தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட தமிகழம்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"சுங்க சாவடி போட்டு
சுகமாய் சாலையிலே வசூல் செய்கிறான்
கோடிகளில் தனியார்
அவனிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழத்தால்"


"குடிக்கும் நீர்
குறையின்றி கிடைக்க
காத்து கிடக்கும் நிலை
காரணம்
தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட
தமிழகத்தால்"


"அரசின் ஆளுகையில்
செயல்பட வேண்டியன்
ஆரவாரமாய் செயல்படுகிறான் அவனிடம்
தாரை வார்க்கப்பட்ட தமிழகத்தால்"


"தனியார் தயவு நாடி
தன்நிலை இழந்து நிற்கிறது தமிழகம்"


"வயல்வெளி அழித்தான்
வரிசையாய் கட்டிடம் அடுக்கினான்
நீர்நிலை கெடுத்தான்
நிலத்தை நாசம் செய்தான்"


"வற்றாத வைகையும்
காயாத காவேரியும்
தாரை வார்க்கப்பட்ட தமிழகத்தால்
தள்ளாடி நிற்கிறது"


"செல் போன் கோபுரங்களும்
மருத்துவ கழிவுகளும்
மலை போல் நிற்கிறது
தமிழகத்தின் வளர்ச்சி பாதையினை மறைத்து"


"கல் தோன்றி
மண் தோன்றா காலெத்தே
வாளோடு முன் தோன்றிய
மூத்தக் குடி
இன்று
முள் படுக்கையின் மேலே"


"விவசாயம் காத்தவன்
விஷம் அருந்தும் நிலை
விவசாய் நிலமெல்லாம்
விளைநிலமாய்
பட்டதாரியில் நிலையோ பரிதாபமாய்"


"எட்டு வழி சாலையில்
எவரெஸ்ட் எட்டிடத் தான்
சோலையெல்லாம் நாசம் "


"சொர்க்க பூமி
சோக பூமியாய் இன்று"


"ஊருக்கே உணவிட்டவன்
உயிர் விடும் நிலையிலே
ஊடுருவி வந்தவன்
உயர்ந்த நிலையிலே"


"தனியாரிடம்
தாரைவார்க்கப்பட்ட தமிழகமே
விழிப்பு கொள்"


"இல்லையேல்
தமிழகம் இருந்தது
அது தனியாரிடம்
தாரைவார்க்கப்பட்டதால்
தரைமட்டமானது எனும் நிலை
எட்டி விடுவாய்
நினைவில் கொள்"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top