என் இதய விழி நீயே 19

Advertisement

achuma

Well-Known Member
hi friends

next update i put on sunday sure

all take care

bye :)(y)

நண்பனாக இருந்தாலும், அபியின் நிலை முன்பு வேறு ஏதும் இருவருக்கும் தெரியவில்லை ...
அதுவும், ஒரு தவறு என்றால் , பொங்கி எழும் நம் நண்பன் இவ்வாறு என்று அவன் மீது கோவம் கொண்டனர் திவ்யா மற்றும் சந்தீப்...

பிறகு திவ்யாவை சமாதானம் செய்து, வீட்டினுள் அழைத்து சென்றான் ...

அனைவரையும் வற்புறுத்தி உணவு உண்ண அழைத்தான்.

"ஸ்ரீ இந்த ஒரு நாள் நான் சாப்பிடாம இருந்தா , என்ன ஆக போகுது, எங்க கூடயே வளர்ந்த ஒருத்தி, அங்க பட்டினியா இருந்து இருக்கா , ஆனா எனக்கு எல்லாம் கிடைத்து இருக்கு ," என்று மேலும் அழுக ஆரம்பித்தாள் ...
இவர்கள் மீது தவறு கூறுவதற்கு இல்லை, தெரிந்து இருந்தால் இவ்வாறு விட்டு இருக்க மாட்டார்கள், என்று திவ்யா மற்றும் சந்தீப் , அனைவரையும் சமாதானம் செய்து, உன்ன செய்தனர் ...

சிவநேசன் அபி இனி உன் பொறுப்பு , என்று கூறியதும், ஆதி அந்த இடத்தில இல்லை .

அபியை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்று விட்டான் ...


"அபி , இங்க அப்பா அண்ணா , இப்படி எல்லாருமே உங்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்க , ஆனா நான் ," என்று அவனின் குரலின் தடுமாற்றத்தில் அபிக்கு ஆதியின் இந்த வேதனை தாள முடியவில்லை ...

தன் சிறு வயது தோழனின் கவலை படிந்த முகம் காண சகிக்காமல் , என் மேல இருக்க தப்புக்கு , ஏன் இப்படி நீங்க எல்லாம் வேதனை படறீங்க ...
"நான் இங்க வரேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தானா நீங்க என்ன அங்க விட்டு இருப்பீர்களா ?"
நான் என்ன பண்ண முடியும் , நாம நெருங்கன சொந்தமும் கிடையாது , ஊருக்கும் , இந்த சமுதாயத்துக்கும் , நம்ம குடும்பத்தின் நட்போட ஆழம் புரியாது , ஏன் என்னுடைய பெரியம்மாவே எல்லாம் தெரிந்தும் , எப்படி கேவலமா பேசினாங்கனு பார்த்திங்களா , அப்படி இருக்கும் போது , பெற்றவர்களும் இல்லாம, இங்க வந்து இருந்தேனா , என்னோட பெத்தவங்க வளர்ப்பு மேலயும் சேர்ந்து பூரணி அத்தைக்கும் கெட்ட பேரு தான , இது எல்லாம் யோசித்து தான் , நான் எனக்குள்ளயே என் கஷ்டத்தை மறைச்சிகிட்டேன்" என்று நீண்ட விளக்கம் குடுத்தாள் ...

ஆதி ஏதும் கூறும் நிலையில் இல்லை , நீண்ட வருடம் கழித்து இதுவே அபி ஆதியிடம் அதிகம் பேசிய நேரம் ...

அதன் கணம் தாங்காமல் , தொண்டையை செருமி , அவனை சரி செய்து கொண்டு, "அபி! ஒருவரோடு இழப்பை , வேற ஒருவங்க வந்து நிரப்ப முடியாது , ஆனா உனக்கு அனைத்துமா நான் இருப்பேன் , உனக்கு ப்ரோமிஸ் பண்றேன் , எனக்கு இப்போ தூக்கமா வரல , நீ தூங்கு ," என்று கூறி மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான் ஆதி ....


அவனுக்கு தனிமை தேவை பட்டது , சந்தீப் ஆதியை தேடி, அங்கு அபியிடம் கேட்டதற்கு, அண்ணா , அவரு மாடில இருக்காரு , ரொம்ப வருத்தமா இருக்காரு , நீங்க அவர் கூட கொஞ்ச நேரம் இருங்க , என்று சந்தீப்பிடம் கூறினாள் ...

ஆதியை பார்க்க சென்ற சந்தீப் அதிர்ச்சி அடைந்தான் அவனின் நிலை கண்டு ....
"டேய் ஆதி! நீயடா இப்படி அழுற ," கண்கள் சிவந்து நீர் துளி கன்னம் வரை இறங்கி, மிகவும் சோர்ந்து தெரிந்தான் ...
"உன்ன நல்லா திட்டலாம்னு வந்தேன் , கோழை போல போய் ஒளிஞ்சிக்கிட்டியே , உன் காதலிய ஒரு பேய் கிட்ட விட்டுட்டு நீ போய்ட்டியேன்னு , உன்ன திட்ட வந்தா நீ என்ன டா இப்படி இருக்கே," என்று சந்தீப் அவனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் கை போட்டு சமாதானம் செய்தான் ...

"அப்பா இனியாவது அவளுக்கு துணையா இருன்னு சொன்னது போல இருக்கு டா ..."

"அங்க அவளோட பேரெண்ட்ஸ் டெத்துக்கு போனதும், அவளை அப்படி பார்க்க முடில ... அவளும் வர மாட்டேன்னு சொல்லிட்டா ..
அங்கேயே இருந்தா , அவள கையோட கூட்டிட்டு போய்டுவோனோ பயம் , என்னால இங்கயும் இருக்க முடில ...
என்னோட முகத்தை பார்த்தே எங்க அம்மா எல்லாம் புரிஞ்சிப்பாங்கனு, அமெரிக்கா போனேன் ...
ஒரு நொடி கூட அவ நினைப்பு இல்லாம என்னால இருக்க முடியல ...
அந்த நினைப்பு தான் என வாழவும் வைத்தது ...
ஆனா இப்படினு தெரிந்து இருந்தா , அப்போவே கூட்டிட்டு வந்து இருப்பேன் டா ..."

"என்னடா தப்பு பண்ணேன் , அவ மேல ஆசை பட்டேன், அதுக்குள்ள அம்மா அவங்க வீட்டுல நிஷாவோட கல்யாணம் வாக்கு குடுத்தாங்க , அவங்க பேச்சுக்கு மதிப்பு குடுத்து அமைதியா இருந்தேன் ..."

"விதி என் அபிய நிம்மதியா விடல , அவளோட உயிரான அவங்க அம்மா அப்பாவை அவகிட்ட இருந்து பறிச்சிட்டாங்க ...
சரி அவளை பார்த்துக்கலாம்னா, சமுதாயம் என்ன சொல்லுமோனு மேடம் எல்லாம் அவங்களே பாரத்த சுமந்துக்கிட்டாங்க ..."


"ஊருக்கு இங்க வந்த ஒரு டாக்டரா ,என் அம்மாக்கு இருக்க வியாதியா கண்டுபிடிக்க முடில, அதுக்குள்ள என்ன விட்டு போய்ட்டாங்க. ஒரு காதலனா அபிக்கு நடந்த கொடுமையில இருந்து அவளை காக்க முடில ...
நிஷாவோட நிச்சியம் வரை நான் அமைதியா இருந்து இருக்கேன் ..."

" என் தேவதைக்கு எங்க நான் கூட துணையை இருக்கனுமோ அங்க எல்லா அவளை விட்டுட்டேன்னு , கேவலமா இருக்கு டா ...
இப்போ கூட எனக்கு அவ ஆறுதல் சொல்றா டா ..."

"என்ன பார்த்தியா , நேற்று கல்யாணம் முடிந்தது, ஏற்கனவே கல்யாணம் ஏதோ, அந்த நேரத்துல அப்பா வார்த்தைக்கு மதிப்பு குடுத்து நான் கல்யாணம் செய்துகிட்டேனு நினைச்சிட்டு இருக்கா , காலைல கூட அவளுக்கு வாங்குன செயின் , என்னால உரிமையா குடுக்க முடியல , அது நிஷாக்கு வாங்குனது நினைச்சிட்டு தயங்குனா ...
என்னோட காதலை அவகிட்ட சொல்ல முடியாத நிலமைல இருக்கேன்...
என்ன இவ்வளவு நாள் தவிக்க விட்டுட்டு, கல்யாணத்துக்கு பிறகு மனைவி ஆனதும் அக்கறை வருதான்னு கேட்டா , நான் என்ன பண்ணுவேன் டா ..."
என்று புலம்பி கொண்டே இருந்தான் ...

"டேய் ஆதி என்று சந்தீப் அவனை அணைத்து முதுகை நீவி விட்டு,ப்ளீஸ் டா , இப்போவும் அதே தப்ப தான் செய்ற டா ...
இப்பவும் அவ கூட இல்லாம இங்க வந்து உன் கவலைய நெனச்சிட்டு இருக்கே..."

"இன்னைக்கு இல்லைனாலும், ஒரு நல்ல சூழ்நிலைல உன் காதல் அபிக்கு சொல்லு டா ...
அவ ரொம்ப நல்ல பொண்ணு டா , உன்ன இப்படி பார்க்க முடியாம என்ன பார்த்துக்க சொல்லி அனுப்பி இருக்கானா பார்த்துக்கோயேன் ...
பெண்களுக்கு மனபலம் அதிகம் டா ...
நிறையவே பிரச்சனைய சமளிக்குறாங்க ...
நாம தான் இப்படி டல் ஆகிடறோம் ஏதாவது பிரச்சனை வந்தா ..."

"மச்சி! என் தங்கச்சிய உனக்கு கட்டி கொடுத்து இருக்கேன், இந்த விஷயத்துல இருந்து வெளியில வா ...
இவ்வளவு நாட்கள் விட்ட சந்தோஷத்தை எல்லாம் ஈடு கட்டுறா மாதிரி, இனி என் தங்கச்சியோட வாழு டா ...
நீங்க ரெண்டு பேருமே உங்க வாழ்க்கையில இனி நல்லா இருப்பீங்க டா ..."

(பிரேமா இருக்கும் வரை அது நடக்குமா ?)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top