தேவதையிடம் வரம் கேட்டேன் P4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் செல்லம்ஸ் குட்டி டீசெர் தான் என்ஜோய்.:):)

images (13).jpg

"ஹாய் மதி"



"சாபின்ஸ்பெக்டர் மதியழகி" பெண் சிங்கம் சீற ஒரு நொடி அமைதியாக இருந்த மறுமுனை



"அக்ஷய் சாம்ராட் ஹியர்"



"எஸ் மிஸ்டர் அக்ஷய்"



"மிஸ் மதி. நான் கமிஷ்னர் கிட்ட பேசிட்டேன். நீங்க போர்மல் ட்ரெஸ்ஸில் வரலாம். யூனிபார்ம் அவசியமில்லை" என்றவன் அலைபேசியை அனைத்திருந்தான்.



"என்ன நினைச்சி கிட்டு இருக்கான் இவன்? ஜனாதிபதியென்றா? ப்ரைமினிஸ்டர் என்றா? அவன் இஷ்டத்துக்கு ஆடர் போடுறான். பதில் பேச முன்பே போன வேற கட் பண்ணுறான். கொஞ்சம் கூட மோர்னர்ஸ் தெரியாதவன்" கோபமாக கத்தியவாறே கமிஷ்னரை அழைத்து அரைமணித்தியாளமாக அக்ஷையை வசை பாடியவள் கமிஷ்னர் சொன்ன "டூ வாட் ஐ சேய்" இல் அலைபேசியை அனைத்து விட்டு அவரையும் வசை பாடலானாள்.



"யாரு டி அந்த அக்ஷய்" லட்சுமி ஆவலாக கேக்க



அன்னை அவளிடம் என்ன எதிர் பார்க்கின்றாள் என்று நொடியில் புரிந்துக் கொண்ட மதியோ அக்ஷையின் மேல் இருந்த கடுப்பில் இன்ஸ்பெக்டர் சித்ரா சொன்ன தகவலை சொல்ல முகம் சுளித்த முத்துலட்சுமி



"கருமம் கருமம் இதெல்லாம் என் காதுல கேக்க வேண்டி இருக்கே, உனக்கு வந்து விடியிறதெல்லாம் இப்படி இருக்கு. போன ஜென்மத்துல என்ன பாவம் பன்னோமோ!"



"போன ஜென்மம் என்ன? இந்த ஜென்மத்துலயே நீ எனக்கு பண்ண பாவம் ஒன்னு போதும்" ராஜவேலு முத்துலெட்சுமியை சுற்றி சுற்றி வந்து சொல்ல



"மதி உங்க அப்பா கிணத்துக்குள்ள இருந்து பேசுற மாதிரி கேக்குது டி"



"போய் தூங்குமா... " அன்னையை அனுப்பியவள் தந்தையை முறைத்து விட்டு தனதறைக்குள் புகுந்தாள்.

images (7).jpg


"யார் நீ..."



"சாபின்ஸ்பெக்டர் மதியழகி"



"யார் மதி இந்த ரெண்டும் கேட்டான்" ராஜவேலுதான் கேட்டான்.



மதியும் அவனைத்தான் ஆராய்ச்சி பார்வை பாத்திருந்தாள். கோட் சூட்டில் இருந்தாலும் உள்ளே பெண்கள் அணியும் சட்டையை அணிந்து கழுத்தில் மாலையும், விரல்களுக்கு நிறப் பூச்சும், உதட்டை லிப்ஸ்டிக், கண்மை வேறு பூசி இருக்க, தான் ஒரு திருநங்கையென்று சொல்லாமல் சொன்னான்



வாயில் சுவிங்கத்தை மென்றுக் கொண்டிருந்தவன் "எதுக்கு வந்திருக்குறீங்க? டொனேசனா?" கொஞ்சம் எள்ளலாக ஒலித்தது அவன் குரல்



"மிஸ்டர் அக்ஷய்க்கு பாதுகாப்பு வழங்க வந்திருக்கேன்" குரலில் கம்பீரம் தெறிக்க மதி.



சத்தமாக சிரித்தவன் கையை மடக்கி வாயில் வைத்து சிரிப்பதை நிறுத்தி "ஆர் யு கிட்டிங்" ஏதோ பெரிய ஜோக் போல் சுவிங்கத்தை மெல்ல ஆரம்பிக்க,



கட்டுக்கடங்காத கோபம் மதிக்கு சுர்ரென்று ஏற, பல்லைக் கடித்து பொறுத்தவள் "ஹூ ஆர் யு மேன்?" அமைதியாகவே கேட்டாள்.



"இவன் மேனா? வுமனானே அவனுக்கு தெரியல, இவனையெல்லாம் மதிச்சு பேசிக் கிட்டு தல்ல ரெண்டு தட்டிட்டு உள்ள போ மதி" ராஜவேலு கடுப்பாகி சொல்ல தந்தையின் பேச்சை செவிசாய்க்காது வழி மரித்தவனின் பதிலை எதிர்பார்த்து நிக்க



"வெல் ஐம் பிர்ஜு. இங்க எல்லாமே நான் தான். என் கீழ தான் எல்லாரும் வேல பாக்கணும்"


images (2).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top