என்னை தீண்டிவிட்டாய் 23

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
நீ நான்
காதல்
என்றுணர்த்தியதடி
உன் வெட்கமும்
உன் இதழ் முத்தமும்....

இதழ்களுக்கிடையிலான யுத்தம் தீவிரமாய் இருக்க அந்த அமைதியான சூழலும் அந்த யுத்தத்திற்கு வலு சேர்த்தது ... காதல் சுமந்த நெஞ்சம் தன் காதலை காட்டிட இந்த யுத்தத்தை தொடங்கிட அதை மறுக்க நினைத்த மற்றைய நெஞ்சமோ இப்போது விரும்பி பங்கேற்றிருந்தது....
தன் மொத்த காதலையும் முத்தமெனும் கடத்தி மூலம் தன்வளுக்கு கடத்தியவன் அவளுக்கு மூச்சு முட்டுவது உணர்ந்து அவளுக்கு விடுதலையளித்தான் ஷாகர்..
முத்த யுத்தத்தில் களைப்படைந்த ஆதிரா ஷாகர் நெஞ்சிலேயே சாய அவளை இரு கரம் கொண்டு அணைத்தவனும் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டான்...
பின் அவளை தன்னிடமிருந்து விலக்கி
“என்னதான்டி பிரச்சினை உனக்கு..?? எதை நினைச்சி பயந்து என்னை விட்டு விலக நினைக்கிற?? சொல்லு... நீ தான் என்னோட வாழ்க்கைனு ஏன் புரிஞ்சிக்கமாட்டேங்கிற??காதல் ஒருத்தி மேல தான்.. நான் உன்னை முதல் முதலாக இந்த குளத்துக்கு பக்கத்துல பார்த்ததுமே நீ தான் எனக்கான தேவதைனு என் மனசு முடிவு பண்ணிடுச்சு... நீ என்கூட இருந்தா தான் நான் சந்தோஷமாக இருப்பேன்.. நீ தான்டி என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாமே . உனக்கும் அப்படி தான்னு எனக்கு தெரியும்.. ஆனா எதுக்காக என்னை விட்டு விலக நினைக்கிற?? நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம்டி... என்னை புரிஞ்சிக்கோ ப்ளீஸ்... எனக்கு நீ மட்டும் போதும்டி...”
“இல்லை ஷாகர்..... நான் உங்களுக்கு வேணாம் ஷாகர்.... எனக்கு நல்லது பண்ணவங்க யாருமே இப்போ உயிரோட இல்லை... என் மேல பாசத்தை அள்ளிக்கொட்டுனவங்க யாரும் நிலைச்சதில்லை... நான் ஒரு சபிக்கப்பட்ட பிறவி... நான் உங்க கூட இருந்தா உங்களுக்கும் ஏதாவது ஆகிடும்... வேண்டாம் ஷாகர்... இந்த துரதிஷ்டசாலி உங்களுக்கு வேண்டாம்..”
“லூசாடி நீ... என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறியா??? உன்னை மாதிரி அஷ்டசாலி யாரும் இல்லை... உனக்குனு நாங்கள் இத்தனை உறவுகள் இருக்கோமே...”
“இருக்கவங்களையும் இழந்திட கூடாதுனு தான் சொல்றேன்.. நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிர்றேன்.. ப்ளீஸ் நான் வேண்டாம்...உங்களுக்கு..” என்று ஆதிரா கூற அவள் கைபிடித்து வேகமாக தன்புறமிழுத்த ஷாகர் அவள் முகம் நோக்கி குனிந்து
“இங்க பாரு.. வாழ்வோ சாவோ அது உன்கூடதான்னு முடிவு பண்ணி பல வருஷமாச்சு. எனக்கு ஏதாவது நடக்கும்னு பயப்படுறியா..??? பரவாயில்லை... நான் சாகுறதுக்கு தயாராக தான் இருக்கேன்... கட்டுன பொண்டாட்டியோட காதலை பெறமுடியாமல் இருக்கிறதுக்கு ஒரேடியா செத்துரலாம்.. நீயே உன் கையால என்னை கொன்னுரு..” என்றவனது வார்த்தைகள் ஆதிராவை பெரிதும் பாதித்தது... மடிந்து அமர்ந்தவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடியே
“ஏன்மா அப்பா என்னை பெத்தீங்க??? நான் பிறந்து உங்க இரண்டு பேரோட சந்தோஷத்தையும் பறிச்சேன்... அப்புறம் உங்க இரண்டு பேரோட உயிரை பறித்தேன்... அதுக்கு பிறகு தெய்வநாயகி அம்மாவுக்கு பாரமானேன்... என்னோட துரதிஷ்டம் அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு.... எனக்காக அவங்க படாத கஷ்டம் இல்லை.. நான் நல்லா இருக்கனும்னு அவங்க தம்பிக்கிட்ட தினம் தினம் அடிவாங்கி உடம்பை காயப்படுத்திக்கிட்டாங்க.. இதெல்லாம் நான் நல்லா இருக்கனும்னு நினைச்சதுக்கு அவங்களுக்கு கிடைச்ச தண்டனை... பெத்த அம்மா நீங்க கூட உயிரோட இருந்திருந்தா என்னை அவ்வளவு சந்தோஷமாக பார்த்திருப்பீங்களானு தெரியலை... ஆனா அவங்க எனக்காகனு எல்லாத்தையும் செய்தாங்க. ஆனா கடைசியில என்னோட துரதிஷ்டம் அவங்களையும் காவு வாங்கிடுச்சே... இப்போ என்னால என்னோட புருஷன் கஷ்டப்படுறாரு... எதுக்குமா இவ்வளவு பேர் எனக்காக கஷ்டப்படனும்...?? நான் பிறக்காமல் இருந்திருந்தா எல்லாரும் சந்தோஷமாக இருந்திருப்பாங்களே... ஏன்மா என்னை பெத்தீங்க?? ஏன்மா..” என்று அழுதவளை கண்டு ஷாகரின் இதயம் பதறியது..
ஆதிராவின் உண்மையான பெற்றோர் அவளுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே இறந்துவிட்டனர்.. அவளது தந்தையின் தம்பியும் அந்த விபத்தில் இறந்துவிட அப்போது ஆதிராவுக்கு ஆதரவாக நின்றார் ஆதிராவின் வளர்ப்பு அன்னையாகிய அவளது சித்தப்பாவின் மனைவி தெய்வநாயகி.. பெண்கள் இருவரும் தனித்திருக்க அதை அறிந்த சில காமுகர்கள் தங்களை லீலைகளை தொடங்க அதிலிருந்து ஆதிராவை காப்பதற்காக தெய்வநாயகி ஆதிராவை அழைத்துக்கொண்டு தன் பிறந்தகம் வந்துவிட்டாள்... ஆனால் அவளது பிறந்த வீட்டினரோ ஆதிராவை ஏதேனும் காப்பகத்தில் விட்டுவிடச்சொல்ல தெய்வநாயகி பல போரட்டாங்களின் பின் பெற்றோரை எதிர்த்து ஆதிராவை தன் மகள் போல் வளர்க்கத்தொடங்கினார்.... தெய்வநாயகியின் அன்னை தந்தை இருவரும் இறைவனடி சேர்ந்ததும் அவள் தம்பி தன் ஆட்டத்தை ஆரம்பித்தான்... வெட்டியாக ஊரை சுற்றிவிட்டு இரவானதும் குடித்துவிட்டு வருபவன் தன் அக்கா என்றும் பாராது அவரை அடிப்பதும் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிப்பது என்று இருந்தான்... வீட்டிற்கு ஆண்துணை வேண்டும் என்பதற்காக பேசமால் இருந்த தெய்வநாயகி,ஒருநாள் குடிபோதையில் அவன் ஆதிராவிடம் தவறாய் நடந்துகொள்ள முயல அரிவாளை எடுத்து அவனை வெட்டுவதற்கு சென்றுவிட அதன்பின் தெய்வநாயகியின் தம்பி அடக்கி வாசிக்கத்தொடங்கினான்... குடித்துவிட்டு வருபவன் சத்தமில்லாமல் உண்டுவிட்டு படுத்து விடுவான் . ஆனாலும் அவன் கொடுமைகள் முடியவில்லை... திடீரென்று ஒரு நாள் ஆதிராவிறக்கு மாப்பிள்ளை என்று ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி அவள் வாழ்க்கையை குலைத்துவிட்டான்.. இவ்வாறு பல இழப்புக்களை சந்தித்தவளுக்கு எங்கே ஷாகரையும் இழந்து விடுவோமோ என்ற பயமே அவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது.... அவனை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தவே மனம் விரும்பாதபோதிலும் அவனை விட்டு விலகிச்செல்ல நினைத்தாள்.......
அளருகே சென்று அமர்ந்தவன் அவளை அணைத்துக்கொண்டு
“புரிஞ்சுக்கோடி... யாருமே உன்னால கஷ்டப்படலை... விதியோட விளையாட்டுக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்...நான் மத்தவங்க மாதிரி உன்னை விட்டுட்டு போய் கஷ்டப்படுத்தமாட்டேன்டி... எப்பவும் உன்கூடவே இருப்பேன்... என்னை நம்பு பேபி..” என்று கூறியவன் அவள் முகமெங்கும் தன் முத்திரை பதிக்க அவனை இறுக்கி அணைத்துக்கொண்ட ஆதிரா
“என்னை தனியா விட்டுட்டு போகமாட்டீங்க தானே... என்கூடவே இருப்பீங்களா..” என்று அவன் நெஞ்சில் நன்றாக புதைந்தபடி கேட்க ஆதிரா கேட்க ஷாகரும் காற்று கூட புகமுடியாத அளவுக்கு அவளை இறுக அணைத்தவன்
“நான் இப்போ ப்ராமிஸ் பண்றேன்டி.. எப்பவும் நான் உன்கூடவே தான் இருப்பேன்... உன்னை இப்படியே எனக்குள்ளயே பத்திரமாக வச்சிருப்பேன்.... ப்ராமிஸ்டி....” என்று கூற அவன் நெஞ்சில் மேலும் புதைந்தவளுக்கு மனதினுள் பாதுகாப்பாய் இருப்பதாய் ஒரு உணர்வு...
இத்தனை காலம் தனிமையால் ஆட்படைக்கப்பட்ட அவள் மனம் இன்று தனக்கென தனக்கானவன் எப்போதும் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்துகொண்டது.. மனதில் காதல் இருந்த போதிலும் மனதில் குடிகொண்டிருந்த தனித்துவிடுவோம் என்ற பயமே ஆதிராவின் விலகலுக்கு காரணம்... எதிர்மறையாய் சிந்திக்கும் மனம் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமென அடிக்கடி பயமுறுத்த அது அவளை பலவீனமாக்கியது... ஆனால் ஷாகரின் காதல் அந்த பயத்தை துடைத்தெறிந்து அவளை சரிப்படுத்திவிட்டது.... இனி எந்த பயமும் ஆதிராவை அண்ட ஷாகர் இடம்கொடுக்கமாட்டான்..
“ஆது..” என்று ஷாகர் மெதுவாக அழைக்க
“ம்ம்...”
“ஆது.. என்னை நிமிர்ந்து பாரு..”
“ம்ஹூம்..”
“ஏய் நிமிர்ந்து பாரு பேபி...”
“எதுக்குனு சொல்லுங்க..”
“நீ நிமிரந்து பாரு சொல்லுறேன்..” என்று ஷாகர் கூற கண்மூடியபடியே ஆதிரா நிமிர்ந்து பார்க்க அவள் மூடியவிழிகளுக்கு பரிசாக தன் இதழ்களை ஒற்றி எடுக்க மெதுவாக கண்விழித்தவளை கண்ணோடு கண் நோக்கி அவளை மேலும் தன்னுடன் இறுக்கி
“ஆது...நாம ஓடிப்போலாமா??” என்று கேட்க ஆதிராவோ
“என்னது???”
“ஓடிப்போலாமானு கேட்டேன்...”
“எங்க ஓடிப்போக போறீங்க.. அது சரி யார்கூட ஓடிப்போகப்போறீங்க??”
“வேற யாருகூட என் பொண்டாட்டி கூட தான்..”
“ஏன் திடீர்னு இப்படியொரு எண்ணம்...”
“தெரியலை பேபி.... எனக்கு ரொம்ப நாளா இப்படியொரு ஆசை... உனக்கு ஓகேயா??”
“ஓகே தான்.. ஆனா எப்போ போகலாம்....??”
“இப்போவே போகலாம்..”
“என்ன நக்கலா?? நாளைக்கு காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ ஓடிப்போகலாமானு கேட்குறீங்க...”
“கல்யாணத்துல முதல்ல தானேடி ஓடிப்போவாங்க...”
“அது கல்யாணமாகதவங்க தான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்பாங்க...”
“நமக்கும் நாளைக்கு தானே கல்யாணம்...”
“அது இரண்டாவது கல்யாணம்.. ஏற்கனவே சார் என் கழுத்துல தாலி கட்டியாச்சு...”
“அப்படீங்கிற... அன் எனக்கு ஓடிப்போகனுமே... இப்போ என்ன பண்ணுறது???”
“ஒன்னும் பண்ணுறதுக்கு இல்லை..இப்போ வீட்டுக்கு போகலாம்...”
“நோவே... நாம ஓடிப்போறது ஓடிப்போறது தான்.. ஆனா.. ம்ம்ம் இப்படி பண்ணலாம்.... எல்லாம் ஓடிப்போய் தான் கல்யாணம் பண்ணிப்பாங்க.. நாம ஒரு சேன்ஜிற்கு கல்யாணம் பண்ணிட்டு ஓடிப்போகலாம்... எப்படி என்னோட ஐடியா??”
“ஐடியா நல்லா தான் இருக்கு...ஆனா வீட்டாளுங்களுக்கு என்ன சொல்லுறது??”
“அதெல்லாம்.. நான் பார்த்துக்கிறேன்...கல்யாணம் முடிந்ததும் ஓடிப்போகப்போறோம் ஓகேவா... அதாவது
கல்யாணந்தா கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்லை ஓடிப்போய் கல்யாணந்தா கட்டிக்கலாமா..” என்று ஷாகர் பாட அவன் கேசத்தை கலைத்துவிட்டவள்
“ஆசையை பாரு... அது சரி எங்க ஓடிப்போகப்போறோம்...”
“ஓடிப்போறவங்க இங்க தான் ஓடிப்போகப்போறோம்னு பிளான் பண்ணிட்டா ஓடிப்போவாங்க.. போற வழியில யோசிச்சிக்கலாம்... நீ நாளைக்கு ரெடியாக இருக்கனும்... அதேமாதிரி யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது புரியிதா??” என்று சீரியசாக ஷாகர் கூற அவன் பாவனையில் சிரித்தவள்
“சரி லேட்டாச்சு.... வாங்க வீட்டுக்கு போகலாம்.. நாம வீட்டுல இல்லைனு தெரிஞ்சா பயந்திடுவாங்க...” என்று கூறி அவனிடமிருந்து விலக முயன்றவளை விடுவிக்காமல் மேலும் தன்னோடு இறுக்கியவன்
“பேபி ஒருதடவை நீ என்னை லிப் லாக் பண்ணே ப்ளீஸ்...”
“ஹேய் என்ன பேசுறீங்க நீங்க..??” என்று முகம் சிவந்தபடி வெட்கிவளை கெஞ்சி குலைந்து அவன் கேட்டதை வாங்கிய பின்பே அவளை விட்டான்....
அந்த இரவின் இனிமையை அனுபவித்தபடி மறுநாளின் விடியலை எதிர்பார்த்து வீடு திரும்பினர் இருவரும்...

உன்னால்
உன்னால் உன் நினைவால்
உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே
உன்னை உன்னை கேட்டேனே
உன்னோடு
சேர்ந்து நெடுந்தூரங்கள்
காலார நடந்து மிதந்தேனே
உன்னிடம் தந்த இதயத்தை
தேடி உன்னில் என்னை
தொலைத்தேனே

ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

எந்தன் விழி
ஓரங்கள் உன் இமையில்
சாயுதே என் கண் கடை
மூடினால் உந்தன் முகம்
தெரியுதே

என் பகல்
உன் கண்ணில் நீ
இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லை
இரவு தான்

நான் உன்னை
உனக்கே தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக
படித்தேனே பூமியில்
உள்ள காதலை எல்லாம்
முன்னாள் வாழ்ந்தாய்
ரசித்தேனே

ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

இன்னும் இன்னும்
கனவுகள் உன்னை பற்றி
வேண்டுமே என்னென்னமோ
ஆசைகள் உன் நெய்வை
தூண்டுமே

என் மழை
காலங்கள் என் வெயில்
நேரங்கள் எல்லாமே
உன்னில் தொடங்குதே

ஒரே ஒரு
புன்னகை போதும்
அன்பே உன்னக்கென
காத்து கெடப்பேனே
ஆயிரம் கோடி ஆண்டுகள்
தாண்டி உன்னில் வாழ
துடிப்பேனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top