என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ -31

Advertisement

Deiyamma

Well-Known Member
ஹாய் மக்களே

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து உற்சாக படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்:D:love::giggle:


FB_IMG_1601269970504.jpg
FB_IMG_1600454044088.jpg
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 31

கனா காண்கிறேன் நான்
அனுமானுஷ்ய உலகில்
குட்டி குட்டி நட்பூக்களுடன்

குளு குளு சீதோஷ்னத்தில்..

ரவி வர்மாவின் அதிரடி கல்யாண செய்தியில் வீடே அதிர்ந்து அடங்கி போயிருக்க தனது அறையில் ஆராதனா அவன் அணிவித்திருந்த அந்த இதய வடிவ மோதிரத்துடன் கொஞ்சி கொண்டிருந்த சமயம் அவள் காலடியில் எதுவோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள்.

"ஹைய்.. புசு புசு குட்டி. நீங்க யாரு. எப்படி இங்க வந்தீங்க?" என்றபடி காலடியிலிருந்த அந்த நாய்குட்டியை பார்த்த சுவாரசியத்தில் தன்னை மறந்து குதூகளித்தாள். அப்போது அங்கே வந்த வதனா "அப்பாக்கு யாரோ கிப்ட்டா கொடுத்தாங்களாம். இது பார்க்க அழகா இருக்குல்ல.. சோ அப்பாவும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டார்" என்றபடி வட்ட வடிவத்தில் கண்ணாடியிலான மீன் தொட்டியை மேசையின் மீது வைத்தாள். அதனுள் தங்க நிற மீன் ஒன்று சுதந்திரமாக நீந்தி கொண்டிருந்தது.

"ஹேய்.. இது எப்போ வாங்குனது? இன்றைக்கு என்ன ஒரே சர்ப்ரைஸ்ஸா இருக்கு".

"அம்மாவோட ஷாப்ல ஒர்க் பண்ணுற ஒருத்தங்க வெளியூர் போறாங்களாம். அவங்க வீட்ல இதை கவனச்சிக்க ஆள் இல்லை. சோ அவங்க திரும்பி வரும் வரை நம்ம வீட்ல தான் சார் கெஸ்ட்டா ஸ்டே பண்ண போறார்".

"ஓ. சரி சரி. நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்" பேசிக்கொண்டு இருந்தவள் சட்டென ஆச்சரியத்தில் "ஹேய் இதோ பாரேன். இந்த பிஷ் கன்னம் ரெண்டும் சிவப்பு காலரா சேஞ்ச் ஆகுது".

"ஹே.. ஆமாமில்லை".

சகோதரிகள் இருவரும் புது தோழர்களுடன் உறவாடி கொண்டிருந்த பொழுது வதனாவின் கண்ணில் அன்று பாட்டி கொடுத்த மூன்றடுக்கு தங்க சங்கிலி பட்டது. அதை கைகளில் தூக்கி பார்த்தவள் "ஏய் ஆரு. இது என்னன்னு தெரியுதா?"

"ஏன் பார்த்தா தெரியலையா.. செயின்டி".

"போடி லூசு. இதோட முதலடுக்கில் இருக்கிற 'ப்ளூ ஐ' டேவில் ஐ (devil eye) மீன் பண்ணுது. நம்ம ஊர்ல கண்திருஷ்டி படமா இருக்க சாமி கயிறு கட்டுவோம்ல அது மாதிரி தான் இதுவும்".

"ஓ.. அப்படியா?".

"ம்ம்ம்.. யாரோட பொறாமையும் நெகட்டிவ் எனர்ஜியும் உன் மேல பட்டு உனக்கு அதனால எந்தவித பாதிப்பும் வர கூடாதுன்னு பாட்டி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கிறாங்க போல".

"வாவ்.. சூப்பர் சூப்பர். பாட்டி ரியலி கிரேட். லவ் யூ பாட்டிமா". சந்தோஷத்தில் பறக்கும் முத்தத்தை பாட்டிக்கு பரிசாக அனுப்பினாள் பெண்.

"அது சரி. இதை ஏன் அப்படியே வச்சியிருக்கிற. கழுத்துல போட்டுக்க வேண்டியது தானே.." என்றபடி அவளே ஆருவின் கழுத்தில் அந்த செயினை அணிவித்தாள்.

"அப்புறம் ஆரு.. ரொம்ப தேங்க்ஸ்டி. உன்னால தான் எனக்கும் ராமுக்கும் இவ்ளோ சீக்கிரம் மேரேஜ் நடக்க போகுது" பின்னிருந்து ஆருவை அணைத்து கொண்டு உச்சியில் இதழ் பதித்தாள்.

"ஹேய் வது.. தேங்க்ஸ்லாம் எதுக்குடி? எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு அக்கா. அவளோட லைஃப் என்னால கேள்வி குறி ஆகும் போது அதை சால்வ் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா? சோ நீ பீல் பண்ணுற அளவு நான் பெருசா ஒன்னும் செஞ்சிடல" சொன்னவாறு வதனாவின் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.

"உனக்கு ஒன்னும் கோபமில்லையே? ரவி விஷயத்துல..".

"அதெல்லாம் ஒன்னுமில்லை. அதான் உன்னோட ஆளு மார்னிங்க் மீட்டிங்லயே தெளிவா சொல்லிட்டாரே.. ஆனாலும் உன் ஆள் ரொம்ப பாஸ்ட் தாண்டி. இவ்ளோ ஸ்பீட் ஆகாதுடி.."

"ஹீ ஹீ ஹீ.." அப்பட்டமாய் ஜொள்ளு வடித்தாள் ஆராதனா.

"போதும் நிப்பாட்டு. ரொம்ப வழியுது. துடச்சிட்டு போய் தூங்கு. அப்புறம் ஆரு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ராம்மோட சிஸ்டர் அதான் உன்னோட ஆருயிர் தோழி கீது இருக்காளே.. அவளை ராஜேஷ் பொண்ணு கேட்டு பேசி முடிச்சாச்சாம். எங்களோட கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவங்களோட கல்யாணம் இருக்கும்".

"வாவ்.. சூப்பர் நியூஸ்டி. ஜாலி ஜாலி.. கீது ஆசைப்பட்ட படியே அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது" மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவள் நொடியில் புருவம் சுருங்க கேட்டாள், "அந்த ராஜேஷ்க்கு கல்யாணம் ஆகாத ஒரு அண்ணன் இருக்கானே. அவனுக்கு பண்ணாம எப்படி இவனுக்கு பொண்ணு பார்த்தாங்க?".

"ஓ.. அதுவா. ராஜேஷ் கூட பிறந்த அண்ணன் யாதேஷ் இருக்கானே அவனுக்கு உன் ஆளு ரவியோட ரீலேடிவ் நேகாவை பேசியிருக்கிறாங்களாம். இதுவும் லவ் மேரேஜ் தானாம். எல்லாருக்கும் ஜோடி செட் பண்ணி முடிச்சி வச்சது யாருன்னு நினைக்கிற.. ம்ம்ம்ம்.. எல்லாம் உன் ஆளு தி கிரேட் ரவி வர்மாவாக்கும்".

பிரமிப்பில் ஆரதானாவிற்கு பேச்சே வரவில்லை. சாத்தியமில்லாததை கூட இவன் சப்தம் போடாமல் சாத்தியம் ஆக்கியிருக்கிறானே. எதற்க்காக இத்தனை வேகம். இவனுக்கு எப்படி இப்படி யோசிக்க முடிகிறது.

"ஹேய்.. என்ன ஆச்சு. அப்படியே பிரீஸ் ஆகிட்ட. ஆ..ஆ..ரு.."

"ஹ்ம்ம்ச். ஒன்னுமில்ல. எல்லாம் இவ்ளோ ஸ்பீடா நடக்கும் போது கொஞ்சம் உதறலா இருக்கு".

"ச்ச்சி.. ச்சி.. தப்பா எதுவும் இருக்காது. வீணா கற்பனை பண்ணிக்காத. இது தான் விதியா கூட இருக்கலாம். அதோட ரவிக்கு உன்னை விட்டு பிரிஞ்சி இருக்க கஷ்டமா இருக்குமா இருக்கும். சோ சார் லவ் மூட்ல வேகமா செய்யுறார். அவ்ளோ தான். சரி போய் தூங்கு. இப்பவே லேட் நைட் ஆகிடிச்சி". அறைக்கதவை தாளிட்டு விட்டு சென்று விட்டாள் வதனா.

ரவியை பற்றியே யோசித்தபடி தூங்க ஆரம்பித்தவளை யாரோ கூப்பிடுவது போல இருந்தது.

"ஆ..ஆ..ஆராதனா.. ஆ..ஆராதனா... எ..ழு..ந்தி..டு. நீ..நீ.. செய்ய வேண்டிய வேலை ஒன்று பாக்கி இருக்கு. அது முடியாம உன்னால உன் வாழ்க்கையை தொடங்க முடியாது.. எழுந்திடு ஆராதனா.. எழுந்திடு.."

"முஹும்.. யாரது? அர்த்தராத்திரியில் எழுப்பி விடுறது.. ஹே.. வது.. உன் வேலையாடி? ம்ம்ம்.." புருவம் சுருங்க கண்கள் கசக்கியபடி படுத்திருந்தவள் கை கால்களை ஸ்பைடர் மாதிரி வடக்கேயும் தெற்கேயும் மாற்றி மாற்றி அசைத்தாள்.

கண்கள் சொருக மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர நினைத்தவளை எழுப்பியது அதே குரல். "நீ எங்களுக்காக செய்ய வேண்டிய நேரம் வந்திடுச்சு. எழுந்திடு. இனி தமாதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் இந்த பூமிக்கு தான் ஆபத்து. ம்ம்ம்.. உன் உள்ளுணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது. உடனே கிளம்பு. எங்களோட புறப்பட்டு வா".

கம்பீரமும் உறுதியும் தெரிந்த அந்த குரலில் மனம் ஒரு நொடி திகைக்க பெண்ணவள் தேகம் நடுங்க தொடங்கியது. நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒருவித அழுத்தம் பரவி அவளது நியூட்ரான் செலகளுக்குள் பரவசத்தை பரப்பியது. உடலிலிருந்து எதுவோ ஒன்று தன்னை விட்டு பிரிந்து செல்வது போல ஒரு பிரம்மை. ஆழ்மனதில் ஏதேதோ விஷயங்கள் படம் போல காட்சிகளாய் விரிய.. அதில் தெரிந்த உருவங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த.. கண்மூடிய படியே அந்த நிகழ்ச்சியின் வீரியத்தை பெண்ணவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவசரமாய் இருக்கும் தன் அவசியத்தை உணர்ந்தும் உணராததுமாய்.. யாராலும் செய்ய முடியாத செயலை தான் மட்டுமே செய்ய வேண்டிய நிர்பந்தத்தை... அந்த கல்நெஞ்சில் ஓரமாய் பூத்து காய்ந்து சருகான மலரை மீண்டும் உயிர்த்தெழ செய்ய தன்னால் மட்டுமே முடியும் என்பதை பெண்ணவள் நெஞ்சம் அடித்து சொன்னது.

ஒருவித பதற்றத்துடன் கண்களை திறந்தாள் ஆராதனா. சுற்றிலும் இருள் பரவியிருக்க.. அந்த புது குட்டி தோழனான பப்பியும்(நாய்), தங்க மீனும் மட்டுமே துணைக்கு இருந்தது. 'இது என்ன? விசித்திரமாய் இருக்கிறது.. என்ன நடக்கிறது இங்கே? நான் எங்கே இருக்கிறேன்?' மனம் அலைகழிக்க பெண்ணவள் உரைந்து நிற்கையில்.. நீரிலே உலா போய் கொண்டிருந்த தங்க மீன் துள்ளி குதித்து அவள் காலடியில் அடைக்கலம் புகுந்தது.

சீதையை அசோக வனத்தில் சந்தித்து தலை வணங்கி வந்தனம் தெரிவித்து மரியாதை கொடுத்த அந்த குரங்கரசன் ஆஞ்சிநேயர் போல இருந்தது இச்செய்கை. குனிந்து நடுங்கும் விரல்களால் தங்க மீனை உள்ளங்கையில் ஏந்தியவள் அதன் கண்ணோடு கலந்து பேச ஆரம்பித்தாள்.

"இப்போ.. இங்க நடக்கிறது எல்லாம் எதுக்காக? என்னை சுற்றி நடக்கிற இந்த மர்மத்துக்கு காரணம் என்ன?"

"சொல்கிறேன். பொறு. முதலில் உன் மேல் நம்பிக்கை வை. இதுவரை யாராலும் செய்ய முடியாத ஒன்றை நீ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய்".

தங்கமீன் இப்படி பேசவும் ஆரு அதிர்ந்து விட்டாள். அதெப்படி இந்த மீன் பேசுவது எனக்கு புரிகிறது? தன் சந்தேகத்தை மறைத்தப்படி அதனிடம் கேட்டாள்,

"அப்படி என்ன கட்டாயம்?".

"ஏன்..ன்னா.. உன்னால மட்டும் தான் எங்களை எங்களோட கிரகத்துக்கு கூட்டிட்டு போக முடியும்".

"எ..எ..ன்ன.. நீங்க வேற்று கிரக வாசிகளா? அப்படின்னா நீங்க ஏலியன்ஸ்ஸா?" கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும்படி ஆச்சரியத்தில் கேட்டாள் ஆரு.

"எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற? நாங்க ரெண்டு பேரும் ஏலியன்ஸ் தான். நீ நினைக்கிற மாதிரி பயங்கரமானவங்க ஒன்னும் இல்லை" கோபமாய் குரைத்தது பப்பி டாக்.

"சா..சாரி. நிறைய மூவிஸ்ல அப்படி காட்டி இருக்கிறதுனால கொஞ்சம் பயந்துட்டேன். அது சரி இவ்ளோ நாளா நீங்க ரெண்டு பேரும் எங்கிருந்தீங்க? இப்போ மட்டும் எப்படி என்னை தேடி கண்டுப்பிடிச்சீங்க?".

"நாங்க ரெண்டு பேரும் அந்த மந்திர பரமபத பெட்டிக்குள்ள அடைப்பட்டு இருந்தோம். நாங்க தான் அந்த தாய கற்கள்" தங்க மீன் சோகமாய் உரைத்தது.

"அப்படின்னா இவ்ளோ நாளா நீங்க என் கழுத்துல அந்த ஜெயின் டாலரா இருந்தீங்களா?? என்னால நம்பவே முடியல. பின்ன எப்படி அந்த கல்லுல இருந்து வெளியே வந்தீங்க?"

"நாங்க குறிப்பிட்ட காலம் வரை அதுல அடைப்பட்டு இருக்கணும்னு சாபம். எங்களோட எஜமான் சொன்ன கட்டளையை எங்களால் நிறைவேத்த முடியல. அதோட அந்த நேரத்தில் ஏற்பட்ட பிரளயத்தால் இந்த மாதிரி நாங்க இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்" -பப்பி டாக்

"யாரோட கைகள் இந்த தாய கற்கள் மீது பட்டு அதன் ஆயுள் முடியுதோ.. அப்போ நாங்க சுதந்திரம் அடைவோம் அப்படின்னு எங்களோட எஜமான் சொல்லியிருந்தார். உன்னோட அம்மா.. ரவியோட அம்மா.. ரவி.. அப்புறம் நீ.. இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கை மாறி.. கடைசில உன்னால தான் எங்களோட சாபம் போய் எங்களோட லைஃப் திரும்ப கிடைச்சி. அது படி உன்னால் தான் கற்களுக்கு உள்ள ஒளிரும் பவர் முடிவுக்கு வந்து. சோ அதுக்கு அப்புறம் நாங்க வெளியே வந்துட்டோம்.

ஆனால் இப்போதைக்கு எங்களுக்கு உள்ள சக்திகள் எதையும் பயன்படுத்த முடியாது. எங்களோட ஒரிஜினல் உருவத்தையும் பெற முடியாது" -தங்க மீன்.

"ஏன்..?" பாவமாய் கேட்டாள் ஆரு.

"எங்களோட கிரகத்துக்கு போனா தான் எங்க லைஃப் பழையபடி மாறும்".

"அது சரி.. உங்க உலகத்துக்கு எப்படி போறது? நான் எப்படி இதுல உதவ முடியும்?".

"அதை போக போக நாங்க சொல்லுறோம் இப்போ வா போகலாம்" என்றபடி அந்த இருளில் நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் நடந்த பின் இருள் விலகி ஒளி பரவ தொடங்கிய நேரம் அவர்கள் அங்கே ஆழ்கடலின் மேலே நிற்பதை உணர்ந்து பயந்து போனாள் ஆரு.

"ஹைய்யோ நான் தண்ணீல மூழ்கி சாக போறேன்" கை கால்கள் தள்ளாடியபடி பெண்ணவள் நடுங்கினாள்.

"ச்சு. சும்மா இரு ஆராதனா. அதெல்லாம் ஒன்றும் ஆகாது" ஆதரவாய் சொன்னது அவள் கையில் இருந்த தங்க மீன்.

"அ..அது எப்படி..?"

"அதெல்லாம் அப்படி தான். வா நடப்போம்".

"என்ன இது சும்மா ஜாலியா பழகலாம்ங்கிற மாதிரி ஈஸியா தண்ணீ மேல நடக்கலாம்னு சொல்லுறீங்க. ஆமா.. உங்களோட உலகத்துக்கு இப்படியே நடத்தியே கூட்டிட்டு போயிறலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?" இடுப்பில் கையை ஊன்றியபடி அந்த இரு ஏலியன் குட்டிகளையும் பார்த்து கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லை. நமக்கு அங்கே போக யாராவது உதவி செய்வாங்க. போக போக உனக்கே தெரியும். சோ நீ எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதோட இப்போ நீ ஒரு ஆன்மா. அதாவது உடல் இல்லா உயிர். உன்னோட உடல் பூமியில் உன்னோட வீட்டில் பாதுகாப்பா இருக்கும் நீ திரும்பி வர வரை".

"ஹைய்யோ என்ன சொல்லுற.. அப்போ நான் செத்து போயிட்டேனா..?"

"லூசு லூசு.. இவ்ளோ நேரமா நாங்க என்ன சொன்னோம்" பற்களை கடித்தப்படி குரைத்தது பப்பி டாக்.

"பூமியில இருக்கிற உன்னோட பிரதிப்பிம்பம் அதாவது ஜெராக்ஸ் காப்பிக்கு எதுவும் மாறாது. ஒரு ரோபோ போல எல்லா விஷயமும் அந்த ஆராதனா பண்ணுவா. அதே மாதிரி உடல் இல்லாத நீ.. இங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண போற. சோ உன்னோட லைஃப் சேப் தான்.

நீ எங்க கிரகத்துல இருந்து திரும்பி வந்த அப்புறம் உன்னோட ஆன்மா அதாவது இப்போ எங்க கூட இருக்கிற நீ.. பூமியில இருக்கிற உன்னோட உடல் கூட சேர்ந்து ஒன்றாக மாறிடுவீங்க".

"அப்பாடி.. இப்போ தான் நிம்மதியா இருக்கு. ஆமா உங்களோட கிரகத்துக்கு போக எவ்ளோ நாள் ஆகும்? ஏன் கேட்கிறேன்னா இன்னும் ஏழு நாளுல எனக்கு கல்யாணம்".

"ம்ம்ம்.. நீ கேள்வி கேட்காமா வந்தின்னா சீக்கிரம் போய் சேரலாம் "என்று தங்க மீன் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு நீலதிமிங்கலம் அவர்கள் மூவரையும் விழுங்கியது.

"ஆஆஆஆ.." அலரலுடன் திமிங்கலத்தின் வாயின் உள்ளே செல்லலானார்கள். 'டொப்..' என்ற சத்தத்துடன் அதன் வயிற்றில் தள்ளப்பட்டனர்.

"அய்யோ.. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே எப்படி தப்பிக்கிறது?" பயத்தில் நா உலர்ந்தபடி கேட்டாள் ஆரு.

"பொறு. ஏதாவது வழி கிடைக்கும்" என்றபடி தங்க மீன் அவள் கையிலிருந்து கீழே குதித்து நீச்சலடிக்க தொடங்கியது. பப்பி டாக்கோ அங்கும் இங்கும் குதித்தோடி எதையோ தேட தொடங்கியது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் போர் அடிக்கவும்.. சுற்றுப்புறத்தை ஆராயலானாள்.

நல்ல சிவந்த நிறத்தில் தடிமனான அதே சமயம் உறுதியாக தெரிந்த தசைகளும்.. உணவின் எச்சங்கள் சிதறிகிடக்க அங்கே ஓரிடத்தில் எதுவோ ஒன்று அவள் கருத்தை கவர அதை கையில் எடுக்க முனைந்தாள். இவள் இழுப்புக்கு அது வெளிவர அடம்பிடிக்கவும் மூச்சை தம் பிடித்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் மறைந்திருந்த வாசல் திறக்க மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட துரும்பாய் இழுத்து செல்லப்பட்டனர்.

இழுத்து செல்லப்பட்ட அவர்கள் அங்கும் இங்கும் முட்டி மோதி 'பொத்' தென்று வந்து விழுந்தனர் பஞ்சு மேகத்தின் மீது. என்னடா.. 'நமக்கு அடி ஒன்னும் படலையே..' என்று சிந்தித்தவாறு நெற்றியை தடவியப்படி எழுந்தவள் தான் இருக்குமிடமறிந்து ஆனந்தத்துடன்அதிர்ந்தாள்.


"ஹைய்யோ.. நாம இப்போ க்ளவுட் மேலே நிக்குறோமா?? வாவ்.. சூப்பர். எவ்ளோ சாப்ட்டா இருக்கு. காத்து மாதிரில நான் பறக்கிறேன்.." இரு கைகளையும் பறவை பறப்பது போல வைத்து அங்கும் இங்கும் ஆடி பாடிய படி தாவி தாவி ஓடினாள் பெண். அவள் ஆடிய ஆட்டத்தில் ஏற்பட்ட அதிர்வில் கலைந்திருந்த மேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து அது ஒரு ராட்சஷ உருவமானது.

இதை பார்த்துக் கொண்டிருந்த தங்கமீனும் பப்பி டாக்கும் "டேய் பப்பி.. நம்மல கரை சேர்க்க ஒரு அறிவாளியை தான் நம்ம எஜமான் அனுப்புவார்ன்னு பார்த்தா ஒரு கோமாளியை அனுப்பி வச்சியிருக்கிறாரே".

"ஆமாடா. ஆனாலும் ஜோக்கருக்கு ஏதோ ஒரு பவர் இருக்க போய் தானே நாம அடுத்த லெவலுக்கு வந்திருக்கோம். சோ இவள் கோமாளியா இருந்தா என்ன? பேமாளியா இருந்தா என்ன? வா அடுத்து எப்படி இங்கிருந்து போகலாம்னு பார்ப்போம்".

பறந்து பறந்து ஆடியவள் களைத்துப் போய் ஓரிடத்தில் அமரவும் அந்த ராட்சஷ உருவம் பெரியதாக மாற தொடங்கியது. அதை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது ஆருவிற்கு. கூர்ந்து கவனித்தவள் மூளையில் பொறி தட்டியது. 'இது ரவி காட்டிய அந்த மரப்பெட்டியில் இருந்த வெள்ளை யானை தானே?'. மெதுவாக அதனருகே சென்றவள் சற்றும் யோசிக்காமல் உயர்ந்திருந்த அதன் தும்பிக்கையில் தாவி குதித்தமர்ந்தாள்.

சீ-சா கேம் போல அதன் தும்பிக்கை சட்டென கீழே தாரவும் இரு வெள்ளை சிறகுகள் யானையின் வயிற்று பகுதியில் முளைக்கவும் சரியாய் இருந்தது. அதை பார்த்தவள் கை தட்டி ஆர்ப்பரித்து சிரித்தாள் ஆரு. ஹேய் கோல்ட் பிஷ் அண்ட் பப்பி முழிச்சிக்கிட்டு நிக்குறீங்க. சீக்கிரம் வாங்க. உங்களை விட்டுட்டு பறந்துட போகுது.

தங்கமீனும் பப்பி டாக்கும் அலறி அடித்து கொண்டு ஏறினர் அந்த பறக்கும் வெள்ளை யானையின் மீது. வட்டவடிவத்தில் ஒரு சுற்று சுற்றிய அந்த யானை தன் பயணத்தை சிறப்பாய் தொடங்கியது. ஆருவிற்கு எல்லாம் சுவாரசியமாய் இருந்தது. ஏதோ குழந்தைகள் படிக்கும் கதை புத்தகத்தில் நுழைந்தது போல பிரம்மை.

காற்றில் அலைமோதிய முடிகளை இழுத்து பிடித்தவாறு அமர்ந்தவள் அந்த குட்டி ஏலியன்களை பார்த்து, "முதலயே கேட்கணும்னு நினைச்சேன் ஆனால் சுத்தி நடந்த ஆச்சரியத்துல மறந்துட்டேன். ஆமா.. உங்களோட எஜமான் யாரு..?".

"எஜமான் காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே பூசிடுவோம்.." பேக் கிரவுண்ட் சாங் ஓட தங்க மீன் உரைத்தது. "மகாமுனி அகத்திய சித்தர். எம்பெருமான். எம்குல தலைவன். ஓர் அங்குல மண்குடுவையில் ஜனித்து பூமிக்கு யாத்திரை வந்தாரே அந்த குள்ளமணி சித்தர் அகத்தியரே எம் எஜமான்" கர்வமாய் கர்ஜித்தது.

"ஓ..அது சரி. இந்த ஓல்ட் மூவிஸ்ல எல்லாம் காட்டுவாங்களே குள்ளமா தாடி வச்சிக்கிட்டு கையில ஒரு குண்டலமும் கம்பும் வச்சிக்கிட்டு நிறைய தகிடுதத்தம் எல்லாம் பண்ணுவாரே அவரா? ".

"ஆம். உனக்கு ஒன்று தெரியுமா? இந்த பிரபஞ்சத்திற்கே காலப்பயணம் செய்து சாகசம் புரிந்தவர் எங்கள் அகத்தியர்".

"அவர் தான் இந்த டைம் ட்ராவல் விஷயத்தை அறிமுகப்படுத்தி வச்சாரா? இன்ரெஸ்டிங்".

"அது மட்டுமில்லை.. தமிழ் இலக்கியத்தை வகுத்து இப்படி தான் எழுத வேண்டும் அப்படின்னு விதிமுறைகளை கொடுத்தவர் இவர். அதோடு சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ரிக், யஜூர், சாம, அதர்வண நான்கு வேதங்களிலும் வலம் வருபவர் இந்த மாமூனி. இந்த வேதங்கள் ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அப்படின்னா அகத்தியரது வயசென்ன?".

"ஹே.. குள்ள டாக்கு. அவர் தான் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறாரே. பின்ன எப்படி வயசாகும்?? சோ அவர் எல்லா யுகத்திலும் யூத் ஐகானா இருந்திருக்கார்" அசால்ட்டாக பதிலுரைத்தாள் ஆரு.

"இவர் சப்தரிஷிகளில் ஒருவரா இருக்கிறார். ரிஷிகள் இந்த நான்கு வேதங்கள் எழுதப்படுவதற்கு முன் வாழ்ந்தவர்கள். அது மட்டுமில்ல இவர் பிறக்கும் போதே முழுமனுஷனாக ஒரு மண் குடுவையில் இருந்து வெளிவந்திருக்கார்".

"சோ அந்த மண் குடுவை தான் டைம் ட்ராவல் பண்ண ஹெல்ப் பண்ணுன மெஷின். சின்ன பானையில இருந்து வந்ததுனால நம்ம யூத் அகத்தியர் குள்ளமா பப்ளியா இருந்திருக்கார். என்ன கரக்ட்டா..?" இல்லாத சட்டை காலரை உயர்த்தியப்படி பெருமையாய் சொன்னாள் ஆரு.

"போதும் போதும். இப்போ நான் சொல்லுறதை கேளு எங்களோட ஆள் யார் தெரியுமா?" கண்ணில் ஒளியுடன் சொன்ன பப்பி டாக்கை குறும்புடன் பார்த்த ஆராதனா, "எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற. விஷயத்துக்கு வா" என்று கூறி வெத்து போன பட்டசாக மாற்றினாள்.

அவள் சொன்ன தினுசில் உள்ளுக்குள் ஆருவை கடித்து குதறிவிடும் வெறி கிளம்பினாலும் அதை அடக்கிய பப்பி நிமிர்ந்து தன்னை சமன்ப்படுத்தியபடி கர்வமாய் கம்பீர தொனியில் உரைத்தது. "அகத்தியர் ஒரு தமிழன்".

"ஆ..ஆ..ஆ... என்ன சொன்ன.. நீ.. நீ.. நீ.. இப்போ என்ன சொன்ன. அவர் தமிழரா? அம்மாடி.. அப்படின்னா தமிழ் மூத்த மொழி தான். மார் தட்டி சொல்லி கொள்வதில் தவறில்லை தான். ஹே டாக் சூப்பர் சூப்பர். உன் எஜமான் உண்மையிலே பெரிய ஆள் தான்டா. அது சரி அவர் உங்களுக்கு என்ன ஜோலி கொடுத்தார். நீங்க இப்படி சாபம் வாங்குற அளவுக்கு..?".

"அது..அது.. "என்று தயங்கிய தங்க மீனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்திய பின் அடுத்த எபியில் பார்க்கலாம்.
 

Deiyamma

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டெய்யம்மா டியர்

Banu dear..
U r my energy booster da. நான் பதிவு எப்போ எவ்ளோ நாள் கழிச்சு போட்டாலும் follow pani cmts share பண்ணுறீங்க. Im so happy மா. From starting to nw u r spcl டா. Thank யூ...
 

Nasreen

Well-Known Member
ஹாய் மக்களே

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து உற்சாக படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்:D:love::giggle:


View attachment 7834
View attachment 7835
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 31

கனா காண்கிறேன் நான்
அனுமானுஷ்ய உலகில்
குட்டி குட்டி நட்பூக்களுடன்

குளு குளு சீதோஷ்னத்தில்..

ரவி வர்மாவின் அதிரடி கல்யாண செய்தியில் வீடே அதிர்ந்து அடங்கி போயிருக்க தனது அறையில் ஆராதனா அவன் அணிவித்திருந்த அந்த இதய வடிவ மோதிரத்துடன் கொஞ்சி கொண்டிருந்த சமயம் அவள் காலடியில் எதுவோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள்.

"ஹைய்.. புசு புசு குட்டி. நீங்க யாரு. எப்படி இங்க வந்தீங்க?" என்றபடி காலடியிலிருந்த அந்த நாய்குட்டியை பார்த்த சுவாரசியத்தில் தன்னை மறந்து குதூகளித்தாள். அப்போது அங்கே வந்த வதனா "அப்பாக்கு யாரோ கிப்ட்டா கொடுத்தாங்களாம். இது பார்க்க அழகா இருக்குல்ல.. சோ அப்பாவும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டார்" என்றபடி வட்ட வடிவத்தில் கண்ணாடியிலான மீன் தொட்டியை மேசையின் மீது வைத்தாள். அதனுள் தங்க நிற மீன் ஒன்று சுதந்திரமாக நீந்தி கொண்டிருந்தது.

"ஹேய்.. இது எப்போ வாங்குனது? இன்றைக்கு என்ன ஒரே சர்ப்ரைஸ்ஸா இருக்கு".

"அம்மாவோட ஷாப்ல ஒர்க் பண்ணுற ஒருத்தங்க வெளியூர் போறாங்களாம். அவங்க வீட்ல இதை கவனச்சிக்க ஆள் இல்லை. சோ அவங்க திரும்பி வரும் வரை நம்ம வீட்ல தான் சார் கெஸ்ட்டா ஸ்டே பண்ண போறார்".

"ஓ. சரி சரி. நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்" பேசிக்கொண்டு இருந்தவள் சட்டென ஆச்சரியத்தில் "ஹேய் இதோ பாரேன். இந்த பிஷ் கன்னம் ரெண்டும் சிவப்பு காலரா சேஞ்ச் ஆகுது".

"ஹே.. ஆமாமில்லை".

சகோதரிகள் இருவரும் புது தோழர்களுடன் உறவாடி கொண்டிருந்த பொழுது வதனாவின் கண்ணில் அன்று பாட்டி கொடுத்த மூன்றடுக்கு தங்க சங்கிலி பட்டது. அதை கைகளில் தூக்கி பார்த்தவள் "ஏய் ஆரு. இது என்னன்னு தெரியுதா?"

"ஏன் பார்த்தா தெரியலையா.. செயின்டி".

"போடி லூசு. இதோட முதலடுக்கில் இருக்கிற 'ப்ளூ ஐ' டேவில் ஐ (devil eye) மீன் பண்ணுது. நம்ம ஊர்ல கண்திருஷ்டி படமா இருக்க சாமி கயிறு கட்டுவோம்ல அது மாதிரி தான் இதுவும்".

"ஓ.. அப்படியா?".

"ம்ம்ம்.. யாரோட பொறாமையும் நெகட்டிவ் எனர்ஜியும் உன் மேல பட்டு உனக்கு அதனால எந்தவித பாதிப்பும் வர கூடாதுன்னு பாட்டி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கிறாங்க போல".

"வாவ்.. சூப்பர் சூப்பர். பாட்டி ரியலி கிரேட். லவ் யூ பாட்டிமா". சந்தோஷத்தில் பறக்கும் முத்தத்தை பாட்டிக்கு பரிசாக அனுப்பினாள் பெண்.

"அது சரி. இதை ஏன் அப்படியே வச்சியிருக்கிற. கழுத்துல போட்டுக்க வேண்டியது தானே.." என்றபடி அவளே ஆருவின் கழுத்தில் அந்த செயினை அணிவித்தாள்.

"அப்புறம் ஆரு.. ரொம்ப தேங்க்ஸ்டி. உன்னால தான் எனக்கும் ராமுக்கும் இவ்ளோ சீக்கிரம் மேரேஜ் நடக்க போகுது" பின்னிருந்து ஆருவை அணைத்து கொண்டு உச்சியில் இதழ் பதித்தாள்.

"ஹேய் வது.. தேங்க்ஸ்லாம் எதுக்குடி? எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு அக்கா. அவளோட லைஃப் என்னால கேள்வி குறி ஆகும் போது அதை சால்வ் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா? சோ நீ பீல் பண்ணுற அளவு நான் பெருசா ஒன்னும் செஞ்சிடல" சொன்னவாறு வதனாவின் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.

"உனக்கு ஒன்னும் கோபமில்லையே? ரவி விஷயத்துல..".

"அதெல்லாம் ஒன்னுமில்லை. அதான் உன்னோட ஆளு மார்னிங்க் மீட்டிங்லயே தெளிவா சொல்லிட்டாரே.. ஆனாலும் உன் ஆள் ரொம்ப பாஸ்ட் தாண்டி. இவ்ளோ ஸ்பீட் ஆகாதுடி.."

"ஹீ ஹீ ஹீ.." அப்பட்டமாய் ஜொள்ளு வடித்தாள் ஆராதனா.

"போதும் நிப்பாட்டு. ரொம்ப வழியுது. துடச்சிட்டு போய் தூங்கு. அப்புறம் ஆரு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ராம்மோட சிஸ்டர் அதான் உன்னோட ஆருயிர் தோழி கீது இருக்காளே.. அவளை ராஜேஷ் பொண்ணு கேட்டு பேசி முடிச்சாச்சாம். எங்களோட கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவங்களோட கல்யாணம் இருக்கும்".

"வாவ்.. சூப்பர் நியூஸ்டி. ஜாலி ஜாலி.. கீது ஆசைப்பட்ட படியே அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது" மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவள் நொடியில் புருவம் சுருங்க கேட்டாள், "அந்த ராஜேஷ்க்கு கல்யாணம் ஆகாத ஒரு அண்ணன் இருக்கானே. அவனுக்கு பண்ணாம எப்படி இவனுக்கு பொண்ணு பார்த்தாங்க?".

"ஓ.. அதுவா. ராஜேஷ் கூட பிறந்த அண்ணன் யாதேஷ் இருக்கானே அவனுக்கு உன் ஆளு ரவியோட ரீலேடிவ் நேகாவை பேசியிருக்கிறாங்களாம். இதுவும் லவ் மேரேஜ் தானாம். எல்லாருக்கும் ஜோடி செட் பண்ணி முடிச்சி வச்சது யாருன்னு நினைக்கிற.. ம்ம்ம்ம்.. எல்லாம் உன் ஆளு தி கிரேட் ரவி வர்மாவாக்கும்".

பிரமிப்பில் ஆரதானாவிற்கு பேச்சே வரவில்லை. சாத்தியமில்லாததை கூட இவன் சப்தம் போடாமல் சாத்தியம் ஆக்கியிருக்கிறானே. எதற்க்காக இத்தனை வேகம். இவனுக்கு எப்படி இப்படி யோசிக்க முடிகிறது.

"ஹேய்.. என்ன ஆச்சு. அப்படியே பிரீஸ் ஆகிட்ட. ஆ..ஆ..ரு.."

"ஹ்ம்ம்ச். ஒன்னுமில்ல. எல்லாம் இவ்ளோ ஸ்பீடா நடக்கும் போது கொஞ்சம் உதறலா இருக்கு".

"ச்ச்சி.. ச்சி.. தப்பா எதுவும் இருக்காது. வீணா கற்பனை பண்ணிக்காத. இது தான் விதியா கூட இருக்கலாம். அதோட ரவிக்கு உன்னை விட்டு பிரிஞ்சி இருக்க கஷ்டமா இருக்குமா இருக்கும். சோ சார் லவ் மூட்ல வேகமா செய்யுறார். அவ்ளோ தான். சரி போய் தூங்கு. இப்பவே லேட் நைட் ஆகிடிச்சி". அறைக்கதவை தாளிட்டு விட்டு சென்று விட்டாள் வதனா.

ரவியை பற்றியே யோசித்தபடி தூங்க ஆரம்பித்தவளை யாரோ கூப்பிடுவது போல இருந்தது.

"ஆ..ஆ..ஆராதனா.. ஆ..ஆராதனா... எ..ழு..ந்தி..டு. நீ..நீ.. செய்ய வேண்டிய வேலை ஒன்று பாக்கி இருக்கு. அது முடியாம உன்னால உன் வாழ்க்கையை தொடங்க முடியாது.. எழுந்திடு ஆராதனா.. எழுந்திடு.."

"முஹும்.. யாரது? அர்த்தராத்திரியில் எழுப்பி விடுறது.. ஹே.. வது.. உன் வேலையாடி? ம்ம்ம்.." புருவம் சுருங்க கண்கள் கசக்கியபடி படுத்திருந்தவள் கை கால்களை ஸ்பைடர் மாதிரி வடக்கேயும் தெற்கேயும் மாற்றி மாற்றி அசைத்தாள்.

கண்கள் சொருக மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர நினைத்தவளை எழுப்பியது அதே குரல். "நீ எங்களுக்காக செய்ய வேண்டிய நேரம் வந்திடுச்சு. எழுந்திடு. இனி தமாதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் இந்த பூமிக்கு தான் ஆபத்து. ம்ம்ம்.. உன் உள்ளுணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது. உடனே கிளம்பு. எங்களோட புறப்பட்டு வா".

கம்பீரமும் உறுதியும் தெரிந்த அந்த குரலில் மனம் ஒரு நொடி திகைக்க பெண்ணவள் தேகம் நடுங்க தொடங்கியது. நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒருவித அழுத்தம் பரவி அவளது நியூட்ரான் செலகளுக்குள் பரவசத்தை பரப்பியது. உடலிலிருந்து எதுவோ ஒன்று தன்னை விட்டு பிரிந்து செல்வது போல ஒரு பிரம்மை. ஆழ்மனதில் ஏதேதோ விஷயங்கள் படம் போல காட்சிகளாய் விரிய.. அதில் தெரிந்த உருவங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த.. கண்மூடிய படியே அந்த நிகழ்ச்சியின் வீரியத்தை பெண்ணவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவசரமாய் இருக்கும் தன் அவசியத்தை உணர்ந்தும் உணராததுமாய்.. யாராலும் செய்ய முடியாத செயலை தான் மட்டுமே செய்ய வேண்டிய நிர்பந்தத்தை... அந்த கல்நெஞ்சில் ஓரமாய் பூத்து காய்ந்து சருகான மலரை மீண்டும் உயிர்த்தெழ செய்ய தன்னால் மட்டுமே முடியும் என்பதை பெண்ணவள் நெஞ்சம் அடித்து சொன்னது.

ஒருவித பதற்றத்துடன் கண்களை திறந்தாள் ஆராதனா. சுற்றிலும் இருள் பரவியிருக்க.. அந்த புது குட்டி தோழனான பப்பியும்(நாய்), தங்க மீனும் மட்டுமே துணைக்கு இருந்தது. 'இது என்ன? விசித்திரமாய் இருக்கிறது.. என்ன நடக்கிறது இங்கே? நான் எங்கே இருக்கிறேன்?' மனம் அலைகழிக்க பெண்ணவள் உரைந்து நிற்கையில்.. நீரிலே உலா போய் கொண்டிருந்த தங்க மீன் துள்ளி குதித்து அவள் காலடியில் அடைக்கலம் புகுந்தது.

சீதையை அசோக வனத்தில் சந்தித்து தலை வணங்கி வந்தனம் தெரிவித்து மரியாதை கொடுத்த அந்த குரங்கரசன் ஆஞ்சிநேயர் போல இருந்தது இச்செய்கை. குனிந்து நடுங்கும் விரல்களால் தங்க மீனை உள்ளங்கையில் ஏந்தியவள் அதன் கண்ணோடு கலந்து பேச ஆரம்பித்தாள்.

"இப்போ.. இங்க நடக்கிறது எல்லாம் எதுக்காக? என்னை சுற்றி நடக்கிற இந்த மர்மத்துக்கு காரணம் என்ன?"

"சொல்கிறேன். பொறு. முதலில் உன் மேல் நம்பிக்கை வை. இதுவரை யாராலும் செய்ய முடியாத ஒன்றை நீ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய்".

தங்கமீன் இப்படி பேசவும் ஆரு அதிர்ந்து விட்டாள். அதெப்படி இந்த மீன் பேசுவது எனக்கு புரிகிறது? தன் சந்தேகத்தை மறைத்தப்படி அதனிடம் கேட்டாள்,

"அப்படி என்ன கட்டாயம்?".

"ஏன்..ன்னா.. உன்னால மட்டும் தான் எங்களை எங்களோட கிரகத்துக்கு கூட்டிட்டு போக முடியும்".

"எ..எ..ன்ன.. நீங்க வேற்று கிரக வாசிகளா? அப்படின்னா நீங்க ஏலியன்ஸ்ஸா?" கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும்படி ஆச்சரியத்தில் கேட்டாள் ஆரு.

"எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற? நாங்க ரெண்டு பேரும் ஏலியன்ஸ் தான். நீ நினைக்கிற மாதிரி பயங்கரமானவங்க ஒன்னும் இல்லை" கோபமாய் குரைத்தது பப்பி டாக்.

"சா..சாரி. நிறைய மூவிஸ்ல அப்படி காட்டி இருக்கிறதுனால கொஞ்சம் பயந்துட்டேன். அது சரி இவ்ளோ நாளா நீங்க ரெண்டு பேரும் எங்கிருந்தீங்க? இப்போ மட்டும் எப்படி என்னை தேடி கண்டுப்பிடிச்சீங்க?".

"நாங்க ரெண்டு பேரும் அந்த மந்திர பரமபத பெட்டிக்குள்ள அடைப்பட்டு இருந்தோம். நாங்க தான் அந்த தாய கற்கள்" தங்க மீன் சோகமாய் உரைத்தது.

"அப்படின்னா இவ்ளோ நாளா நீங்க என் கழுத்துல அந்த ஜெயின் டாலரா இருந்தீங்களா?? என்னால நம்பவே முடியல. பின்ன எப்படி அந்த கல்லுல இருந்து வெளியே வந்தீங்க?"

"நாங்க குறிப்பிட்ட காலம் வரை அதுல அடைப்பட்டு இருக்கணும்னு சாபம். எங்களோட எஜமான் சொன்ன கட்டளையை எங்களால் நிறைவேத்த முடியல. அதோட அந்த நேரத்தில் ஏற்பட்ட பிரளயத்தால் இந்த மாதிரி நாங்க இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்" -பப்பி டாக்

"யாரோட கைகள் இந்த தாய கற்கள் மீது பட்டு அதன் ஆயுள் முடியுதோ.. அப்போ நாங்க சுதந்திரம் அடைவோம் அப்படின்னு எங்களோட எஜமான் சொல்லியிருந்தார். உன்னோட அம்மா.. ரவியோட அம்மா.. ரவி.. அப்புறம் நீ.. இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கை மாறி.. கடைசில உன்னால தான் எங்களோட சாபம் போய் எங்களோட லைஃப் திரும்ப கிடைச்சி. அது படி உன்னால் தான் கற்களுக்கு உள்ள ஒளிரும் பவர் முடிவுக்கு வந்து. சோ அதுக்கு அப்புறம் நாங்க வெளியே வந்துட்டோம்.

ஆனால் இப்போதைக்கு எங்களுக்கு உள்ள சக்திகள் எதையும் பயன்படுத்த முடியாது. எங்களோட ஒரிஜினல் உருவத்தையும் பெற முடியாது" -தங்க மீன்.

"ஏன்..?" பாவமாய் கேட்டாள் ஆரு.

"எங்களோட கிரகத்துக்கு போனா தான் எங்க லைஃப் பழையபடி மாறும்".

"அது சரி.. உங்க உலகத்துக்கு எப்படி போறது? நான் எப்படி இதுல உதவ முடியும்?".

"அதை போக போக நாங்க சொல்லுறோம் இப்போ வா போகலாம்" என்றபடி அந்த இருளில் நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் நடந்த பின் இருள் விலகி ஒளி பரவ தொடங்கிய நேரம் அவர்கள் அங்கே ஆழ்கடலின் மேலே நிற்பதை உணர்ந்து பயந்து போனாள் ஆரு.

"ஹைய்யோ நான் தண்ணீல மூழ்கி சாக போறேன்" கை கால்கள் தள்ளாடியபடி பெண்ணவள் நடுங்கினாள்.

"ச்சு. சும்மா இரு ஆராதனா. அதெல்லாம் ஒன்றும் ஆகாது" ஆதரவாய் சொன்னது அவள் கையில் இருந்த தங்க மீன்.

"அ..அது எப்படி..?"

"அதெல்லாம் அப்படி தான். வா நடப்போம்".

"என்ன இது சும்மா ஜாலியா பழகலாம்ங்கிற மாதிரி ஈஸியா தண்ணீ மேல நடக்கலாம்னு சொல்லுறீங்க. ஆமா.. உங்களோட உலகத்துக்கு இப்படியே நடத்தியே கூட்டிட்டு போயிறலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?" இடுப்பில் கையை ஊன்றியபடி அந்த இரு ஏலியன் குட்டிகளையும் பார்த்து கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லை. நமக்கு அங்கே போக யாராவது உதவி செய்வாங்க. போக போக உனக்கே தெரியும். சோ நீ எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதோட இப்போ நீ ஒரு ஆன்மா. அதாவது உடல் இல்லா உயிர். உன்னோட உடல் பூமியில் உன்னோட வீட்டில் பாதுகாப்பா இருக்கும் நீ திரும்பி வர வரை".

"ஹைய்யோ என்ன சொல்லுற.. அப்போ நான் செத்து போயிட்டேனா..?"

"லூசு லூசு.. இவ்ளோ நேரமா நாங்க என்ன சொன்னோம்" பற்களை கடித்தப்படி குரைத்தது பப்பி டாக்.

"பூமியில இருக்கிற உன்னோட பிரதிப்பிம்பம் அதாவது ஜெராக்ஸ் காப்பிக்கு எதுவும் மாறாது. ஒரு ரோபோ போல எல்லா விஷயமும் அந்த ஆராதனா பண்ணுவா. அதே மாதிரி உடல் இல்லாத நீ.. இங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண போற. சோ உன்னோட லைஃப் சேப் தான்.

நீ எங்க கிரகத்துல இருந்து திரும்பி வந்த அப்புறம் உன்னோட ஆன்மா அதாவது இப்போ எங்க கூட இருக்கிற நீ.. பூமியில இருக்கிற உன்னோட உடல் கூட சேர்ந்து ஒன்றாக மாறிடுவீங்க".

"அப்பாடி.. இப்போ தான் நிம்மதியா இருக்கு. ஆமா உங்களோட கிரகத்துக்கு போக எவ்ளோ நாள் ஆகும்? ஏன் கேட்கிறேன்னா இன்னும் ஏழு நாளுல எனக்கு கல்யாணம்".

"ம்ம்ம்.. நீ கேள்வி கேட்காமா வந்தின்னா சீக்கிரம் போய் சேரலாம் "என்று தங்க மீன் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு நீலதிமிங்கலம் அவர்கள் மூவரையும் விழுங்கியது.

"ஆஆஆஆ.." அலரலுடன் திமிங்கலத்தின் வாயின் உள்ளே செல்லலானார்கள். 'டொப்..' என்ற சத்தத்துடன் அதன் வயிற்றில் தள்ளப்பட்டனர்.

"அய்யோ.. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே எப்படி தப்பிக்கிறது?" பயத்தில் நா உலர்ந்தபடி கேட்டாள் ஆரு.

"பொறு. ஏதாவது வழி கிடைக்கும்" என்றபடி தங்க மீன் அவள் கையிலிருந்து கீழே குதித்து நீச்சலடிக்க தொடங்கியது. பப்பி டாக்கோ அங்கும் இங்கும் குதித்தோடி எதையோ தேட தொடங்கியது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் போர் அடிக்கவும்.. சுற்றுப்புறத்தை ஆராயலானாள்.

நல்ல சிவந்த நிறத்தில் தடிமனான அதே சமயம் உறுதியாக தெரிந்த தசைகளும்.. உணவின் எச்சங்கள் சிதறிகிடக்க அங்கே ஓரிடத்தில் எதுவோ ஒன்று அவள் கருத்தை கவர அதை கையில் எடுக்க முனைந்தாள். இவள் இழுப்புக்கு அது வெளிவர அடம்பிடிக்கவும் மூச்சை தம் பிடித்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் மறைந்திருந்த வாசல் திறக்க மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட துரும்பாய் இழுத்து செல்லப்பட்டனர்.

இழுத்து செல்லப்பட்ட அவர்கள் அங்கும் இங்கும் முட்டி மோதி 'பொத்' தென்று வந்து விழுந்தனர் பஞ்சு மேகத்தின் மீது. என்னடா.. 'நமக்கு அடி ஒன்னும் படலையே..' என்று சிந்தித்தவாறு நெற்றியை தடவியப்படி எழுந்தவள் தான் இருக்குமிடமறிந்து ஆனந்தத்துடன்அதிர்ந்தாள்.


"ஹைய்யோ.. நாம இப்போ க்ளவுட் மேலே நிக்குறோமா?? வாவ்.. சூப்பர். எவ்ளோ சாப்ட்டா இருக்கு. காத்து மாதிரில நான் பறக்கிறேன்.." இரு கைகளையும் பறவை பறப்பது போல வைத்து அங்கும் இங்கும் ஆடி பாடிய படி தாவி தாவி ஓடினாள் பெண். அவள் ஆடிய ஆட்டத்தில் ஏற்பட்ட அதிர்வில் கலைந்திருந்த மேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து அது ஒரு ராட்சஷ உருவமானது.

இதை பார்த்துக் கொண்டிருந்த தங்கமீனும் பப்பி டாக்கும் "டேய் பப்பி.. நம்மல கரை சேர்க்க ஒரு அறிவாளியை தான் நம்ம எஜமான் அனுப்புவார்ன்னு பார்த்தா ஒரு கோமாளியை அனுப்பி வச்சியிருக்கிறாரே".

"ஆமாடா. ஆனாலும் ஜோக்கருக்கு ஏதோ ஒரு பவர் இருக்க போய் தானே நாம அடுத்த லெவலுக்கு வந்திருக்கோம். சோ இவள் கோமாளியா இருந்தா என்ன? பேமாளியா இருந்தா என்ன? வா அடுத்து எப்படி இங்கிருந்து போகலாம்னு பார்ப்போம்".

பறந்து பறந்து ஆடியவள் களைத்துப் போய் ஓரிடத்தில் அமரவும் அந்த ராட்சஷ உருவம் பெரியதாக மாற தொடங்கியது. அதை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது ஆருவிற்கு. கூர்ந்து கவனித்தவள் மூளையில் பொறி தட்டியது. 'இது ரவி காட்டிய அந்த மரப்பெட்டியில் இருந்த வெள்ளை யானை தானே?'. மெதுவாக அதனருகே சென்றவள் சற்றும் யோசிக்காமல் உயர்ந்திருந்த அதன் தும்பிக்கையில் தாவி குதித்தமர்ந்தாள்.

சீ-சா கேம் போல அதன் தும்பிக்கை சட்டென கீழே தாரவும் இரு வெள்ளை சிறகுகள் யானையின் வயிற்று பகுதியில் முளைக்கவும் சரியாய் இருந்தது. அதை பார்த்தவள் கை தட்டி ஆர்ப்பரித்து சிரித்தாள் ஆரு. ஹேய் கோல்ட் பிஷ் அண்ட் பப்பி முழிச்சிக்கிட்டு நிக்குறீங்க. சீக்கிரம் வாங்க. உங்களை விட்டுட்டு பறந்துட போகுது.

தங்கமீனும் பப்பி டாக்கும் அலறி அடித்து கொண்டு ஏறினர் அந்த பறக்கும் வெள்ளை யானையின் மீது. வட்டவடிவத்தில் ஒரு சுற்று சுற்றிய அந்த யானை தன் பயணத்தை சிறப்பாய் தொடங்கியது. ஆருவிற்கு எல்லாம் சுவாரசியமாய் இருந்தது. ஏதோ குழந்தைகள் படிக்கும் கதை புத்தகத்தில் நுழைந்தது போல பிரம்மை.

காற்றில் அலைமோதிய முடிகளை இழுத்து பிடித்தவாறு அமர்ந்தவள் அந்த குட்டி ஏலியன்களை பார்த்து, "முதலயே கேட்கணும்னு நினைச்சேன் ஆனால் சுத்தி நடந்த ஆச்சரியத்துல மறந்துட்டேன். ஆமா.. உங்களோட எஜமான் யாரு..?".

"எஜமான் காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே பூசிடுவோம்.." பேக் கிரவுண்ட் சாங் ஓட தங்க மீன் உரைத்தது. "மகாமுனி அகத்திய சித்தர். எம்பெருமான். எம்குல தலைவன். ஓர் அங்குல மண்குடுவையில் ஜனித்து பூமிக்கு யாத்திரை வந்தாரே அந்த குள்ளமணி சித்தர் அகத்தியரே எம் எஜமான்" கர்வமாய் கர்ஜித்தது.

"ஓ..அது சரி. இந்த ஓல்ட் மூவிஸ்ல எல்லாம் காட்டுவாங்களே குள்ளமா தாடி வச்சிக்கிட்டு கையில ஒரு குண்டலமும் கம்பும் வச்சிக்கிட்டு நிறைய தகிடுதத்தம் எல்லாம் பண்ணுவாரே அவரா? ".

"ஆம். உனக்கு ஒன்று தெரியுமா? இந்த பிரபஞ்சத்திற்கே காலப்பயணம் செய்து சாகசம் புரிந்தவர் எங்கள் அகத்தியர்".

"அவர் தான் இந்த டைம் ட்ராவல் விஷயத்தை அறிமுகப்படுத்தி வச்சாரா? இன்ரெஸ்டிங்".

"அது மட்டுமில்லை.. தமிழ் இலக்கியத்தை வகுத்து இப்படி தான் எழுத வேண்டும் அப்படின்னு விதிமுறைகளை கொடுத்தவர் இவர். அதோடு சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ரிக், யஜூர், சாம, அதர்வண நான்கு வேதங்களிலும் வலம் வருபவர் இந்த மாமூனி. இந்த வேதங்கள் ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அப்படின்னா அகத்தியரது வயசென்ன?".

"ஹே.. குள்ள டாக்கு. அவர் தான் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறாரே. பின்ன எப்படி வயசாகும்?? சோ அவர் எல்லா யுகத்திலும் யூத் ஐகானா இருந்திருக்கார்" அசால்ட்டாக பதிலுரைத்தாள் ஆரு.

"இவர் சப்தரிஷிகளில் ஒருவரா இருக்கிறார். ரிஷிகள் இந்த நான்கு வேதங்கள் எழுதப்படுவதற்கு முன் வாழ்ந்தவர்கள். அது மட்டுமில்ல இவர் பிறக்கும் போதே முழுமனுஷனாக ஒரு மண் குடுவையில் இருந்து வெளிவந்திருக்கார்".

"சோ அந்த மண் குடுவை தான் டைம் ட்ராவல் பண்ண ஹெல்ப் பண்ணுன மெஷின். சின்ன பானையில இருந்து வந்ததுனால நம்ம யூத் அகத்தியர் குள்ளமா பப்ளியா இருந்திருக்கார். என்ன கரக்ட்டா..?" இல்லாத சட்டை காலரை உயர்த்தியப்படி பெருமையாய் சொன்னாள் ஆரு.

"போதும் போதும். இப்போ நான் சொல்லுறதை கேளு எங்களோட ஆள் யார் தெரியுமா?" கண்ணில் ஒளியுடன் சொன்ன பப்பி டாக்கை குறும்புடன் பார்த்த ஆராதனா, "எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற. விஷயத்துக்கு வா" என்று கூறி வெத்து போன பட்டசாக மாற்றினாள்.

அவள் சொன்ன தினுசில் உள்ளுக்குள் ஆருவை கடித்து குதறிவிடும் வெறி கிளம்பினாலும் அதை அடக்கிய பப்பி நிமிர்ந்து தன்னை சமன்ப்படுத்தியபடி கர்வமாய் கம்பீர தொனியில் உரைத்தது. "அகத்தியர் ஒரு தமிழன்".

"ஆ..ஆ..ஆ... என்ன சொன்ன.. நீ.. நீ.. நீ.. இப்போ என்ன சொன்ன. அவர் தமிழரா? அம்மாடி.. அப்படின்னா தமிழ் மூத்த மொழி தான். மார் தட்டி சொல்லி கொள்வதில் தவறில்லை தான். ஹே டாக் சூப்பர் சூப்பர். உன் எஜமான் உண்மையிலே பெரிய ஆள் தான்டா. அது சரி அவர் உங்களுக்கு என்ன ஜோலி கொடுத்தார். நீங்க இப்படி சாபம் வாங்குற அளவுக்கு..?".

"அது..அது.. "என்று தயங்கிய தங்க மீனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்திய பின் அடுத்த எபியில் பார்க்கலாம்.
Nice ud
 

vetrimathi

Well-Known Member
Completed upto 31 episode from yesterday night,

as per guessing bargavi Patti is Ravi mum pargavi,

Anga inganu oru atram kaatti oruvayira mudikka poringanu ninacha ingathan new adhiyayam thodankuthu...

Niraya unavukalukku vidukathai supper..
Athuvum ungaludaya ovvoru varnanikum padangal moolam athai unara vaithathu arumai...

Ippa akarhir, vetru giragam summa alluthu...

Enna aduthunu aaval kilapitinga keep rocking...
 

Deiyamma

Well-Known Member
Completed upto 31 episode from yesterday night,

as per guessing bargavi Patti is Ravi mum pargavi,

Anga inganu oru atram kaatti oruvayira mudikka poringanu ninacha ingathan new adhiyayam thodankuthu...

Niraya unavukalukku vidukathai supper..
Athuvum ungaludaya ovvoru varnanikum padangal moolam athai unara vaithathu arumai...

Ippa akarhir, vetru giragam summa alluthu...

Enna aduthunu aaval kilapitinga keep rocking...

Wow.. cho.. cho.. sweet dear...
Lov u ma...
Thanks for ur energetic words... Ummaaaaaaa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top