என் நெஞ்சத்தை மஞ்சமாக்க
வந்தவள் நீ!
என் தோள்வளைவில் உலகை
காண வந்தவள் நீ!
என் விரல் கோர்த்து நகர்வலம்
வர வந்தவள் நீ!
உன் சிரிப்பால் என் துக்கம்
மறக்க வந்தவள் நீ!
உன் குறும்பால் என் தூக்கம்
கலைக்க வந்தவள் நீ!
தேவதைகள் அளித்த வரம்
நீ இல்லை...
வரமாய் வந்த தேவதையே
நீ தான்!!!!