Link வந்ததும் UD போடுறேன். அநேகமாக 25th epi நாளை போடலாம்
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்றவன் வேறு. அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் தவறுகளை அலசி ஆராயலானான். அதற்கு தடையாக இருந்த கார்த்தி, ஆரு பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வர நிம்மதியாக உணர்ந்தவன் முழுமூச்சாக இறங்கி இருந்தான்.
ஒருவழியாக அவனுக்கு கிடைத்த துருப்புதான் சுபாஷ் சந்திரனின் மருந்துகள் கண்டு பிடிக்கும் மையத்தில் வேலை பார்த்த குமரகுரு என்பவர்.
சுபாஷ் சந்திரன் பல விதமான கேன்சர், வைரசுகளுக்கு மருந்து கண்டு பிடிக்கிறேன் என்று ரீசேர்ச் சென்டர்களை திறந்து வைத்து ஆராய்ச்சு செய்து கொண்டிருப்பதும், தமிழக அரசு மாத்திரமன்றி, மத்திய அரசும் நிதி உதவி வழங்குவது அனைவரும் அறிந்த விடயம்.
அவனின் வைரஸ் ரீஷேர்ஸ் சென்டர்களில் ஒரு பகுதியான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ரீஷேர்ஸ் சென்டரில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தவர்தான் குமரகுரு. நேர்மையான மனிதர். அதுதான் சுபாஷ் சந்திரனுக்கு தூக்கத்தை விரட்ட போதுமானதாக இருந்து கொண்டிருக்கிறது.
புதிய மருந்து வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த போது இன்னொரு வைரஸை உருவாக்கி இருந்தனர் குழுவினர். அது ஆபத்தானது என்று கண்டு பிடித்த குமரகுரு அணித்தலைவரிடம் முறையிட
"இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இயற்கையில் உருமாறும் என்று நமக்கு தெரியாது. இது கண்டிப்பாக ஆராய்ச்சிக்கு மட்டும் தான்.
வெற்றி பெற்றால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை முற்றாக அழிக்கத்தான் இதை பயன்படுத்த போகிறோம்" என்று விட்டார்.
ஆனால் மிஸ்டர் சுபாஷ் அந்த வைரஸை தவறான முறையில் பயன் படுத்த எண்ணினார். அதை மக்களிடையே பரவ செய்து, மக்களை நோயாளியாக்கி பாதிப்படைய செய்து அவரின் மருந்து மாத்திரைகளை விற்கும் வேலையில் இறங்க நினைத்தார். அவர் அணித்தலைவருக்கு பணம் கொடுப்பதையும், அதை பற்றி அறிக்கைகள் அடுக்கி வைக்கப்படும் அறையில் இரகசியமாக பேசியதை நான் தற்செயலாக செவிமடுக்க நேர்ந்த போது அந்த வைரஸை அழிக்க முடியாததால் அதை அபகரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டேன். சுபாஷ் என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கின்றான்"
இதுதான் குமரகுரு கடைசியாக அலைபேசியில் தனது மனைவியை தொடர்பு கொண்ட போது சொன்ன தகவல். கூடவே யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறி இருந்தார். ஆதி சுபாஷை கைது செய்ய போகும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அவன் திரட்டிய தகவல்களையும் கூறிய பின்னே அந்த பெண்மணி ஆதியின் மீது நம்பிக்கை வைத்து தனது கணவனை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். குமரகுரு எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று மூன்று மாதங்களாக எந்த தகவல்களும் இல்லை. எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றே ஆதிக்கு புரியவில்லை. குழம்பி நின்றவனுக்குத்தான் விடிந்த உடன் நற்செய்தியாக மனைவி கருவுற்ற செய்தி கிடைத்தது.
ஜமீனுள் நுழைந்த வேளையில் இருந்து கவியை நடக்கக் கூட விடாமல் ஆளாளுக்கு பட்டிமன்றம் நடாத்த எங்கே கவியை கீழே தங்க வைத்து விடுவார்களோ! அவள் அணைப்பில்லாமல் தூக்கம் கூட வராதே! என்று உள்ளுக்குள் பதறியவன் கவியை மாடிக்கு தூக்கிச் சென்று கொஞ்ச நேரம் தனிமையில் இருக்கலாம் என்று என்ன பாட்டியின் உருவில் தடங்கல் வர சிரித்தவாறே அகன்றான்.
அதன் பின் அவன் வேலைகள் அவனனை இழுத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மனைவியைக் காண வந்தவனுக்கு ஆள் மாற்றி ஆள் கவியை காவல் காப்பத்தைக் கண்டு கடுப்பானான்.
சரி என்று பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தவன் இரவில் மொத்தமாய் மனைவியை கொஞ்சிக்கொள்ளலாம் என்று இருந்து விட சாப்பிட்டு மாடி ஏற போனவனை தடுத்த வரளிநாயகி மூன்று மாதங்களுக்கு கவியை விட்டு விலகி இருக்கும் படி கூறி சீனுவின் அறையில் தாங்கிக்கொள்ளும் படி சொல்ல முழித்தவனை இழுத்து சென்றிருந்தான் சீனு.
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்றவன் வேறு. அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் தவறுகளை அலசி ஆராயலானான். அதற்கு தடையாக இருந்த கார்த்தி, ஆரு பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வர நிம்மதியாக உணர்ந்தவன் முழுமூச்சாக இறங்கி இருந்தான்.
ஒருவழியாக அவனுக்கு கிடைத்த துருப்புதான் சுபாஷ் சந்திரனின் மருந்துகள் கண்டு பிடிக்கும் மையத்தில் வேலை பார்த்த குமரகுரு என்பவர்.
சுபாஷ் சந்திரன் பல விதமான கேன்சர், வைரசுகளுக்கு மருந்து கண்டு பிடிக்கிறேன் என்று ரீசேர்ச் சென்டர்களை திறந்து வைத்து ஆராய்ச்சு செய்து கொண்டிருப்பதும், தமிழக அரசு மாத்திரமன்றி, மத்திய அரசும் நிதி உதவி வழங்குவது அனைவரும் அறிந்த விடயம்.
அவனின் வைரஸ் ரீஷேர்ஸ் சென்டர்களில் ஒரு பகுதியான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ரீஷேர்ஸ் சென்டரில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தவர்தான் குமரகுரு. நேர்மையான மனிதர். அதுதான் சுபாஷ் சந்திரனுக்கு தூக்கத்தை விரட்ட போதுமானதாக இருந்து கொண்டிருக்கிறது.
புதிய மருந்து வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த போது இன்னொரு வைரஸை உருவாக்கி இருந்தனர் குழுவினர். அது ஆபத்தானது என்று கண்டு பிடித்த குமரகுரு அணித்தலைவரிடம் முறையிட
"இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இயற்கையில் உருமாறும் என்று நமக்கு தெரியாது. இது கண்டிப்பாக ஆராய்ச்சிக்கு மட்டும் தான்.
வெற்றி பெற்றால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை முற்றாக அழிக்கத்தான் இதை பயன்படுத்த போகிறோம்" என்று விட்டார்.
ஆனால் மிஸ்டர் சுபாஷ் அந்த வைரஸை தவறான முறையில் பயன் படுத்த எண்ணினார். அதை மக்களிடையே பரவ செய்து, மக்களை நோயாளியாக்கி பாதிப்படைய செய்து அவரின் மருந்து மாத்திரைகளை விற்கும் வேலையில் இறங்க நினைத்தார். அவர் அணித்தலைவருக்கு பணம் கொடுப்பதையும், அதை பற்றி அறிக்கைகள் அடுக்கி வைக்கப்படும் அறையில் இரகசியமாக பேசியதை நான் தற்செயலாக செவிமடுக்க நேர்ந்த போது அந்த வைரஸை அழிக்க முடியாததால் அதை அபகரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டேன். சுபாஷ் என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கின்றான்"
இதுதான் குமரகுரு கடைசியாக அலைபேசியில் தனது மனைவியை தொடர்பு கொண்ட போது சொன்ன தகவல். கூடவே யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறி இருந்தார். ஆதி சுபாஷை கைது செய்ய போகும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அவன் திரட்டிய தகவல்களையும் கூறிய பின்னே அந்த பெண்மணி ஆதியின் மீது நம்பிக்கை வைத்து தனது கணவனை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். குமரகுரு எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று மூன்று மாதங்களாக எந்த தகவல்களும் இல்லை. எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றே ஆதிக்கு புரியவில்லை. குழம்பி நின்றவனுக்குத்தான் விடிந்த உடன் நற்செய்தியாக மனைவி கருவுற்ற செய்தி கிடைத்தது.
ஜமீனுள் நுழைந்த வேளையில் இருந்து கவியை நடக்கக் கூட விடாமல் ஆளாளுக்கு பட்டிமன்றம் நடாத்த எங்கே கவியை கீழே தங்க வைத்து விடுவார்களோ! அவள் அணைப்பில்லாமல் தூக்கம் கூட வராதே! என்று உள்ளுக்குள் பதறியவன் கவியை மாடிக்கு தூக்கிச் சென்று கொஞ்ச நேரம் தனிமையில் இருக்கலாம் என்று என்ன பாட்டியின் உருவில் தடங்கல் வர சிரித்தவாறே அகன்றான்.
அதன் பின் அவன் வேலைகள் அவனனை இழுத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மனைவியைக் காண வந்தவனுக்கு ஆள் மாற்றி ஆள் கவியை காவல் காப்பத்தைக் கண்டு கடுப்பானான்.
சரி என்று பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தவன் இரவில் மொத்தமாய் மனைவியை கொஞ்சிக்கொள்ளலாம் என்று இருந்து விட சாப்பிட்டு மாடி ஏற போனவனை தடுத்த வரளிநாயகி மூன்று மாதங்களுக்கு கவியை விட்டு விலகி இருக்கும் படி கூறி சீனுவின் அறையில் தாங்கிக்கொள்ளும் படி சொல்ல முழித்தவனை இழுத்து சென்றிருந்தான் சீனு.