நீ இருக்கும் நெஞ்சம் இது …4

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கண்மணி ரெடி ஆயிட்டியா ரெடியாயிட்டு இருக்கேன் மா என்று, “சொல்லிவிட்டு தாயை கலக்கத்துடன் பார்த்தாள்” என்னாச்சு கண்மணி? ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் முகம். எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் மா. எனக்கு 22 வயசுதானே ஆகுது, இன்னும் 2 வருஷம் போகட்டும்.

அம்மா “உன் நல்லதுக்கு தான் சொல்வேன் கண்மணி” அப்பா நல்லா விசாரித்தார். உனக்கு பார்த்திருக்க பையன் “காலேஜ்ல பெரிய ப்ரொபசர் ஆம்”. உன்னோட ஆசைய சொல்வோம்., மொதல்ல வரட்டும்.

உன்ன பார்க்கட்டும், உனக்கு புடிச்சிருந்தா, மேற்கொண்டு உன் ஆசையை சொல்லி அவங்க கிட்ட பேசுவோம். இல்லன்னா, அப்பறமா யோசிக்கலாம். இப்பவே டென்ஷனாகாத கண்மணி இன்னும் தலையில பூக்கூட வைக்கல பார். சுபா இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவா’.

நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க எனக்கு, “அடுப்படியில் கொஞ்சம் வேலை இருக்கு”. இன்னும் அரை மணி நேரத்துல மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துருவாங்க. எனக்கு, என்னமோ இந்த இடம் நல்லபடியா அமையும் தோணுது .

கண்மணி என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள் சுபா, உள்ளதான் இருக்கேன உள்ள வா.

கண்மணி சூப்பரா இருக்கடி! என் மூஞ்சி இப்படி வச்சிருக்க. இல்லடி, எனக்கு வேலைக்கு போகணும்.கஷ்டப்பட்டு b.ed பிஎட் முடிச்சிருக்கேன். அதெல்லாம், பேசிக்கலாம் கண்மணி. நீ ஏன் இப்ப இதெல்லாம் யோசிக்கிற?

உனக்கு மொதல்ல பையனை பிடிச்சிருக்கா பாரு. இவர்கள், பேசிக்கொண்டிருக்கும்போதே ஆடி{AUDI} கார் சத்தம் கேட்டது. மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க போல இருக்குடி .



கண்மணியின் அம்மா மீனக்ஷி அவசர, அவசரமாக உள்ளே வந்தார். கண்மணி மாப்பிள்ள வீட்டில வந்துட்டாங்க. நான் கூப்புடுறப்போ வந்துடனும். சுபா கொஞ்சம் பாத்துக்கோ மா. நான் பாத்துக்குறேன் ஆன்ட்டி.

கண்மணிக்கு இப்பொழுதே, பதட்டத்தில் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. சுபா பயமா இருக்குடி பயப்படாதடி.கண்மணியின் அம்மா ரூமை நோக்கி குரல் கொடுத்தார். சுபா, கண்மணி அழைச்சிட்டு வாமா.

ஏய், கண்மணி வாடி போலாம் பயமா இருக்குடி .அவங்க, என்ன புலியா, சிங்கமா ஒன்னும் பண்ண மாட்டாங்க. இத்தனை பேர் இருக்கோம்ல உனக்கு வீட்லதான் டி வாயி.

கண்மணி பதட்டத்தோடு வந்து நின்றாள்.வாசுகி. வாசுகி வந்து அவள் கையை ஆதுரமாக பிடித்துக்கொண்டாள்.வி விமலும் இடது பக்கம் நின்று கொண்டான். கண்மணி உட்காரு மா.

என்று யசோதா சொன்னார். யசோதாவும், பிரபாகரன் சோபாவில் அமர்ந்திருக்க.

ஸ்ரீராம் விற்கும் ,சந்தோஷம் தனியாக சேர் போட்டு வைத்திருந்தார்கள். பெண்ணைப் பார்க்க ஏதுவாக. டேய் மாப்ள கிருஷ்ணா, உங்க மாமனார் உஷாரான ஆளுடா.ஏன் மாமா அப்படி சொல்ற?பாரேன் பொண்ண பாக்குறதுக்கு வசதியா, உனக்கு சேர் போட்டு கொடுத்திருக்கார். எனக்கு “அந்த சான்ஸ்” எல்லாம் இல்லவே, இல்ல டா. டைரக்டா கல்யாணம்தான்.

இரு, அக்கா கிட்ட சொல்றேன். உனக்கு ஏன் இந்த கொலவெறி? . உனக்கு குடும்பத்த உண்டாக்க வந்து, எனக்கு என் குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிடாத டா. எனக்கு, இருக்கிறது ஒரே பொண்டாட்டி . இதையும் அக்கா கிட்ட சொல்றேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
சந்தோஷ் யசோதாவின் தம்பியா?
அக்கா மகள் வாசுகியையே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு இப்படி நீ புலம்புவது அநியாயம், சந்தோஷ்
ஹா ஹா ஹா

பெண் பார்க்கத்தானே வந்திருக்காங்க
அதுக்கு எதுக்கு கண்மணி இப்படி பயப்படுறாள்?

என்னப்பா இன்னும் பழையபடியே கொலாப்ஸ்ஸாவே அப்டேட் வருது
கரெக்ட்டா மாற்றவில்லையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top