நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 29

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
நீ நான்
தனித்திருக்கும் நேரம்
உன் இதழ்களும்
என் இதழ்களும்
பரிமாறும்
காதல் பாஷைக்கு
என்ன பெயர்???

இருவாரங்கள் கடந்திருக்க ஆபிஸிலிருந்து விரைவாக வீடு திரும்பியிருந்தாள் ஶ்ரீ..இரண்டு வாரங்களில் நன்கு தேறியிருந்தாள் ஹேமா... ராதாவின் கவனிப்பால் மசக்கையிலிருந்து சற்று விடுதலையடைந்திருந்தாள் ஹேமா... இருப்பினும் மார்னிங் சிக்னஸ் மட்டும் இருந்தது... இந்த இருவார காலத்தில் அனு கூறிய டாக்டரிம் ஹேமாவை அழைத்து சென்று வேண்டிய செக்கப் மற்றும் ஸ்கேனை செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் வைத்தியரின் ஆலோசனைகளையும் பெற்று வந்திருந்தனர்...
ஆபிஸிருந்து வந்த ஶ்ரீயை ராதா
“என்னடி சீக்கிரம் வந்துட்ட??” என்று கேட்க அவர் அருகே சென்ற ஶ்ரீ அவர் காதில் ஏதோ குசுகுசுக்க சரியென்று தலையாட்டியவரிடம் சத்தமாக
“இன்னைக்கு வர்க் ஏதும் இருக்கலை... அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்... ஆமா ஹேமா எங்க?? அவளை வார்க்கிங் கூட்டிட்டு போகலையா??”
“அவ ரூம்ல தான் இருக்கா...அவளை எதுக்கு வார்க்கிங் கூட்டிட்டு போகப்போற?? அதுவும் என்னைக்கும் இல்லாத வழமையா??”
“சும்மா தான் மம்மி.. குட்டிப்பையன் ஹெல்தியா இருக்கனும்ல... “
“அதெல்லாம் மூனு மாசம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம்... இப்போ வேணாம்...”
“இல்லை மம்மி.. சும்ம காத்து வாங்கிட்டு வர்றாம்னு பார்த்தேன்... அவளும் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தான் இருக்கா.. அதான்...” என்று ஶ்ரீ கூற
“சரி பார்த்து பத்திரமா கூட்டிட்டு வா...ஜூஸ் போட்டு வச்சிருக்கேன்.. அதையும் எடுத்துட்டு போ.. நீ குடிச்சிராத.... அது ஹேமாவுக்கு... புரிஞ்சிதா?? இருட்டுறதுக்கு முதல்ல வீட்டுக்கு வந்திடனும் சரியா??”
“சரி சரி... எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ஆர்டர் போடுற பழக்கத்தை மட்டும் ஏன் மம்மி விடவே மாட்டேங்குற??”
“என்னடி வாய் நீளுது...”
“எது எப்பவோ நீண்டுருச்சே... நீ இப்போ தான் பார்க்கிறியா??” என்றவளை அடிக்கத்துரத்தினார் ராதா.
அறையினுள் நுழைந்தவளை வரவேற்றாள் ஹேமா..
“என்னடி ஆண்டிக்கிட்ட திட்டு வாங்கினியா??”
“இல்லை பப்ளி... எப்பவும் போல மம்மி செல்லமா கொஞ்சிட்டு இருந்தாங்க.. அதான்..”
“அவங்களுக்கு உன்னை கொஞ்சிறதை தவிர வேற வேலை பாரு... சரி நீ என்ன இன்னைக்கு ஏர்லியா வந்துட்ட?? உன்னோட டமார் தலையன் உன்னை அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் குடுத்திருக்கமாட்டானே..??”
“அவன் என்னைக்குடி பர்மிஷன் குடுத்திருக்கான்?? அவன் இன்னைக்கு லீவு. அதான் விடு ஜூட்னு கிளம்பிட்டேன்..வா... அப்படியே பார்க்குக்கு போயிட்டு வரலாம்..”
“என்னடி ஆண்டிக்கிட்ட ஏதோ பூசுத்திட்டு இருந்தியேனு பார்த்தா என்கிட்டயுமாடி..?? இன்னைக்கு எதுக்கு உன் பப்ளி மேல திடீர் கரிசனம்??” என்று ஹேமா கேட்க ஶ்ரீயோ
“நான் எப்பவும் என் பப்ளி மேல கரிசனமா தான் இருப்பேன்..வீட்டுக்குள்ளேயே இருக்கனு வெளிய கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன்... ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க...”
“இல்லையே இதுல ஏதோ இடிக்கிதே...” என்று ஹேமா சந்தேகமாக பார்க்க ஶ்ரீயோ ஹேமாவின் வயிற்றருகே குனிந்து
“பாருங்க குட்டிபையா.. உங்க அம்மா என்னை சந்தேகமா பார்க்குறத?? உங்களுக்காக உங்க அம்மாவை பார்க்குக்கு கூட்டிட்டு போகலாம்னு பார்த்தா உங்க அம்மா ரொம்ப தான் பண்ணுறா..” என்று குழந்தையிடம் நியாயம் கேட்க
“ஆ ஊனா என் குட்டிக்கிட்ட நியாயம் கேட்க போயிர்ற.. குட்டிமா... ஶ்ரீ ஏதோ திருட்டுத்தனம் பண்ணுறா.. அவளை நம்பாதீங்க...”
“பப்ளி குட்டிப்பையன்கிட்ட என்னை பத்தி தப்பு தப்பா போட்டுகுடுக்காத... சொல்லிட்டேன்.. குட்டிபையா நீங்க அம்மா சொல்றதை கேட்காதீங்க.. நீங்க ஶ்ரீயோட செல்லம்.. சோ ஶ்ரீ சொல்லுறத தான் கேட்கனும்.. சரியா?? இப்போ ஶ்ரீ போய் ரெடியாகிட்டு வர்றேன்..அதுக்குள்ள அம்மாவ ரெடியா இருக்க சொல்லுங்க சரியா??” என்றுவிட்டு மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஶ்ரீ..
அவளது செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டே ஹேமாவும் தயாரானாள்...
இருவரும் கிளம்பும் போது ஹேமாவிற்கென்று ஒரு பையில் ஜூசை ஊற்றிக்கொடுத்த ராதா பல அறிவுரைகளுக்கு பின் இருவரையும் செல்ல அனுமதித்தார்... இருவரும் வெளியே வந்ததும் ஹேமா
“என்ன ஶ்ரீ அண்ணா வந்துட்டாங்களா?? இல்லை லேட்டாகுமா??”
“எந்த அண்ணாவை கேட்குற?? யாரு வருவா..?”
“அம்மா தாயே நடிக்காத.. தாங்க முடியலை.. உன்னோட ஆளை பார்க்க தானே என்னை சாக்கு சொல்லிட்டு கூட்டிட்டு வந்த??”
“அப்.படி....லா.. இல்லையே..”
“ஶ்ரீ உன்னை பத்தி என்னை தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்... சொல்லு.. அண்ணா வந்துட்டாங்களா???”
“எப்படிடி கண்டுபிடிச்ச??”
“நீ தான் ஐந்து ரூபாய்க்கு நடினா ஐயாயிரம் ரூபாயிற்க்கு நடிக்கிற... அதான் என்கிட்ட மாட்டிக்கிட்ட..”
“ஓ... எக்ஸைட்மெண்ட்ல கொஞ்சம் ஓவரா பர்போமன்ஸ் பண்ணிட்டேன் போல இருக்கு...”
“இப்போவாவது ஒத்துக்கிட்டியே... சரி அண்ணா வந்துட்டாங்களா??”
“ஆமாடி பார்க்கில் வெயிட் பண்ணுறாங்க... வா போகலாம்..” என்று ஹேமாவை அருகிலிருந்த பார்க்கிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ..
அங்கு ரிஷியுடன் ரித்வியும் வந்திருந்தான்...
“இவ எதுக்குடா.. இப்போ நம்ம ரெண்டு பேரையும் வரசொன்னா?? எதுக்குனு கேட்டா சொன்னா தான் வருவீங்களானு மிரட்டுறா.... இவ சொன்னாலேனு அடிச்சி புடிச்சி வந்தா இவளை இன்னும் காணோம்...”
“என்ன அண்ணா இதுக்கே சலிச்சிக்கிறீங்க.. இதெல்லாம் ஆரம்பம் தான்.. இன்னும் எவ்வளவோ இருக்கு... “
“நல்லா ஆரம்பம்டா.. இவ சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.. கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும்...”
“அய்யோ அண்ணா ப்ளீஸ் காமெடி பண்ணாத.. நீ அவளை கொஞ்சிட்டு அலைவியே தவிர கண்டிக்க மாட்ட...”
“அது என்னமோ உண்மை தான்டா.. அவளை பார்த்தாலே இருக்கிற கோபமெல்லாம் மறந்திடுது... என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை..”
“ஹாஹா.. இப்பவே இப்படினா கல்யாணத்துக்கு அப்புறம்... ம்ம்ம்.. நடத்துனா நடத்து...” என்று கூறி ரித்வி ரிஷியை கிண்டல் செய்தான்..
அப்போது ஹேமாவும் ஶ்ரீயும் பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர்...
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தூரத்திலேயே ஶ்ரீயை கண்டுகொண்ட ரிஷி அவளை நோக்கி செல்ல அவளோடு வந்துக்கொண்டிருந்த ஹேமாவை பார்த்த ரித்வி அவ்விடத்திலேயே சிலையாய் நின்றுவிட்டான்...
ஆஸ்பிடலில் அனுமதித்த அன்று பார்த்ததிற்கு பிறகு அன்று தான் பார்க்கிறான்.. அன்று போல் இல்லாது இன்று சற்று தெளிவாய் இருந்தது ஹேமாவின் முகம்... தலைமுதல் பாதம் வரை ஆராய்ந்தவன் தன்னவளை கண்களில் நிரப்பிக்கொண்டான்... இன்னொருவனின் மனைவி என்று மூளை இடித்துரைத்த போதும் காதல் மனமோ அந்த வாழ்க்கையை துறந்துவிட்டு உன்னை கரம்பிடிக்கவே அந்த சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கிறாள் என்று உரத்து கூறியது...
ஆனால் மூளையோ அவள் உன்னை மீண்டும் ஏற்பாளா என்ற கேள்வியை எழுப்ப ஏற்க செய்வேன் என்று மனம் பதிலளித்தது...
ரித்வி நின்ற நிலையிலேயே சிந்தனையில் உழன்றபடியிருக்க ரிஷியும் ஶ்ரீயும் ஹேமாவை அழைத்துக்கொண்டு அவனருகே வந்திருந்தனர்..
ஹேமாவோ அவனை நேருக்கு நேர் சந்திக்க துணிவின்றி தலைகுனிந்தபடியிருக்க இருவரையும் தன் பார்வையால் ரிஷியிற்கு காட்டிய ஶ்ரீ
“ரித்வி அத்தான்.. ஒரு சின்ன ஹெல்ப... கொஞ்ச நேரம்.. ஹேமாவுக்கு கம்பனி குடுங்க...நானும் அத்தானும்..”
“எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை... உன்னோட ப்ரெண்டுக்கு ஓகேனா எனக்கும் ஓகே..” என்று ரித்வி கூற தலையை உயர்த்தி பார்த்த ஹேமாவின் கண்களில் அத்தனை கலக்கம்.... மனம் விரும்பியவனை துறக்க நினைத்த போது கூட இத்தனை வலிக்கவிவ்லை... இன்று அவனின் வார்த்தைகளால் வேற்றாளாக்கப்பட்ட போது மனமோ சொல்லொண்ணா வேதனையை அடைந்தது... கண்கள் நீரை சொறிய தயாராக அதை வெளியேறும் முன் கட்டுப்படுத்தியவள் தலைகுனிந்து நின்றாள்..
அவள் தன் துக்கத்தை மறைக்க நினைத்த போதிலும் அது மூவர் கண்களிலிருந்தும் தப்பவில்லை... ஶ்ரீயோ ரித்வியை பார்க்க அவன் கண்களை மூடித்திறந்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சைகையால் உணர்த்த அமைதியடைந்த ஶ்ரீ
“ஹேமா அத்தான் உனக்கு துணையா இருப்பாரு... இந்தா ஜூஸ்.... குடிக்க மறந்துடாத... அப்புறம் என்னோட தாய்க்குலம் என்னை பிழிஞ்சி குடிச்சிடும்..இந்தா” என்று ஶ்ரீ நீட்ட அதை ரித்வி வாங்கிக்கொண்டு
“உன் ப்ரெண்டை பத்திரமா நான் பார்த்துக்கிறேன்... நீ வந்த வேலையை பாரு...” என்று கூற தாமதிக்காது ரிஷியை அங்கிருந்து தள்ளிக்கொண்டு சென்றாள் ஶ்ரீ..
அவர்கள் அங்கிருந்து சென்றதும் ரித்வி ஹேமாவை அங்கே ஒரு மரத்தினடியே போடப்பட்டிருந்த பென்சினருகே அழைத்து சென்றான்...
ரிஷியை அழைத்து சென்ற ஶ்ரீ மறைவான ஒரு இடத்தில் அமர அவளருகே அமர்ந்தான் ரிஷி...
“ஏன் அம்லு..... இதுக்கு தான் அவசரமா வானு கால் பண்ணியா??”
“ஆமா அய்த்தான்... சும்மா உங்கள வர சொல்லி எனக்கு என்ன யூஸ்??”
“அடிப்பாவி கட்டிக்கப்போறவனை அவசரமா வானு சொல்லிட்டு என்ன யூஸ்னு கேட்கிறியா?? நான் என்னமோ ஏதோனு இருந்த வேலை எல்லாத்தையும் பென்டிங்கில் போட்டுட்டு வந்தா நீ கூல என்ன யூஸ்னு கேட்கிறியா??”
“பின்ன என்ன அய்த்தான் பண்ணுறது?? உங்களுக்கு ரீசனை சொன்னா அந்த வர்க்கு இந்த வர்க்குனு சாக்கு சொல்லிட்டு இருப்பீங்க..அதான் இப்படி சொன்னேன்...”
“சரி அப்படியே ரித்வியை ஹேமாவையும் மீட் பண்ண வைக்கிறதுக்கு என்னை எதுக்கு அம்லு ரீசனா சொன்னா?? நீ தான் டிசைன் டிசைனா காரணம் யோசிப்பியே..அப்படி ஏதாவது ஒன்னை அடிச்சி விட்டி அவங்களை மீட் பண்ண வைக்கலாமே... அதை விட்டு இப்படி என்னோட வேலையை முடிக்கவிடாம இப்படி வாட்ச்மேன் வேலை பார்க்க வச்சிட்ட??”
“ஏன் அய்த்தான்... உங்களுக்கு வேலையத்தவிர வேற எதுவும் தெரியாதா??? பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அதையே கட்டிக்கிருங்க..” என்றவள் வாயில் முணுத்தாள்
“கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க நாம பிளான் பண்ணா இந்த அறிவு சிகாமணி வேலை போச்சே.. வெட்டி முறிஞ்சிச்சேனு புலம்பிட்டு இருக்கு.. கொஞ்சநாளா சரியா பேச முடியலையேனு நாம ஏங்கிபோயிருக்கோம்.. அதுக்கு அந்த நினைப்பிருக்கா பாரு..தத்தி..தத்தி...இதை வச்சிக்கிட்டு நான் என்னத்தை கிழிக்கப்போறேனோ தெரியலை..” என்று முணுங்கியவளின் முணங்கலை கேட்டவனுக்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை...
அமர்ந்திருந்த நிலையிலேயே பின்புறமாக கையினால் அவளை தன்னோடு இறுக்கினான் ரிஷி...
“என்ன என்னோட அம்லுக்கு கோபம் வந்திருச்சா... வர்க் டென்ஷனுல இருந்தப்போ நீ கால் பண்ணி கூப்பிட்டதும் எதுவுமே புரியலை.. மைன்ட்டும் வர்க்கை பத்தியே யோசிச்சிட்டு இருந்துச்சா... அதான் ஒன்னும் புரியலை.. சாரி அம்லு.. நீ அய்த்தானை பார்க்க தான் இப்படியொரு பிளான் போட்டனு இந்த மக்கு அய்த்தானுக்கு புரியலை அதான் அப்படி பேசிட்டேன்.. சாரி..” என்று ரிஷி மேலும் ஶ்ரீயையை பக்கமாய் அணைக்க அவன் தொடுகை தந்த கூச்சத்தில் நெளிந்தவள்
“அத்தான் விடுங்க... நாம பார்க்குல இருக்கோம்..யாராவது பார்த்துற போறாங்க...”
“யாரு பார்க்க போறா..?? யாரும் பார்க்ககூடாதுனு தானே இப்படி ஓரமா வந்து உட்கார்ந்த?? பிறகு யாரு பார்க்கப்போறா??” என்று ரிஷி கேட்க தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை உணர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து அதில் தன் முகத்தை புதைத்து கொண்டாள்...
அவளை இன்னும் இறுக்கியவன்
“என் அம்லுக்கு வெட்கமெல்லாம் வருதுடா.... சரி இப்போ ஸ்வீட் சாப்பிடலாமா??” என்று ரிஷி அவள் இதழ் நோக்கி குனிய தலையை இடமும் வலமாக ஆட்டியவள் அவன் தோளில் இன்னும் புதைந்து கொண்டாள்...அவளது வெட்கம் அவனினுள் ஒரு வித போதையை உண்டாக்க அதில் இன்னும் போதையானவன்
“அம்லு ப்ளீஸ்... ஒரு ஒருக்கா... ப்ளீஸ்.. “ என்று அவன் யாசகம் கேட்க அவளோ மறுத்துவிட்டாள்..
அவளிடம் ஸ்வீட்டை வாங்கிடவேண்டுமென்ற முடிவில் இருந்தவன் அவளிடம் கோபம் கொண்டது போல் அவளை அவனிடமிருந்து விலக்கிவிட்டு சற்று தள்ளி அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டான் ரிஷி...
அவனது கோபத்தை கண்டவளுக்கு அவனை நினைத்து பாவமாய் இருக்க அவன் கேட்ட ஸ்வீட்டை வேறு விதத்தில் அவனுக்கு கொடுக்க உத்தேசித்தவள் தனது மொபைலை எடுத்து அவனது மொபைலுக்கு அழைத்தாள்.. அது இவ்வாறு பாடியது...
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா
ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
ஹே ஹே ஹே ஹோலி கண்ணுல பீலிங் காட்டி தான்
காலி காலி பண்ணா
ஹே பிக்காலியா ரோட்டுமேலே பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா
ஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான்
கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
என்று ஒலிக்க அதை எடுக்காது அழிச்சாட்டியம் செய்தவனை மறுபடி மறுபடியழைத்து கடுப்பாக்கினாள் ஶ்ரீ..
ஒரு கட்டத்தில் முடியாமல் ஶ்ரீயல முறைத்தபடி அழைப்பை எடுத்து காதில் வைத்தவனது செவியை நிறைத்தது அழைப்பினூடாக வந்த முத்தங்கள்....
“அத்தான்..உங்களுக்கு ஸ்வீட்டு குடுக்க ஆசையா தான் இருக்கு.. ஆனா இங்க குடுக்க முடியாது.. சோ உங்களுக்கு இப்படி ஸ்வீட்டு தர்றேன்... உங்க போனை அப்படியே உங்க வாய்க்கிட்ட கொண்டு போங்க” என்று ஶ்ரீ கூற அவளை திரும்பி பார்த்து சிரித்தபடி மொபைலை வாயருகே கொண்டு செல்ல மீண்டும் முத்தங்கள் பறந்து வந்தது...
(போனை கண்டுபிடிச்சவன் மட்டும் இதை பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான்)
பறந்து வந்த முத்தங்கள் இடைவெளியில் நிற்க ரிஷியோ தன் முத்தங்களை அவனது மொபைலில் இருந்து மறுபுறம் பறக்கவிட்டான்..
“அம்லு.. உன்னோட இந்த ஐடியா வேற லெவல்... என்னமா யோசிக்கிற?? இனிமே உன்னை ஸ்வீட்டு கேட்டு அடிக்கடி தொந்தரவு பண்ணலாம்..”
“ஐயே... நினைப்பு தான்..அப்படியெல்லாம் சும்மா சும்மா ஸ்வீட்டு குடுக்கமாட்டேன்... இப்போ கூட குடுத்திருக்க மாட்டேன்..பாவம் பிள்ளைனு தான் குடுத்தேன்..இனிமே கல்யாணத்துக்கு பிறகு தான் ஸ்வீட்டு...அது வரைக்கும் நோ ஸ்வீட்டு...”
“இது போங்காட்டாம்..எனக்கு ஸ்வீட்டு வேணும்...கல்யாணத்துக்கு எவ்வளவு நாள் இருக்கு...?? அதுவரைக்கும் நோ ஸ்வீட்டு அப்படீங்கிறதெல்லாம் அநியாயம்... இதுக்கு எனக்கு இப்பவே நியாயம் கிடைக்கனும்..”
“இதுக்கு எல்லாம் எந்த கோட்டுலயும் நியாயம் சொல்லமாட்டாங்க...ஶ்ரீ கோட் மட்டும் தான் இதுக்கு பதில் சொல்லும்.. சோ நோ ஸ்வீட்டு... புரிஞ்சிதா??”
“புரியலை..எனக்கு எதுவும் ப்ராக்டிக்கலா சொன்னா தான் புரியும்..ப்ராக்டிக்கலா ஒருதடவை டெமோ காட்டேன்.. நான் புரிஞ்சிக்கிறேன்..” என்றவனை தன் கைகளால் மொத்தினாள் ஶ்ரீ..
ரிஷியோ சிரித்தபடி அவளது சில அடிகளை வாங்கிக்கொண்டும் சிலதை தடுத்துக்கொண்டுமிருந்தவன் அவள் எதிர்பாரா நேரத்தில் ஶ்ரீயை இழுத்து தனருகே கொண்டு வந்தவன்
“ ஒரு ஸ்வீட்டிக்கு நீ பண்ணுறது எல்லாம் ஓவர் அம்லு..??”
“என்ன ஓவர்..நான் அப்படி தான் பண்ணுவேன்....உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ அய்த்தான்..”
“என்னால என்ன முடியும்னு இப்போ காட்டுறேன்..” என்றபடி தன்னை நெருங்க முயன்றவனை தள்ளிவிட்டுவிட்டு போக்குக்காட்டி விளையாடினாள்..
அங்கு ரித்வியும் ஹேமாவும் பென்சில் அமர்ந்து சுற்றுப்புறத்தை வெறிக்கத்தொடங்கினர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top