"நீ நுழைந்த நாள் முதலாய்
நீண்ட வரிசையில் நின்ற
எம் பெண்களின் பித்தளைக்குடம் தான்
பின்னுக்கு தள்ளப்பட்டது"
"குறுகிய காலத்தில்
குறிப்பிட்ட இடம் பிடித்தாய் எம் வாழ்வில்"
"குறைகளற்ற எங்கள் வாழ்வு
கொஞ்சமாய் சிதைய தொடங்கியது
குப்பையாய் மாறி நீ சிதையாத காரணத்தால்"
"குவியலாய் நீ குவிந்திருக்க
குற்றுயிராய் துடிக்கிறாள்
என் பூமித்தாய்"
"மரப்பொம்மைகளை மறந்தனர்
எம் மக்கள்
உன் வரவால்"
"சாப்பாட்டு கடைகளில்
இலையில் இன்பமாய்
உண்டு களித்த நாட்கள்
ஊரை விட்டு சென்றது
உன்னை கண்ட நாளில் இருந்து"
"கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் வித்தையறிந்த உன்னை
விலக்கி வைத்திட தான்
வெகுநாட்கள் ஆனது
எம் மக்களுக்கு"
"இருந்தும் எங்கோ ஓர் மூலையில்
உன் இருப்பு இருக்கிறது
சத்தமில்லாமல்"
"நீ செத்திட்டால் தான்
என் பூமி செழிப்பாகும் எனில்
செய்திடுவேன் அதை
என் பூமிமாதவிற்காக"
நீண்ட வரிசையில் நின்ற
எம் பெண்களின் பித்தளைக்குடம் தான்
பின்னுக்கு தள்ளப்பட்டது"
"குறுகிய காலத்தில்
குறிப்பிட்ட இடம் பிடித்தாய் எம் வாழ்வில்"
"குறைகளற்ற எங்கள் வாழ்வு
கொஞ்சமாய் சிதைய தொடங்கியது
குப்பையாய் மாறி நீ சிதையாத காரணத்தால்"
"குவியலாய் நீ குவிந்திருக்க
குற்றுயிராய் துடிக்கிறாள்
என் பூமித்தாய்"
"மரப்பொம்மைகளை மறந்தனர்
எம் மக்கள்
உன் வரவால்"
"சாப்பாட்டு கடைகளில்
இலையில் இன்பமாய்
உண்டு களித்த நாட்கள்
ஊரை விட்டு சென்றது
உன்னை கண்ட நாளில் இருந்து"
"கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் வித்தையறிந்த உன்னை
விலக்கி வைத்திட தான்
வெகுநாட்கள் ஆனது
எம் மக்களுக்கு"
"இருந்தும் எங்கோ ஓர் மூலையில்
உன் இருப்பு இருக்கிறது
சத்தமில்லாமல்"
"நீ செத்திட்டால் தான்
என் பூமி செழிப்பாகும் எனில்
செய்திடுவேன் அதை
என் பூமிமாதவிற்காக"