காதல் அணுக்கள் -19

Advertisement

Kalki

Writers Team
Tamil Novel Writer
Hai Makkale,

Ellorum epadi irukeenga. ennaiyum kathaiyaiyum ellorum maranthirupeenganu ninaikuren. Sorry friends ennale sila reasons nala regular updates koduka mudiyale. but story half way la vitutu pogavum pudikale so innum 2 or 3 episodes la story elluthi mudichuruven. Story continuous ah padichitu irunthavangaluku romba romba sorry friends. Padichitu ungalala mudincha comment panunga pa.



காதல் அணுக்கள் -19


சாலை நெரிசலை தவிர்க்க விடியலிலே புறப்பட்டனர் திரு அண்ட் திருமதி சந்தீப் . இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். சந்தீபோ தனது நீண்ட நாள் காதலை அவளுக்கு இந்த ட்ரிப்பில் கூறிவிட நினைத்திருந்தான் . அதுவும் ஒரு ரம்மியமான இடத்தில அழகான சந்தர்ப்பத்தில் கூற வேண்டும் எனவும் அதன் பொருட்டு சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான் . சுபியோ கொலை வெறியுடன் அவள் பெஸ்புக்கை பார்த்து கொண்டிருந்தாள் . அதற்கு காரணம் அவள் ஆருயிர் நண்பன் அருணே ஆகும் . ஹாப்பி ஜெர்னி வைட்டிங் போர் லடூஸ் என்று சில பல ஸ்மைலிஸ் போட்டு அவள் வாலில் போஸ்ட் செய்திருந்தான் . இந்த பக்கி இப்படி பப்பிளிக்கா போட்டு மானத்தை வாங்குறானே என்று தலையில் அடித்து கொண்டாள் .

" ஹே என்னாச்சுடா ? எதாவது மறந்துட்டியா ?" என்று அக்கறையாக கேட்ட சந்தீப்பிற்கும் முறைப்பையே பதிலாக தந்தாள் . எதுக்குடா செல்லம் ரொமான்டிக்க பாக்குறே, மாமா அவ்வளவு அழகாவா இருக்கேன் என்று அவளை சீண்டிக்கொண்டிருந்தான் .

காமெடி ஹ்ம்ம்.. நான் வேண்ணா திருப்பதி ரீச்சானதுக்கு அப்புறம் சிரிக்கட்டுமா என்று கடுப்பாக கேட்டவளை பார்த்து சந்தீப்பிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது. டேய் சும்மா இருக்குற சொர்ணாக்காவை சொறிஞ்சு விட்டே அப்புறம் நீ ஹனி மூன் போயும் பலகானில தான் தூங்கணும் பாத்துக்க என்று அவன் மூளை அறிவுறுத்த . தேங்க்ஸ் டூட் நல்ல நேரத்துக்கு ஞாபகப்படுதுனே என்று அதனுடன் ஹய் பை கொடுத்துக்கொண்டான் . அதன் பிறகு அங்கு சற்றுநேரம் இளையராஜா மட்டுமே அந்த காரில் ஆட்சி செய்தார் . நேரத்தில் எழுந்ததால் சுபியும் தூங்கிபோனாள் .


சற்று நேரம் பொறுத்து எழுந்த சுபி தூக்க கழகத்தில் அங்கிருந்த போர்டுகளை பார்த்தால் எல்லாம் ஜிலேபியை பிச்சுப்போட்டது போல இருந்தது அப்போ தமிழ்நாட்டை தாண்டிடம் என்று நினைத்துக்கொண்டு என்னங்க பசிக்குது சாப்பிடலாமா ? சுர் நீ எந்திருக்குறதுக்கு தான் வைட்டிங். அங்கிருந்த ரெஸ்டாரண்டில் இருவரும் அமர்ந்து சாப்பிட்டு இருக்கும் பொது தான் அது கர்நாடக என்று கண்டுகொண்டாள் பின் கேள்வியாக அவளவனை பார்த்தாள் . அவள் கண்களில் இருந்த கேள்வியை உணர்ந்தவன் மயக்கும் புன்னகையை சிந்தி அழகாக கண்ணடித்து வெயிட் போர் தி சர்ப்ரைஸ் என்றான் . சுபிக்குள் இருந்த மன சுணக்கம் போயி மண்டை முழுவதும் என்னவாக இருக்கும் என்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது .

சொல்லுங்க சந்தீப் ப்ளீஸ் . வெயிட் போர் பியூ ஹௌர்ஸ் பேபி என்றவன் அவள் தோளை சுற்றி அணைத்தவாறு அவளை காருக்கு அழைத்து சென்றான் . திருப்பதிக்கு போகாமல் வேறெங்கோ செல்கிறோம் என்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இனி என்ன கேட்டாலும் அவனிடம் பதில் வராது என்று அறிந்தவள் வெளியே வேடிக்கை பார்த்து வந்தாள் . சிக்மங்களூர் போகும் வழியில் அத்தனை இயற்கை அழகு நிறைந்திருந்தது . அங்கங்கே இருந்த நீர் ஊற்றுகளும் மலை முகடுகளும் அவளை முற்றிலும் பரவசமான மனநிலையில் வைத்திருந்தது .


அவர்கள் கார் ஒரு ரெசார்ட்க்கு முன்னால் நின்றதும். கீழே இறங்கிய சுபியை "வெல்கம் டு சிக்மங்களூர் " என்று அவள் கரத்திற்குள் அவன் கரம் கோர்த்து அழைத்து சென்றான். அந்த ரெசார்ட்டின் பிரம்மாண்டத்தில் மலைத்து தான் போனாள் . இது வரை அவள் வாழ்க்கையில் பார்த்திராத பல வண்ண மலர்களை கொண்ட பூங்கா மற்றும் அர்ச்கள் ஆங்கங்கே அமைத்திருந்தது . அவள் அதனை ரசித்திருந்த நேரம் சந்தீப் சென்று செக்கின் செய்து தங்கள் ரூமின் சாவியை வாங்கிவந்தான் . பின் இருவரும் தங்கள் அறைக்கு வந்தனர். அது அறை என்பதைவிட ஒரு சிறிய வீடு என்று தான் சொல்லவேண்டும் . ஒரு வரவேற்பறை ,படுக்கை அறை மற்றும் விசாலமான பால்கனி இருந்தது. படுக்கை அறைக்குள் வந்ததும் அவளை பின்னுருந்து அனைத்து டூ யு லைக் மை சர்ப்ரைஸ் ?என்றவனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்று அவன் கன்னத்தில் எம்பி முத்தம் வைத்தாள் சுபி. கன்னத்துல தானா என்று கேட்டவனை பொய்யாக முறைத்து திருப்பதிக்கு போறோம்னு என்ன ரெண்டு நாள் மண்டைக்காய விட்டீங்க தானே உங்களுக்கு இதுவே அதிகம் என்று போக போனவளை இழுத்து ஹனிமூன் வந்துட்டு கன்னத்துல கிஸ் பண்ணா அபச்சாரம் அபச்சாரம் என்று அவளை பேசவிடாமல் அவள் இதழ்களை சிறைசெய்தான் .

பயண கலைப்பு போக இருவரும் குளித்து அந்த ரெசார்ட்டையே சுற்றி வந்தனர் . அங்கிருந்த பூங்காக்களில் இருவரும் பல செல்பிகள் எடுத்து கொண்டு அங்கிருந்த பல்வேறு இண்டோர் அண்ட் அவுட்டோர் கேம்ஸ் அனைத்திலும் இருவரும் பூந்து விளையாடி ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டும் கலாய்த்து கொண்டும் காதல் பார்வை வீசி கொண்டும் இருந்தனர் .

நாளைக்கு சைட் சீய்ங்க்கு எங்க போகலாம் என்ற சுபியை முறைத்தவன் முதல்ல உன்னை சுத்திபாக்குறேன் அப்புறம் ஊரை சுத்தி பார்க்கலாம் . இப்போ வா ரூம்க்கு போகலாம் என்று அவளை இழுத்து சென்றான் . ஹனி மூன் கபிள்ஸ் என்றதால் இவர்கள் ரூமை மலர்களால் நன்கு அலங்கரித்து இருந்தனர். உள்ளே நுழைந்த சுபிக்கு தங்கள் முதலிரவு நினைவு வந்தது . ஹ்ம்ம் நம்ம பர்ஸ்ட நைட் ரூமை ஒழுங்கா பார்க்க கூட டைம் தரல
இவரு என்று சந்தீப்பை தான் ஓர கண்ணில் பார்த்து கொண்டிருந்தாள் . சந்தீப் அவளை குறுகுறு என்று பார்ப்பதை பார்த்து தானாக அவள் கன்னங்கள் சிவந்து சூடேறியது . கதவை தாழிட்டு வந்தவன் அவன்பெட்டியில் இருந்து ஒரு அழகிய டிரெஸ்ஸை பரிசளித்தான் . இதை போட்டுட்டு வா .

ட்ரெஸ்ஸையும் அவனையும் மாரி மாரி பார்த்தவள் டேய் உனக்கு இப்படி எல்லாம் கூட ரொமான்ஸ் பண்ண வருமா என்று மனதுக்குள் நினைத்தபடி விழி விரித்து நின்றவளை பார்த்து கண் சிமிட்டியவன் போ போய் மாத்திட்டுவா அப்புறம் மாமா அதுக்கு சரிப்பட்டு வருவன இல்லையா என்று பார்க்கலாம் . அதில் அதிர்ந்தவள் நான் மனசுல நினைச்சது இவனுக்கு எப்படி தெரியும் என்று குழம்பியவாரு உடை மாற்ற சென்றாள் .

சுபிக்கு அந்த பிளாக் ஷிம்மர் பார்ட்டி கவுன் மிகவும் பொருத்தமாக அழகாக இருந்தது.என்ன தான் மனைவி என்றாலும் அவன் வாங்கிய உடை டீசென்ட் ஆகவே இருந்தது. சுபி ஜீன்ஸ் டாப்ஸ் அணிபவள் தான் ஆனால் பேஷன் என்ற பெயரில் இறுக்கி உடை அணிவது அறவே பிடிக்காது . தன் கணவனும் அதை மனதில் வைத்தே தனக்கு உடை வாங்கியது அவன் மேல் இன்னும் மரியாதையும் காதலும் கூட்டியது .

அவள் வெளியே வந்ததும் அங்கு பிளாக் ஷர்ட் பெடெட் ப்ளூ ஜீனில் நின்றவனை வஞ்சனை இல்லாமல் சைட் அடித்தாள் . பின் இருவரும் அந்த வரவேற்பறையில் அமைந்திருந்த காண்டில் லைட் டின்னர் டேபிளில் அமர்ந்தனர் . சுபிக்கு இதெல்லாம் ஏதோ பெரிடையில் போல இருந்தது . இத்தனை நாள் அவளை காயவிட்டதெற்கெல்லாம் சேர்த்து கவனித்து கொண்டிருந்தான். அவன் அவளை மிகவும் ஸ்பெஷல் ஆக உணரச்செய்தான். ஓவ்வொரு பெண்ணும் தன்னவனிடம் எதிர்பார்ப்பது இது தானே ..

சிறிது நேரம் தங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் பின் பொறுப்புள்ள உடன் பிறப்புகளாக பாலாஜி சந்தியா திருமணத்திற்கு இன்னும் என்னென்ன வேலைகள் இருக்கிறது ,என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆலோசித்தனர். திடீரென சுபி அச்சச்சோ மறந்தே போச்சு என்றாள் . என்ன ஆச்சு என்ற சந்தீப்பிற்கு பதில் சொல்லாமல் அவசரமாக அவள் பெஸ்புக்கை ஓபன் செய்து சிக்மங்களூர் என்று சந்தீப்பை டேக் செய்து செல்பி போட்டு செக் இன் செய்தாள். பின் அவளையே பதிலுக்காக பார்த்திருந்த சந்தீப்பை நோக்கி ஹி ஹி என்று சமாளித்தவள் நீங்க பாட்டுக்கு திருப்பதி போறோம்னு சொல்லிடீங்க எல்லாரும் என்னை எப்படி ஒட்டியெடுத்துட்டாங்க தெரியுமா அதுதான் சிக்மங்களூர்னு செக் இன் பண்ணேன் என்றாள் . வாய்க்குள் அடக்கிய சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் . சாப்பிட்டாச்சா வா உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு என்றான் . ஒரு நாள்ல எத்தனை சர்ப்ரைஸ் என் சின்ன இதயம் தாங்காதுங்க என்றவளை அலேக்காக தூக்கி சென்று பால்கனியில் மலர்களினால் அலங்கரிக்க பட்ட ஊஞ்சலில் அமர்த்தினான். சுபிக்கு ஊஞ்சல் என்றால் சின்னத்தில் இருந்து மிகவும் பிடிக்கும்.அவள் பாட்டி ஊருக்கு போகும் போதெல்லாம் சாப்பிடுவது தூங்குவது எல்லாமே ஊஞ்சலில் தான். அதை பேச்சுவாக்கில் சித்ரா மூலம் அறிந்தவன் ரெசார்ட்டில் சொல்லி அவளுக்காக தங்கள் அறையில் ஒரு ஊஞ்சலை ஏற்பாடு செய்திருந்தான். அவள் உண்மையில் அவன் காட்டிய அன்பில் மெய்மறந்திருந்தாள். ரொம்ப ஹாப்பியா இருக்கு என்று அவளாகவே அவன் இதழில் தன் முதல் முத்தத்தை பதித்தாள். அதில் இருவரும் சிறிது நேரம் கட்டுண்டனர் . சந்தீப் சுபியின் கண்களை மூடி அவள் கையில் ஒரு டைரியை கொடுத்தான் என்னவென்று கண்களால் கேட்டவளை அவனும் கண்களாலே திறந்து பார்க்கும் படி கூறினான் . டைரியை திறந்து பார்த்த சுபிக்கு கண்களில் சட்டேன்று நீர் கோர்த்தது. அவள் கை ஓவ்வொரு பக்கம் திருப்ப திருப்ப நடுங்க ஆரம்பித்தது.

-தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கல்பனா ஹரிபிரசாத் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top