நீ எந்தன் பருவகாலங்கள்!!

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
உன்னை பார்த்த அந்த நொடியில்
என் மனம் வானவில்லை போல்
வண்ணமாகியதாக உணர்ந்தேன்...
உன்னிடம் என் காதலை தெரியப்படுத்த
உன்னை சந்தித்த போது அதே மனம்
கார்மேகம் சூழ்ந்த நீலவானமாகியதாக
உணர்ந்தேன்...
நீ என் காதலை ஏற்ற போது
மனதில் அடைமழை பொழிந்ததாக
உணர்ந்தேன்..
நாம் இருவரும் காதல் பரிமாறும் தருணங்கள்
வசந்தகலமாய் இருந்தது..
நாம் இருவரும் சண்டையிடும் நாட்கள்
வெயில்காலமாய் என்னை சுட்டெரித்தது...
உன்னை சந்திக்காத நாட்கள்
இலையுதிர் காலமாய் மனதிற்கு சோர்வை அளிக்கிறது..
நீ என்னை பிரிந்த அந்த நொடி
என் வாழ்வு பனிக்காலமாய் மாறி
என் நெஞ்சை உறைய வைத்தது
ஏன்???
இளவேனிற் காலமாய் இருந்த
என் வாழ்வை பனிக்காலமாய் மாற்றினாய்
இதிலிருந்து எவ்வாறு மீளுவேன்
என் வாழ்வை மறுசீரமைக்க
என்னுடன் இணைவாயா
என் மனம் கவர்ந்தவளே???...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top