சித்திரையில் பிறந்த சித்திரமே 2

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ஏழு வருடங்களுக்கு பிறகு
தந்தை சேகரையே அனைத்து செயல்களிலும் உரித்து வைத்து இருக்கும்
தன் மகளிற்க்கு லெட்சுமி என்றே பெயரிட்டார்.
பெயருக்கேற்றார் போல் அவள் பிறந்த தினத்திலிருந்து அவருக்கு எந்த விதத்திலும் தோல்வியே கிடையாது.
லெட்சுமியும் அவள் தாய் பத்ராவை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டாள்.
சேட்டை என்றால் அவ்வளவு சேட்டை இதற்க்கெல்லாம் அவள்
அப்பாவும் துணை.யார் உன்னை என்ன சொன்னாலூம் அடித்து விட்டு வந்து விடு அப்பா என்று அப்பாவின் அறிவுரை வேறு கேட்கவும் வேண்டுமா அவளை.
அன்றும் அப்படித்தான் பள்ளியில் யாரையோ அடித்து வந்து விட்டால்
அழைக்க போன பத்ரா அவர் கணவரிடம் தந்தைக்கும் மகளுக்கும்
பாராட்டு விழா நடத்தி கொண்டிருந்தார் உங்களால் தான் அவள் கெட்டு போகிறாள் என்று அவற்றை எல்லாம் காதல் கணவராக சமாளித்தவர்
மகளிடம் வந்து ,ஏன்டா பாப்பா அடிச்ச என்று கேட்க அதற்க்கு அவள் கொடுத்த பதில் இருக்கே
அந்த ரோகித் என்ன கருவாச்சினு சொன்னான் பா,அதான் பா அவன அடிச்சேன் என அழுtது கொண்டே சொல்ல
நீ எதுக்கு அழுகுற முதல்ல கண்ண துடை
நீ அவன் அப்படி சொன்னதுக்கு ஏன் அழுகனும் ஆமாண்டா நான் கருப்பு
தான் தைரியாமா சொல்லனும் டா,ஏன்னா நம்ம
கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் போது சாமி என்ன கலராவா பாப்பா
இருக்குது இல்லைதான,நம்ம அதுனால தான நாம சாமியை பார்த்து கை
எடுத்து கும்பிடுறோம்.அவனுக்கு உன்ன பார்த்து பொறாமைடா பாப்பா
நீ கருப்பா இருக்கனு என்று அவர் சொல்லி முடிக்கு முன்
அப்ப நான் சாமியா பா என அவள் மீன் போன்ற விழியினை விரிக்க
அவள் கண்களில் முத்தமிட்டு நீ எனக்கு எப்போதுமே சாமி தான் பாப்பா
என கூறிய நிமிடம் தன்னிடம் இருந்து துள்ளி ஓடும் மகளையே பார்த்துக்கொண்டு நாற்காலியியே சாய்ந்து அமர்ந்தார் பாரதியின் பாடல் வரியின் நினைவுகளோடு
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)


பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)


ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி


உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.


கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.


உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

சித்திரம் சிந்தும்…………..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top