காலைச்சுகம்

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தன் கதிர்களை பரப்பிய்வாறு
கதிரவன் தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில்
பனித்துளிகளை சுமந்த வண்ணம்
பச்சை பசேல் என்று
படர்ந்து நிற்கும் புற்தரையில்
வேரோடி படர்ந்த் அடர்ந்து
வளர்ந்து நிற்கும் விருட்சத்தின்
ஒரு பாகமான
மிட்டாய் நிற பூக்கள்
விருட்சத்தின் அடிப்பகுதியை
முற்றுகையிட்டிருக்க
இப்படையெடுப்புக்கு நானே
தளபதி என்ற வண்ணம்
தன் ஒற்றை காலை தூக்கியவாறு
காவல் நிற்கும்
வெண்ணிற கொக்கு....
இயற்கையின் கலை நயம் மிக்க
இவ்வமைப்பினை காண
யான் அப்பாதையை
கடந்தது அந்நாளின்
நான் அடைந்த பாக்கியமா??
இல்லையேல் பெற்ற வரமா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top