும் கயல்மீது வைத்தான்..........அவளின் முகத்தை பார்த்தவன் அப்போதுதான் அந்த உதட்டின் மேலிருந்த அந்த மச்சத்தைப் பார்த்தான்............இந்த மச்சம் ஏற்கனவே இவளுக்கு இருந்துச்சா.............நாம இவள ரெண்டுதரம் பாத்தமே...........நாமதான் நல்லா கவனிக்கலயோ........... ப்ப்பா இந்த மச்சம் இவளுக்கு மாசுமரு இல்லாத இந்த முகத்துக்கு ரொம்ப சூப்பரா இருக்கு...........அடுத்து அவளின் உதட்டிற்கு பார்வை செலுத்தியவன் இவ இதுல லிப்ஸ்டிக் போட்டுருக்காளா இல்ல அவ உதடே ரோஸ்கலரா........( அப்பா சாமி இந்தபுள்ளய நீ இப்புடி ரசிக்குற.........நாங்க வேற நீ இந்தபுள்ள மேல கோபமா இருக்கியோன்னு பயந்துட்டோம்........... நீ நடத்துப்பா.........நடத்து.......).
கடைசி படிக்கு வந்த கண்ணன் இவளை எப்படி கூப்புடுறது..............என்று யோசித்தவன் அவள் முகத்தில் மெதுவாக ஊதினான்............ இதுவரை கண்ணை மூடியிருந்த கயல் தன் முகத்தில் சூடான காற்றுபடவும் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.............. இருமுறை கோபமாக மட்டுமே பார்த்திருந்த கண்ணனின் முகத்தை முதல்முறையாக இப்பொழுதுதான் சாதாரணமாக பார்த்தாள்.............பரவால்ல இவர சாதரணமா பாத்தா ஒன்னும் பயம் வரல.......... ஆனா இந்த மீசை கொஞ்சம் இவருக்கு அழகாத்தான்ல இருக்கு.............
“என்ன பாக்குற.............கீழே இறக்கிவிடவா......... இல்ல இன்னும் மயக்கம் வருதா..........”
“இல்ல இல்ல .......”..என்றவள் அவன் கையில் இருந்து இறங்கியவள்.......லேசாக தடுமாற...........
எட்டி அவள் கையைப் பிடித்தவன்.........அவள் தோளில் கையை போட்டு அணைத்திருந்தான்...........வா என்றபடி நடக்க ஆரம்பிக்க.......
இவர்களை பார்த்த காந்திமதிக்கு மனது நிறைந்தது............ராத்திரி இந்த பையன் பேசுனத பாத்து கொஞ்சம் பயமா இருந்துச்சு............இன்னும் சின்னப்புள்ள மாதிரி இருக்க நம்ம கயலை இந்தபுள்ள பொறுப்பா பாத்துக்கும்முன்னு நினைக்கிறேன்.............என்று நினைத்தபடி பார்வையை திருப்பியவர் எதிரே சுதா வந்து கொண்டிருந்தாள்...........அவளை பார்த்தவுடன் இவருக்கு நேற்று இரவு நடந்தது நினைவிற்கு வந்தது.
சுதா போனில் பேசியதைக் கேட்டு மயங்கி விழுந்த காந்திமதியை கண்ணனும் சகுந்தலாவும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர்...........
மண்டபத்தில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க கண்ணனிடம் வந்த சாவித்திரி
” தம்பி.........கண்ணா...... இந்த அப்பத்தா.......இந்த தாலியில கோக்குற நூல சாமி பாதத்துல வச்சு வாங்கித்தாறேன்னு சொன்னாங்க........... வேலையில மறந்துட்டாங்க போல............ வாப்பா நாம வாங்கியாந்து குடுத்துட்டமுன்னா நம்ம சொந்தகாரங்கள்ல இருக்குற ஏழு இல்லாட்டா ஒம்பது சுமங்கலிக சேந்து அத தாலியோட சேத்து கோர்த்து வச்சுருவாங்க...........”
“ஏம்மா இன்னேரத்துல எப்புடி அவுக வீட்டுக்குப் போறது........”.
“வீட்டுக்குள்ள போக வேணாம்பா........அப்புடியே கொல்லப்புறம் நின்னு ஒரு போன பன்னுனா அவுக வந்து குடுத்துட்டு போறாங்க............”
கொல்லப்புற வாசலுக்கு வந்தவர்கள் போனை எடுத்து பேசபோகும் போது காந்திமதியே கையில் ஏதோ ஒரு பொருளோடு வெளியில் வர கத்தி கூப்பிட்டு அடுத்தவர் கவனத்தை கவர வேண்டாம் என நினைத்து அவர் பின்னால் சென்றவர்களுக்கு சுதா பேசியது அப்படியே கேட்டது. கேட்டதும் இருவருக்கும் அதிர்ச்சியில் ஒன்றுமே பேசமுடியவில்லை..............
சுதாவின் பேச்சைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கிவிழப்போன காந்திமதியை அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த கண்ணனும் சாவித்திரியும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர.............
அவரை அப்படியே தூக்கிய கண்ணன் அங்கிருந்த கொல்லைப்புற வெளித்திண்ணையில் படுக்கவைத்தான்.......... சாவித்திரியோ அங்குள்ள செடிகளுக்கு செல்லும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தண்ணீரை தெளித்தார்.......”...ஆத்தா......ஆத்தா........எந்திரிங்க.......எந்திரிங்க...........”என்று காந்திமதி எழுப்ப........
.மயக்கம் தெளிந்து எழுந்த காந்திமதி சட்டென எழுந்து சென்று கொல்லைபுற கதவை வெளிப்புறமாக இழுத்து தாளிட்டார்......................
சாவித்திரியோ கோபத்துடன் காந்திமதியை பார்த்து......
“என்னத்தாயிது உங்க பேத்தி எவன்கிட்டயோ போன்ல பேசுது........அன்னைக்கு பொண்ணுகிட்ட சம்மதத்த கேளுங்கன்னு சொன்னதுக்கு உங்க பேத்தி என்னமோ நீங்க கிழிக்குற கோட்டைத்தாண்டாதுன்னு சொன்னீங்க............இப்ப இங்க என்ன நடக்குது...............”.என்று கேட்க
கண்ணனோ” அம்மா போதும் இதோட கல்யாணத்த நிப்பாட்டுங்க.........வாங்க எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்புவோம்..........நல்ல வேள இந்த விசயம் இப்ப தெரிஞ்சுச்சு இல்லையினா நாளைக்கு நம்ம குடும்பமேயில்ல கோயிலுக்கு வந்து அசிங்கப்பட்டிருப்போம்............இந்த பொண்ணுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா இப்புடி அமுக்கினி மாதிரி இருந்துகிட்டு எவன்கிட்டயோ இப்புடி போன்ல பேசும்.........குடும்பமா இது.........அழகர் மாமா சொன்னாரேன்னு குடும்பத்தப்பத்தி விசாரிக்காம வந்ததுக்கு நமக்கு இந்த அசிங்கம் தேவைதான்........... இன்னைக்கே பஞ்சாயத்தக் கூட்டுறேன்............நாளைக்கு எப்புடி அந்த பொண்ணு எவனையோ கட்டுதுன்னு பாக்குறேன்...............”.
காந்திமதி இவர்கள் இருவரும் இவ்வளவு பேசும் போதும் எதுவும் பேசாமல் கூனிக்குறுகிப் போயி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்..........கண்ணன் பஞ்சாயத்தை கூட்டுவேன் என்றதும் பதைபதைத்து
” ஐயா சாமி.......... பஞ்சாயத்த கிஞ்சாயத்த மட்டும் கூட்டிராதப்பா........... அப்பறம் நாங்க குடும்பத்தோட சாகுறத விட வேற வழியில்ல............”
சாவித்திரியோ” ஏம்பா பஞ்சாயத்தக் கூட்டியாவது இந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணுமா........”.
“ச்சீ.....ச்சீ ............இனி அந்த பொண்ணு சம்மதிச்சாக்கூட வேணாம்.........நம்மள இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிப்பாட்டுனாங்கள்ள.............அதுக்கு நமக்கு ஒரு நியாயம் கிடைக்க வேணாம்..........”.
“ஐயாசாமி நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க செத்தநேரம் பொறுமையா இருப்பா.............ஆத்தா சாவித்திரி கொஞ்சம் உன் மகன்கிட்ட சொல்லுத்தா........ இது இந்த வீட்டு பொண்ணுகளோட மானப்பிரச்சனை........கொஞ்சம் மனசு வைப்பா.........என்று கை எடுத்து கும்பிட்டு.............நான் போயி இந்த சுதாவ ஒரு நிமிசம் விசாரிச்சிட்டு வந்துருறேன்...............”.என்று கூற
சாவித்திரியும்” இருப்பா கண்ணா எதையும் எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யக்கூடாது...........ஆத்தாவும் போயி விசாரிச்சுட்டு வரட்டும்.....”
“அம்மா............”
“கொஞ்சம் பொறுமையா இரு கண்ணா....................”.
காந்திமதி” கொஞ்சநேரம் இங்கனக்குள்ள உக்காருங்க.......”.என்றவர் வீட்டிற்குள் நுழைந்து நேராக சுதாவின் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டார்...........
அத்தியாயம்-13
சகுந்தலா தன் மாமியாரிடம்
” அத்த..........இப்ப இங்க என்னதாத்த நடந்துச்சு..........ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்க..........நீங்க ஏத்தே கயல இந்த மாப்ளக்கு கட்டிக்குடுக்க ஒத்துக்கிட்டீங்க...........எனக்கு அப்புடியே தலைய சுத்துது...........” என்று புலம்ப........
“இங்கன பாரு சகுந்தலா..............நான் என்னைக்கும் எம்பேரன் பேத்திகளுக்கு நல்லதுதான் செய்வேன்னு தெரியுமுல்ல............”
“ஆத்தி என்னத்த இப்படி சொல்லிபுட்டீங்க உங்களபத்தி எனக்கு தெரியாதா............ ஆனா அங்க என்ன நடந்துச்சுன்னு................”
“ஏன் ஒம்மக சுதா ஒன்னும் சொல்லலையா................”
“இல்லத்த இந்த வாசுபையன் திடீருன்னு கையப்புடிச்சு இழுத்து தாலிய கட்டிப்புட்டாருனு சொல்லுறா....................சொல்லிப்புட்டு ஒரே அழுகையா அழுகுறா............... அதப்பாத்துப்புட்டு கோபமே வராத ஒங்க மகனே வெட்டப்போறேன் குத்தப்போறேன் எடுடா அருவாளங்குறாரு............அழகர் மாமாதான் அவரை சமாதானப்படுத்திக் கூட்டிக்கிட்டு வராரு............”
“சரி கீழவா அங்க போயி பேசிக்குவோம்...ஆனா ஒன்னமட்டும் நினப்புல வச்சுக்க நான் என்ன பேசுனாலும் அதுல நம்ம குடும்பமானமும் இருக்கு உனக்கு இன்னும் ரெண்டு பொம்பளபிள்ளங்களுக்கு கல்யாணம் பண்ணனும் .........அவன்கிட்டயும் சொல்லிவை........தேவையில்லாம பேசி குட்டய குழப்பவேணாமுன்னு.............என்ன புரியுதா..........”.
காந்திமதி மெதுவாக படியில் இறங்க............வாசுவையும் சுதாவையும் சில உறவினர்கள் அழைத்துவர.....
கயலை தூக்கிக்கொண்டு இறங்கிய கண்ணன் கடைசி மூன்றுபடி இருக்கும்போது பாதையில் இருந்த கவனத்தை மீண்டும் கயல்மீது வைத்தான்..........அவளின் முகத்தை பார்த்தவன் அப்போதுதான் அந்த உதட்டின் மேலிருந்த அந்த மச்சத்தைப் பார்த்தான்............இந்த மச்சம் ஏற்கனவே இவளுக்கு இருந்துச்சா.............நாம இவள ரெண்டுதரம் பாத்தமே...........நாமதான் நல்லா கவனிக்கலயோ........... ப்ப்பா இந்த மச்சம் இவளுக்கு மாசுமரு இல்லாத இந்த முகத்துக்கு ரொம்ப சூப்பரா இருக்கு...........அடுத்து அவளின் உதட்டிற்கு பார்வை செலுத்தியவன் இவ இதுல லிப்ஸ்டிக் போட்டுருக்காளா இல்ல அவ உதடே ரோஸ்கலரா........( அப்பா சாமி இந்தபுள்ளய நீ இப்புடி ரசிக்குற.........நாங்க வேற நீ இந்தபுள்ள மேல கோபமா இருக்கியோன்னு பயந்துட்டோம்........... நீ நடத்துப்பா.........நடத்து.......).
கடைசி படிக்கு வந்த கண்ணன் இவளை எப்படி கூப்புடுறது..............என்று யோசித்தவன் அவள் முகத்தில் மெதுவாக ஊதினான்............ இதுவரை கண்ணை மூடியிருந்த கயல் தன் முகத்தில் சூடான காற்றுபடவும் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.............. இருமுறை கோபமாக மட்டுமே பார்த்திருந்த கண்ணனின் முகத்தை முதல்முறையாக இப்பொழுதுதான் சாதாரணமாக பார்த்தாள்.............பரவால்ல இவர சாதரணமா பாத்தா ஒன்னும் பயம் வரல.......... ஆனா இந்த மீசை கொஞ்சம் இவருக்கு அழகாத்தான்ல இருக்கு.............
“என்ன பாக்குற.............கீழே இறக்கிவிடவா......... இல்ல இன்னும் மயக்கம் வருதா..........”
“இல்ல இல்ல .......”..என்றவள் அவன் கையில் இருந்து இறங்கியவள்.......லேசாக தடுமாற...........
எட்டி அவள் கையைப் பிடித்தவன்.........அவள் தோளில் கையை போட்டு அணைத்திருந்தான்...........வா என்றபடி நடக்க ஆரம்பிக்க.......
இவர்களை பார்த்த காந்திமதிக்கு மனது நிறைந்தது............ராத்திரி இந்த பையன் பேசுனத பாத்து கொஞ்சம் பயமா இருந்துச்சு............இன்னும் சின்னப்புள்ள மாதிரி இருக்க நம்ம கயலை இந்தபுள்ள பொறுப்பா பாத்துக்கும்முன்னு நினைக்கிறேன்.............என்று நினைத்தபடி பார்வையை திருப்பியவர் எதிரே சுதா வந்து கொண்டிருந்தாள்...........அவளை பார்த்தவுடன் இவருக்கு நேற்று இரவு நடந்தது நினைவிற்கு வந்தது.
சுதா போனில் பேசியதைக் கேட்டு மயங்கி விழுந்த காந்திமதியை கண்ணனும் சகுந்தலாவும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர்...........
மண்டபத்தில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க கண்ணனிடம் வந்த சாவித்திரி
” தம்பி.........கண்ணா...... இந்த அப்பத்தா.......இந்த தாலியில கோக்குற நூல சாமி பாதத்துல வச்சு வாங்கித்தாறேன்னு சொன்னாங்க........... வேலையில மறந்துட்டாங்க போல............ வாப்பா நாம வாங்கியாந்து குடுத்துட்டமுன்னா நம்ம சொந்தகாரங்கள்ல இருக்குற ஏழு இல்லாட்டா ஒம்பது சுமங்கலிக சேந்து அத தாலியோட சேத்து கோர்த்து வச்சுருவாங்க...........”
“ஏம்மா இன்னேரத்துல எப்புடி அவுக வீட்டுக்குப் போறது........”.
“வீட்டுக்குள்ள போக வேணாம்பா........அப்புடியே கொல்லப்புறம் நின்னு ஒரு போன பன்னுனா அவுக வந்து குடுத்துட்டு போறாங்க............”
கொல்லப்புற வாசலுக்கு வந்தவர்கள் போனை எடுத்து பேசபோகும் போது காந்திமதியே கையில் ஏதோ ஒரு பொருளோடு வெளியில் வர கத்தி கூப்பிட்டு அடுத்தவர் கவனத்தை கவர வேண்டாம் என நினைத்து அவர் பின்னால் சென்றவர்களுக்கு சுதா பேசியது அப்படியே கேட்டது. கேட்டதும் இருவருக்கும் அதிர்ச்சியில் ஒன்றுமே பேசமுடியவில்லை..............
சுதாவின் பேச்சைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கிவிழப்போன காந்திமதியை அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த கண்ணனும் சாவித்திரியும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர.............
அவரை அப்படியே தூக்கிய கண்ணன் அங்கிருந்த கொல்லைப்புற வெளித்திண்ணையில் படுக்கவைத்தான்.......... சாவித்திரியோ அங்குள்ள செடிகளுக்கு செல்லும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தண்ணீரை தெளித்தார்.......”...ஆத்தா......ஆத்தா........எந்திரிங்க.......எந்திரிங்க...........”என்று காந்திமதி எழுப்ப........
.மயக்கம் தெளிந்து எழுந்த காந்திமதி சட்டென எழுந்து சென்று கொல்லைபுற கதவை வெளிப்புறமாக இழுத்து தாளிட்டார்......................
சாவித்திரியோ கோபத்துடன் காந்திமதியை பார்த்து......
“என்னத்தாயிது உங்க பேத்தி எவன்கிட்டயோ போன்ல பேசுது........அன்னைக்கு பொண்ணுகிட்ட சம்மதத்த கேளுங்கன்னு சொன்னதுக்கு உங்க பேத்தி என்னமோ நீங்க கிழிக்குற கோட்டைத்தாண்டாதுன்னு சொன்னீங்க............இப்ப இங்க என்ன நடக்குது...............”.என்று கேட்க
கண்ணனோ” அம்மா போதும் இதோட கல்யாணத்த நிப்பாட்டுங்க.........வாங்க எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்புவோம்..........நல்ல வேள இந்த விசயம் இப்ப தெரிஞ்சுச்சு இல்லையினா நாளைக்கு நம்ம குடும்பமேயில்ல கோயிலுக்கு வந்து அசிங்கப்பட்டிருப்போம்............இந்த பொண்ணுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா இப்புடி அமுக்கினி மாதிரி இருந்துகிட்டு எவன்கிட்டயோ இப்புடி போன்ல பேசும்.........குடும்பமா இது.........அழகர் மாமா சொன்னாரேன்னு குடும்பத்தப்பத்தி விசாரிக்காம வந்ததுக்கு நமக்கு இந்த அசிங்கம் தேவைதான்........... இன்னைக்கே பஞ்சாயத்தக் கூட்டுறேன்............நாளைக்கு எப்புடி அந்த பொண்ணு எவனையோ கட்டுதுன்னு பாக்குறேன்...............”.
காந்திமதி இவர்கள் இருவரும் இவ்வளவு பேசும் போதும் எதுவும் பேசாமல் கூனிக்குறுகிப் போயி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்..........கண்ணன் பஞ்சாயத்தை கூட்டுவேன் என்றதும் பதைபதைத்து
” ஐயா சாமி.......... பஞ்சாயத்த கிஞ்சாயத்த மட்டும் கூட்டிராதப்பா........... அப்பறம் நாங்க குடும்பத்தோட சாகுறத விட வேற வழியில்ல............”
சாவித்திரியோ” ஏம்பா பஞ்சாயத்தக் கூட்டியாவது இந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணுமா........”.
“ச்சீ.....ச்சீ ............இனி அந்த பொண்ணு சம்மதிச்சாக்கூட வேணாம்.........நம்மள இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிப்பாட்டுனாங்கள்ள.............அதுக்கு நமக்கு ஒரு நியாயம் கிடைக்க வேணாம்..........”.
“ஐயாசாமி நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க செத்தநேரம் பொறுமையா இருப்பா.............ஆத்தா சாவித்திரி கொஞ்சம் உன் மகன்கிட்ட சொல்லுத்தா........ இது இந்த வீட்டு பொண்ணுகளோட மானப்பிரச்சனை........கொஞ்சம் மனசு வைப்பா.........என்று கை எடுத்து கும்பிட்டு.............நான் போயி இந்த சுதாவ ஒரு நிமிசம் விசாரிச்சிட்டு வந்துருறேன்...............”.என்று கூற
சாவித்திரியும்” இருப்பா கண்ணா எதையும் எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யக்கூடாது...........ஆத்தாவும் போயி விசாரிச்சுட்டு வரட்டும்.....”
“அம்மா............”
“கொஞ்சம் பொறுமையா இரு கண்ணா....................”.
காந்திமதி” கொஞ்சநேரம் இங்கனக்குள்ள உக்காருங்க.......”.என்றவர் வீட்டிற்குள் நுழைந்து நேராக சுதாவின் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டார்...........