ஏன் இந்த சலனம்??

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இனம் புரியாத துக்கம்
மனதை சஞ்சலப்படுத்த
ஏன் இவ்வாறு என்று
பகுத்தறிய முடியாமல்
மூளை தடுமாற
செவிகள் பொருத்து கருவிகளோடு
இசையை கேட்டாலும்
மன அமைதியை தவிர்த்து
மன்சஞ்சலத்தை அம்மெல்லிசை
அள்ளியிறைக்க
காரணம் தெரியாமல்
குழம்பித்தவித்த மனதை
கட்டுப்படுத்தும் வகையறியாமல்
விழிகளில் நீர் குளம் கட்ட
நீரின் கொள்ளளவை
தாங்க முடியாது
அணை உடைப்பெடுக்க
அதன் விளைவாக
வெளியேறி
புறக்கையை நனைத்த
கண்ணீர்துளி
நிதர்சனத்தை உணர்த்த
ஏன் இந்த சலனம் என்று
எண்ணியபடி வானை நோக்க
அதுவோ எண்ணிலடங்காத
கருமேகம் சூழ்ந்து ஒருபுறமும்
மறுபுறம் கதிரவன்
தன் கதிர்களை
பரப்பியவாறு இருக்க
இருவரில் யாரின் முறை
இதுவென்பதை கண்டறிய முடியாது
ஆகாசம் திணறிக் கொண்டிருந்தது.
நிலையில்லா வானிலையும்
சஞ்சலத்தில் சிக்குண்ட
என் மனமும்
சீர்படும் காலம் எப்போது???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top