Jeevitha Ram prabhu
Active Member
மலர் 10
ஹரி கொண்டு வந்த விவரங்களை ஆராய்ந்த போது சந்திரா குருப் ஆஃப் கம்பெனி பொருளின் தரத்தை விட லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்த பாரின் டெண்டர் அவளுக்கு கிடைத்து இருந்தால் கணிசமான லாபம் கிடைத்து இருக்கும். அது கிடைக்காததால் தான் அவள் இங்கே வந்து கத்தி விட்டு சென்றது என்று நினைத்தாள் தமிழ். இதை கருத்தில் கொண்டவாறே அன்றைய அலுவல்களை பார்க்க துவங்கினாள். ஆனாலும் இடையிடையே அகிலன் நினைவு வரத்தான் செய்தது.
அங்கே அகிலனின் நிலையும் இவ்வாறாகவே இருந்தது. தன் காதலை எப்படி அவளிடம் வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் இருந்தான். அகிலன் இருந்த நிலையை கண்டே எதுவோ இருக்கிறது என்பதை யூகித்து கொண்டான் குமார். தான் யூகித்ததைக் அப்படியே கேட்டும் விட்டான். அதிலும் எதையும் மறைக்காமல் கூறினான். என் வீட்டிற்கு வந்த போதே நினைத்தேன் என்றான் குமார். இருந்தாலும் ஆல் தி பெஸ்ட் டா உனக்கு தமிழ் நல்ல ஜோடி தான் என்றான். அது அவனுக்கு இன்னும் தைரியத்தை கொடுத்தது. உன் வீட்டுக்கு வரும் போதே சொல்லிவிடுகிறாயா....அவள்மேல் கொண்ட காதலை....என்றான். இல்லை என்று மறுத்தான் அவன்.
வீட்டிற்கு சென்றாலும் ராசாத்தி அக்கா, தம்பி தங்கைகளின் கேலி கிண்டல்களுக்கு அளவில்லாமல் இருந்தது. எல்லாவற்றையும் சிரித்தவாறே சமாளித்தான். அவள் என்னவள் என்ற நினைப்பே அவனுக்கு இன்னும் உற்சாகத்தை ஊட்டியது.
இதற்கிடையில் தமிழ் காயத்ரிக்கு கால் செய்து இங்கே நடப்பவைகளை கூறினாள். கைலாஷ் க்கும் கால் செய்து பேசினாள். ஆனால் தமிழிடம் கூறியதை கூறவில்லை. பொதுவாக மட்டுமே பேசினாள்.
அடுத்த நாள் ஆபிஸிற்கு சென்ற போதும் அன்று அகிலனின் கையில் இருந்ததையே மனம் அசை போட்டது. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை கவனிக்கலானாள்.
அந்த வாரம் முழுவதும் வேலை அதிகப்படியாக இருந்தது. சந்திராவின் இன்னபிற தவறுகளையும் கண்டறிந்தாள்.
ஹரி கொண்டு வந்த விவரங்களை ஆராய்ந்த போது சந்திரா குருப் ஆஃப் கம்பெனி பொருளின் தரத்தை விட லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்த பாரின் டெண்டர் அவளுக்கு கிடைத்து இருந்தால் கணிசமான லாபம் கிடைத்து இருக்கும். அது கிடைக்காததால் தான் அவள் இங்கே வந்து கத்தி விட்டு சென்றது என்று நினைத்தாள் தமிழ். இதை கருத்தில் கொண்டவாறே அன்றைய அலுவல்களை பார்க்க துவங்கினாள். ஆனாலும் இடையிடையே அகிலன் நினைவு வரத்தான் செய்தது.
அங்கே அகிலனின் நிலையும் இவ்வாறாகவே இருந்தது. தன் காதலை எப்படி அவளிடம் வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் இருந்தான். அகிலன் இருந்த நிலையை கண்டே எதுவோ இருக்கிறது என்பதை யூகித்து கொண்டான் குமார். தான் யூகித்ததைக் அப்படியே கேட்டும் விட்டான். அதிலும் எதையும் மறைக்காமல் கூறினான். என் வீட்டிற்கு வந்த போதே நினைத்தேன் என்றான் குமார். இருந்தாலும் ஆல் தி பெஸ்ட் டா உனக்கு தமிழ் நல்ல ஜோடி தான் என்றான். அது அவனுக்கு இன்னும் தைரியத்தை கொடுத்தது. உன் வீட்டுக்கு வரும் போதே சொல்லிவிடுகிறாயா....அவள்மேல் கொண்ட காதலை....என்றான். இல்லை என்று மறுத்தான் அவன்.
வீட்டிற்கு சென்றாலும் ராசாத்தி அக்கா, தம்பி தங்கைகளின் கேலி கிண்டல்களுக்கு அளவில்லாமல் இருந்தது. எல்லாவற்றையும் சிரித்தவாறே சமாளித்தான். அவள் என்னவள் என்ற நினைப்பே அவனுக்கு இன்னும் உற்சாகத்தை ஊட்டியது.
இதற்கிடையில் தமிழ் காயத்ரிக்கு கால் செய்து இங்கே நடப்பவைகளை கூறினாள். கைலாஷ் க்கும் கால் செய்து பேசினாள். ஆனால் தமிழிடம் கூறியதை கூறவில்லை. பொதுவாக மட்டுமே பேசினாள்.
அடுத்த நாள் ஆபிஸிற்கு சென்ற போதும் அன்று அகிலனின் கையில் இருந்ததையே மனம் அசை போட்டது. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை கவனிக்கலானாள்.
அந்த வாரம் முழுவதும் வேலை அதிகப்படியாக இருந்தது. சந்திராவின் இன்னபிற தவறுகளையும் கண்டறிந்தாள்.