கடல்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"கனத்த இதயத்தோடு
ஒரு நாள் கடற்கரை ஓரம் சென்றேன்"


"என்னை தழுவிய காற்றில்
என் கவலைகள் எல்லாம் கரைந்தது"


"என் காலோடு உறவாடிய
அலைகள் அதில் என் கலக்கங்கள் அடித்து செல்லப்பட்டது"


"கரையோரம் அமர்ந்தேன்
அலைகளின் சத்தம் தந்த ஆனந்தத்தில் மகிழ்ந்தேன்"


"தூரமாய் தெரியும் நிலவு அது ரசித்தேன்"

"சிறு புள்ளியாய் தெரியும்
மீன் பிடி படகுகளை எண்ணிக்கையில் எண்ணி தோற்றேன்"


"கலங்கரை விளக்கின் ஒளியில்
என் கவலைகள் எல்லாம் எங்கோ சென்று ஒளிவது போல் உணர்ந்தேன்"


"வானம் சிறு தூறல் போட
என் துயரங்களை எல்லாம்
துறப்பது போல் உணர்ந்தேன்"


"நீண்டிருக்கும் கடலோடு
நீங்காத உறவு வேண்டும் என நினைத்தேன்"


"பொங்கிடும் கடல் அலையை காண்கையில்
மனதில் மகிழ்ச்சி பொங்கியது"


"நேரம் அது நெடுநேரமாய் மாறியிருக்க
கடலின் நெருக்கத்தை கலைக்க விரும்பவில்லை என் நெஞ்சம்"


"நான் நினைக்கிறேன்
கடல் மேல் காதல் கொண்டு விட்டேனோ என்று"


"காரணம் தெரியவில்லை
ஆனால் கடல் கசக்காது எனக்கு என்பது மட்டும் விளங்கியது"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top