நீ என்பதே நான் தானடி -- டீஸர்

Advertisement

Sathya07

Well-Known Member
என் அடுத்த கதையிலிருந்து ஒரு சின்ன டீஸர் நட்புக்களே....

தலைப்பு – நீ என்பதே நான் தானடி..
நாயகன் – ரோஷன்
நாயகி – நிவியா

Niviya.jpg

சென்னை அடையாறில் உள்ள சிறிய பங்களா அமைதியுடன் காணபட்டது.. காலை 5 மணிக்கு எழுந்த தெய்வநாயகி பாட்டி, பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று தன் ஒரே மகன் மற்றும் மருமகளின் 30ஆவது திருமண நாள், அதற்காக சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த மீரா “ ஏன் அத்தை தனியா பண்றீங்க ? என்ன எழுப்பி இருக்க வேண்டி தான “
“பரவாயில்லை மா.. நீ காபி கலந்து எடுத்துட்டு வா… நான் இதோ அலங்காரம் பண்ணி முடிச்சிட்டேன். “
இருவரும் காபி குடித்து விட்டு காலை சமையலை கவனிக்க, ஒரு கார் வேகமாக வந்து போற்டிக்கோவில் நிற்கும் சத்தம் கேட்டது..
மீரா “ அத்தை நம்ம ரோஷன் தான் வந்திருப்பான்.. நான் சொன்னேன்ல எங்க இருந்தாலும் விசேஷம் நாளில் வீட்டுக்கு வந்திடுவானு.. “ என கூறி கொண்டே வெளியில் வந்தவர் அதிர்ச்சியாகி அதே இடத்தில் நின்றார்.
தெய்வ நாயகி பாட்டியும் பின்னாடியே வந்தவர் தன் பேரனை காண ஆவலாய் வாசல் வரை வந்தவர் அப்படியே நின்றார்.
அங்கு ரோஷன் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான். முதலில் சுதாரித்த பாட்டி,
“டேய் ரவீ.. ரவீ.. உன் புள்ள என்ன காரியம் பண்ணி கிட்டு வந்திருக்கான் பாரு… “
தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த ரவி அமைதியாக இருவரையும் பார்த்தவர் ,
“ஏன் டா லேட் ? நேத்தே உன்ன வர சொன்னேன்ல.. வாம்மா நிவியா.. வெல்கம் ஹோம் ?”
“என்னங்க இது ? நீங்க இவ்வளவு அமைதியா பேசறத பார்த்தா உங்களுக்கு விஷயமும் தெரியுமா? “
“மீரா.. நம்ம புள்ளைக்கு இன்னைக்கு நம்ம கபாலீஷ்வர் கோவிலில் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு… மருமக பேரு நிவியா.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவங்க கல்யாணம் உடனே நடக்க வேண்டியதா போச்சு.. வெளிய நிக்க வச்சு பேசாம ஆரத்தி எடுத்து உள்ள அனுப்பு.. அப்புறம் விலாவரியா சொல்றேன்”
தன் கணவர் கூறியபடி செய்தவர், தன் அழுகையை அடக்கிய படி உள்ளே சென்று விட்டார்.
ரோஷன் தன் தந்தையை பார்க்க , அவர் தான் பார்த்து கொள்வதாய் கண் காட்டி விட்டு மனைவி பின் சென்றார்.
அதிர்சியுடன் நின்ற பாட்டியின் அருகே நிவியை கூட்டி வந்த ரோஷன்,
“என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி “ என காலில் விழுந்தான், நிவியா காலில் விழாமல் இருக்க, அவள் கையை பிடித்து இழுத்து காலில் விழ வைத்தான்.
என்ன செய்வதென்று புரியாதவர் “ நல்லா இருங்கப்பா “ என கூறினார்.
நிவியா “பாட்டி என்ன தப்பா நிநைக்காதீங்க.. இந்த கல்யாணம்..” என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்த ரோஷன்,
“பாட்டி.. எங்க லவ் ஸ்டோரியை நான் அப்புறமா சொல்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு “ என கூறி விட்டு அவளை மாடியில் உள்ள தன் அறைக்கு இழுத்து சென்றான்.
“இங்க பாரு நிவி, நடந்த ஏதாவது வீட்டில் சொன்ன, ஹாஸ்பிட்டலில் இருக்கும் உன் அண்ணன் கதி தான் உனக்கும், மரியாதையா நான் சொல்றதை கேட்டு நட.. “
நிவியா “போடா பொறுக்கி.. “
“ஹஹஹா.. செல்லாக்குட்டி.. உன் புருஷன் பொறுக்கி இல்லைமா.. போலீஸ்.. நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு நான் என் வேலையை முடிச்சிட்டு வந்து பார்க்கிறேன்.. பை.. “

--- தொடரும்
 

laksh14

Well-Known Member
te
என் அடுத்த கதையிலிருந்து ஒரு சின்ன டீஸர் நட்புக்களே....

தலைப்பு – நீ என்பதே நான் தானடி..
நாயகன் – ரோஷன்
நாயகி – நிவியா

View attachment 6551

சென்னை அடையாறில் உள்ள சிறிய பங்களா அமைதியுடன் காணபட்டது.. காலை 5 மணிக்கு எழுந்த தெய்வநாயகி பாட்டி, பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று தன் ஒரே மகன் மற்றும் மருமகளின் 30ஆவது திருமண நாள், அதற்காக சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த மீரா “ ஏன் அத்தை தனியா பண்றீங்க ? என்ன எழுப்பி இருக்க வேண்டி தான “
“பரவாயில்லை மா.. நீ காபி கலந்து எடுத்துட்டு வா… நான் இதோ அலங்காரம் பண்ணி முடிச்சிட்டேன். “
இருவரும் காபி குடித்து விட்டு காலை சமையலை கவனிக்க, ஒரு கார் வேகமாக வந்து போற்டிக்கோவில் நிற்கும் சத்தம் கேட்டது..
மீரா “ அத்தை நம்ம ரோஷன் தான் வந்திருப்பான்.. நான் சொன்னேன்ல எங்க இருந்தாலும் விசேஷம் நாளில் வீட்டுக்கு வந்திடுவானு.. “ என கூறி கொண்டே வெளியில் வந்தவர் அதிர்ச்சியாகி அதே இடத்தில் நின்றார்.
தெய்வ நாயகி பாட்டியும் பின்னாடியே வந்தவர் தன் பேரனை காண ஆவலாய் வாசல் வரை வந்தவர் அப்படியே நின்றார்.
அங்கு ரோஷன் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான். முதலில் சுதாரித்த பாட்டி,
“டேய் ரவீ.. ரவீ.. உன் புள்ள என்ன காரியம் பண்ணி கிட்டு வந்திருக்கான் பாரு… “
தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த ரவி அமைதியாக இருவரையும் பார்த்தவர் ,
“ஏன் டா லேட் ? நேத்தே உன்ன வர சொன்னேன்ல.. வாம்மா நிவியா.. வெல்கம் ஹோம் ?”
“என்னங்க இது ? நீங்க இவ்வளவு அமைதியா பேசறத பார்த்தா உங்களுக்கு விஷயமும் தெரியுமா? “
“மீரா.. நம்ம புள்ளைக்கு இன்னைக்கு நம்ம கபாலீஷ்வர் கோவிலில் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு… மருமக பேரு நிவியா.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவங்க கல்யாணம் உடனே நடக்க வேண்டியதா போச்சு.. வெளிய நிக்க வச்சு பேசாம ஆரத்தி எடுத்து உள்ள அனுப்பு.. அப்புறம் விலாவரியா சொல்றேன்”
தன் கணவர் கூறியபடி செய்தவர், தன் அழுகையை அடக்கிய படி உள்ளே சென்று விட்டார்.
ரோஷன் தன் தந்தையை பார்க்க , அவர் தான் பார்த்து கொள்வதாய் கண் காட்டி விட்டு மனைவி பின் சென்றார்.
அதிர்சியுடன் நின்ற பாட்டியின் அருகே நிவியை கூட்டி வந்த ரோஷன்,
“என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி “ என காலில் விழுந்தான், நிவியா காலில் விழாமல் இருக்க, அவள் கையை பிடித்து இழுத்து காலில் விழ வைத்தான்.
என்ன செய்வதென்று புரியாதவர் “ நல்லா இருங்கப்பா “ என கூறினார்.
நிவியா “பாட்டி என்ன தப்பா நிநைக்காதீங்க.. இந்த கல்யாணம்..” என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்த ரோஷன்,
“பாட்டி.. எங்க லவ் ஸ்டோரியை நான் அப்புறமா சொல்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு “ என கூறி விட்டு அவளை மாடியில் உள்ள தன் அறைக்கு இழுத்து சென்றான்.
“இங்க பாரு நிவி, நடந்த ஏதாவது வீட்டில் சொன்ன, ஹாஸ்பிட்டலில் இருக்கும் உன் அண்ணன் கதி தான் உனக்கும், மரியாதையா நான் சொல்றதை கேட்டு நட.. “
நிவியா “போடா பொறுக்கி.. “
“ஹஹஹா.. செல்லாக்குட்டி.. உன் புருஷன் பொறுக்கி இல்லைமா.. போலீஸ்.. நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு நான் என் வேலையை முடிச்சிட்டு வந்து பார்க்கிறேன்.. பை.. “

--- தொடரும்
teaser ae super ah iruku... main story waiting pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top