உறவும் பிரிவும் உன்னாலே 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஓ ஷக்தி அவன் ஆத்தாளைப் போலவா?
அதான் சாம்பவியின் திமிரும் ஆணவமும் அப்படியே இவனிடமும் இருக்கு

கௌஷியை சின்ன வயசுல வேற படாதபாடு படுத்தியிருக்கிறானா?
அப்போ இன்னும் கொஞ்சம் இவனை வைச்சு செய்யணுமே கௌஷி

பரவாயில்லையே
கௌஷிக்கும் கொஞ்சம் கிட்னி வேலை செய்யுது போலிருக்கே
சின்ன வயசுல செஞ்சதைக் கூட விட்டுட்டாள்
கல்யாணமாகி ஆறு வருஷம் பொண்டாட்டியை நினைக்காமல் என்ன வெட்டி முறிச்சேன்னு ஷக்தியை இவள் கேட்க நினைப்பது ரொம்பவே சரிதான்

சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்னு கௌஷி உன்னை எதுக்குடா சக்தி கேட்கணும்?
இத்தனை நாளாய் எந்த கடையிலே பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் தின்னியோ இப்பவும் அதே கடையிலேயே போய் தின்னுடா ஷக்தி

அய்யய்யோ
இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாப்பாட்டுக்குன்னு கௌஷி வீட்டுக்கு ஷக்தி வந்துடுவானா?

கூறுகெட்ட கதிர்வேலன் அப்பா சும்மாவே இருக்க மாட்டார் போலிருக்கே
தாலி மட்டும் கட்டிட்டு ஓடிப் போன மாப்பிள்ளையின் மீது ஓவரா பாசம் பொங்கல் வைக்கிறாரே

ஆறு வருஷம் இல்லை அறுபது வருஷமானாலும் பொண்டாட்டியை விட்டுட்டு ஓடிப் போன ஷக்தி மாப்பிள்ளையை ரெட் கார்ப்பெட்டு விரிச்சு ரிசீவ் பண்ணுவார் போலிருக்கே

ஹா ஹா ஹா
ஊடாலே சாம்பவி வேற போனு செஞ்சு மகனை வாட்ச்ச்சு பண்ணுறாள்

சதி பதியைப் பிரிக்க பொறுமையா சதி பண்ணு சாம்பவி
ஆறு மாசம் டைம் இருக்கே

எவள் எப்படி போனாலும் பரவாயில்லை.
கிரிஜாவுக்கு அவளை ஆபீஸ் கூட்டிட்டு போய் வர கௌஷி வேணும்
என்ன ஒரு சுயநலம்?
அவள் புருஷன் வீட்டுக்கு கௌஷி போயிட்டால் நீ என்ன பண்ணுவே, கிரிஜா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.ஷக்தி கட்டாய கல்யாணம் செய்ததால அம்மா சொல்லவும், கௌசியை உதறிட்டு காதலியை தேடி போனான்:mad::mad:.இவன் குணம் தெரிஞ்சு காதலிச்சவ என்ன ஆனானு தெரியலை,ஆறுவருசம் கழிச்சு கௌசி தான் வேணும்னு பிடிவாதமா இருக்கான்:sneaky::sneaky::sneaky:

தாலி கட்டியதும் விட்டுட்டு போனவன் மேல் கோபமா இருக்கும் கௌசியை சமாதானம் செய்யாம, தான் நெனச்சது நடக்கனும் என ஷக்தி நினைக்க,இந்திரா,கதிர்வேலன் மாப்பிள்ளை பேசியதில் மகிழ்ந்து அவன் சொன்னபடி நடக்க கௌசியின் நிலை தான் பரிதாபமா இருக்கு:confused::confused::confused:.

ஷக்தி சின்ன வயசுலேயே கௌசிய என்ன பாடுபடுத்தி இருக்கான்:sick::sick:.கௌசி எல்லாத்தையும் மறந்துட்டு அவன் பின்னாடியே சுத்தறது போல இப்பவும் செய்யனும்னு எதிர்பார்க்கறான்:devilish::devilish:.

"போய் சேர்ந்துட்டீங்களா":ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.ஆறு வருசம் கழிச்சு வந்துட்டு,நான் உன் புருசன்னு இதை மாத்த முடியாது என அதிகாரத்தோட பேசறவன்ட்ட இப்படி கேட்காம வேற எப்படி கேட்கறாதாம்:p:pசாம்பவி இந்த ஆறு மாசத்துல என்ன பிரச்சனை செய்யுமோo_Oo_Oo_O.ஷக்தியோட காதலை பற்றி தெரிந்தால் கௌசி என்ன செய்வா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top