காத்திருக்கின்றேன் உன் வரவுக்காக!!!

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
என் வாழ்வில் கிடைத்த
அரிய பொக்கிஷமான உன்னை
தொலைத்த போது எனக்கு
தெரியவில்லை....
நீ என் வாழ்வின் விடிவெள்ளி என்று!!
உன் பிரிவை உணரத்தொடங்கிய போது
உன் மீதான என் காதலை உணர்ந்தேன்!!
அன்று நீ எனக்கு அளித்த
சிறு அன்பளிப்புக்கள்
இன்று உன் நினைவை சுமந்து நிற்கும்
நியாபகச் சின்னங்கள்!!
அன்று உன் கொஞ்சும் மொழியை
கேட்க விரும்பாத என் செவியிரண்டும்
இன்று உன் ஒற்றை வார்த்தைக்காக
ஏங்கி நிற்கிறது!!
நீ என்னை பிரிந்த நொடியில்
உன் விழியிரண்டும்
வெளிப்படுத்திய வலியை
அன்று உணர மறுத்த
என் மனம்
இன்று உன் பிரிவால்
உணர்ந்து வருந்தியது....
உன் ஆத்மார்த்தமான காதலை
உணராது
வார்த்தைகளால் உன்னை
கிழித்தெறிந்த
இந்த பாவிக்கு
சாபவிமோசனமான
உன் வரவு
எப்போது???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top