கதவு திறந்தது. கதை, புத்தகமாக வெளியே வந்தது.

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ப்ரியமான வாசகர்களுக்கு,

என்னை ஓர் எழுத்தாளராக இங்கே அடையாளம் காட்டிய கதை கல்யணத்திற்கு முன் : கல்யாணதிற்கு பின். அந்தக் கதை இப்போது புத்தகமாக, இரண்டு பாகங்களாக வெளி வந்திருக்கிறது.

அந்தக் கதவு இரண்டு புறமும் பூட்டி இருந்தது. வெளிப் புறம் இருந்த பூட்டை, இந்தக் கதைக்கு, வாசகர்கள், நீங்கள், கொடுத்த ஊக்கம், ஆதரவு, இது புத்தகமா வேணும்னு கேட்ட கோரிக்கை எல்லாம் சேர்ந்து, சாவியாக மாறித் திறந்தது. உள்பக்கப் பூட்டை, அந்தப் புறத்திலேர்ந்து தான் திறக்க முடியும். எனக்கு அந்த உள்பக்கத் தாழ்பாளைத் திறந்தது, நம்ம தளத்தின் மாயக் கண்ணன், திருமதி மல்லிகா மணிவண்ணன் அவர்கள். அவங்க திறக்கலைன்னா இந்தப் புத்தகம் வெளியே வந்திருக்காது. அதனாலே என்னுடைய மனமார்ந்த நன்றிகள் @mallika. stay blessed.

கீழ் கண்ட வலைதளத்திலே, புதன் கிழமையிலிருந்து (10 March 2021) புத்தகம் விற்பனைக்கு வருது :

udumalai.com
marinabooks.com
wecanshopping.com
MBS Books


வலைதளத்திலே ஆர்டர் செய்ய விரும்பாதவங்க, நேரடியாக திரு. அருணாச்சலம் அவர்களை கீழே கொடுத்துள்ள கைப்பேசி இலக்கில் தொடர்பு கொள்ளலாம். உங்க முகவரிக்குப் புத்தகம் அனுப்ப எத்தனை ரூபாய், எப்படி பேமெண்ட் செய்ய வேண்டுமென்ற விவரங்களை அவர் பகிர்ந்து கொள்வார்.

திரு அருணாச்சலம்
நாகம்மை பதிப்பகம்
+ 91 99520 76258
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய
"கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு
பின்"-ங்கிற அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
க்ஷிப்ரா டியர்

சரத்தை புத்தக வடிவில் மீண்டும் சந்திக்க வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top