துயர் துடைத்திட்ட தோழமைகளுக்கு

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"துன்பத்தால் துடித்திருந்த இதயம் அதில்
இதமாய் தென்றல் வீசியது
எனக்காக துடித்திட்ட
என் தோழமைகளின்
தூய அன்பு அதனில்"


"நன்றி சொல்லி உங்களை
நகர்த்திட விரும்பவில்லை
நட்பு கரம் நீட்டுகிறேன்
அதில் கடல் சேர்ந்த
நதியாய் ஆவோம் வாரீர்"


"நட்பிற்க்கு முகவரி தேவையில்லை
முகம் தெரியாத போதும்
என் துயர் கண்டு கலங்கிய
உங்கள் கண்ணீர் போதும்
நட்பென்னும் கோவிலின்
கும்பாபிஷேகத்திற்க்கு"


"துயர் துடைத்த தோழமைகளே
பாரதியின் தூய சுடர் வானொளி கண்டேன்
உங்களின் தூய அன்பினில்"


"விழிக்க முடியாத
துயில் அது செல்லும் வரை
தூய உங்கள் நட்பு வேண்டும்"


"என் நினைப்பு இது
நிஜமாகுமா?"


" நம் நட்பு அது
நாளும் தொடருமா
பதில் வேண்டி பாவை நான்"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top