உறவால் உயிரானவள் P17

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நாளை UD போடா try பண்ணுறேன் செல்லங்களா...:love::love:

download (5).jpg

ரயிலில் வந்ததும் முதல் வகுப்பில் சித்தார்த்தும் பித்துத்தும் ஒரு பக்கமாகவும் வானதியும், ராணியும் மறு பக்கமாகவும் அமர்ந்துக் கொண்டனர்.



சித்தார்த்தும், பித்யுத்தும் ஒரு மாத விடுப்பில் வந்திருக்க கல்யாண சடங்குகள் அனைத்தும் முடிந்த உடனே! வானதி ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்ல கேள்வியாக அவளை ஏறிட்ட பித்யுத்துக்கு அவள் ஒழுங்கான பதிலை கொடுக்கவில்லை.



ராணியும், சித்தார்த்தும் மறு பேச்சின்றி கிளம்ப, ரயில் கிளம்பிய பின்னாவது வானதி சொல்வாளா என்று எதிர்பார்த்தான் பித்யுத். ஆனால் அவள் மௌனமாகவே வர



"வானதி இந்த சம்பந்தம் நீ பார்த்து முடிச்சது. ஏதாவது பிரச்சினை இருந்தால் கண்டிப்பா நீ இதற்க்கு சம்மதிக்க மாட்டாய். கவியும், கார்த்திக்கும் ஒன்னு சேரனும் னு எங்க ஆச ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஆசைப்படலையேன்னு தான் அரேஞ் மேரேஜுக்கு சம்மதிச்சோம். என்ன பிரச்சினைனாலும் சொல்லு" சித்தார்த் தன்மையாக கேட்க



தன் முகபாவனையே எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுமோ என்றஞ்சியவாறே! உண்மையை சொல்லலாமா? வேண்டாமா என்ற யோசனையில் வானதி விழ



"ராணி நீயாவது சொல்லு. என்ன நடந்தது? சம்மந்தி வீட்டுல ஏதாவது தப்பா பேசிட்டாங்களா?" பித்யுத் ராணியை ஏறிட வானதியின் அனுமதியின்றி வாய் திறக்க மறுத்தாள் ராணி.



"இப்போ ரெண்டு பேரும் பேசலைனா... நான் மிஸ்டர் கர்ண விஜயேந்திரன் கிட்டயே கேட்டுக்கிறேன்" பித்யுத் கோபமாக அலைபேசியை கையில் எடுக்க,



அவன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கிய வானதி "இப்போ என்ன உண்மை தெரிஞ்சாகணும் உங்களுக்கு? சின்னன்ச் சிறுசுங்க தனியா இருக்க ஆசப் பாடுவாங்க, நீங்க ரெண்டு பேரும் கிளம்பி காஸ்மீர் போயிடுவீங்க அப்பொறம் நானும் ராணியும் தான் தனியா இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்ப முன் ஒரு எட்டு மதுரைக்கு போய் அப்பா கூட ரெண்டு நாள் தங்கலாம் னு பார்த்தா ஆளாளுக்கு கேள்வி கேக்குறீங்களே! சரியான ரோதனயா போச்சு" முகத்தை சுருக்க,



"இவ்வளவு தானா... இத சொல்ல எதுக்கு இம்புட்டு யோசிக்கிற, உனக்கு உன் அப்பாவை கொஞ்சமும், நான் என் பொண்ண கொஞ்ச கூடாதென்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு இருந்தியாக்கும்" பித்யுத் கொஞ்சும் மொழியில் பேச



"அடங்க மாட்டீங்களா?" கண்ணாளையே! அச்சுறுத்தல் விடுத்தாள் வானதி.

Screenshot_20190517-170958_Instagram.jpg

"இவன் காதல் ஏவுகனையெல்லாம் வீசுறான் ராணி நமக்கு சேதாரம் வந்துடும் வாம்மா நாம அந்த பக்கம் போலாம்" சித்தார்த் கிண்டல் செய்தவாறே வெளியே செல்ல



"இருடா மச்சான் நானும் வாறன் இந்த பூதனி கிட்ட என்ன கோர்த்து விட்டுடாத" என்றவாறே பித்யுத்தும் கிளம்ப



"என்ன பூதனி னு ரெண்டு பேரும் தம்மடிக்கவா போறீங்க, போயிட்டு வாங்க வச்சிக்கிறேன்" வானதி மிரட்ட



"வந்தவனை வச்சிக்காம ஊருக்கு கிளப்பிட்ட நீயெல்லாம் வாய் சவுண்ட் மட்டும் தான்" அதற்கும் பதில் சொல்லியவாறே பித்யுத் சித்தார்த்துடன் சென்று விட






"அக்கா நல்லவேளை சொல்லல... எங்க நீங்க சொல்லிடுவீங்களோ னு பயந்துட்டேன்" ராணி சொல்ல அவளின் வாயை பொத்தியிருந்தாள் வானதி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top