அவளே என் தோழனின் வசந்தம்-7-ஆ

Advertisement

surthi

Well-Known Member
உளவாளி மட்டும் பெற வேண்டிய தண்டனையை மற்றவரும் ஏன் பெற வேண்டும் அதோடு அந்த உளவாளிகளுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான நேரம் என்று யோசித்த ஆன்மா அதில் ரிஷிக்கு துரோகம் செய்பவரை தவிர்த்து மற்ற எட்டு காவலாளிகளின் பெயரை அந்த ஐந்தறிவு ஜீவன்களிடம் கூறி அவர்களின் கவனத்தை மட்டும் திசை திருப்ப கூறியது ஆன்மா. அந்த நன்றியுள்ள வாயில்லா பிராணிகளும் ஆன்மாவின் சொல்லை கட்டளையாக ஏற்று ஆன்மா கூறியது போல செய்தது

மற்ற காவலாளிகளை அங்கிருந்து அப்புறபடுத்தியவுடன் மீதமிருந்த உளவாலிகளை இல்லை இல்லை காவலாளிகள் இருவரை தனித்தனியாக. பயமுறச்செய்து அவர்களை மயங்க வைத்துவிட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டு தன் கட்டுப்பாட்டில் இருந்த இருவருக்கும் ரிஷியை அனுவில் அறையில் விடசொல்லி கட்டளை இட்டது ஆன்மா

அவ்விருவரும் ஆன்மாவின் சொல்ல படி ரிஷியை அனுவின் அறையில் விட்டபின் அவர்கள் நேராக தங்கள் வீட்டிற்கு நடந்தே சென்று விட்டனர் இவர்கள் இருவரையும் இவ்வாறு சிரமபடுத்துவது ஆன்மாவிற்கு வருத்தமாக இருந்தாலும் ரிஷியை காப்பதற்காக தானே என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டது

அனுவின் அறையில் ரிஷி நல்ல போதையில் இருக்க அனு தான் உட்கொள்ளும் மருந்துகளால் நல்ல தூக்கத்தில் இருக்க தூக்கத்தில் இருந்த அனு தன் கையை ரிஷியின் மேல் போட ரிஷியும் போதையில் இருந்ததாலோ இல்லை கடவுளின் செயலா இல்லை ஆன்மாவின் செயலா இல்லை விதியின் விளையாட்டா எதுவோ ஒன்று ரிஷிக்கு தன்பக்கத்தில் இருந்த அனு தன் காதலின் முகம் கொண்டு தெரிய அதன் பிறகு நடந்தது அவ்விருவரின் வாழ்வையே மாற்றி அமைத்தது

ஆம் அங்கு அவன் சுய உணர்வின்றி போதையின் தாக்கத்தில் அவன் அவளை நெருங்கியதே அவன் தவறா இல்லை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போதும் தன்னை யாரோ நெருங்குவதை உணர்ந்து கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்து அது ரிஷி தானே என்று அவள் அவன் ஆளுகைக்கு அதுவும் சிறு குழந்தையின் மனநிலையில் இருக்கும் அவள் தன் செல்ல ஷிவ்(ரிஷி) தனக்கு தீங்கு செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் இணங்கியது தான் அவள் தவறா



மறுநாள் காலை விடிந்தது நிறைய பேரின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றிய சந்தோஷத்துடன் உதித்தது சூரியன்

முதலில் விழித்தது அனு தான் விழித்தவளுக்கு வயிறு சத்தமிட ஆரம்பித்தது இரவில் நடந்த எதுவும் அவளை பாதிக்காதது போல இருந்தது அவளின் நடவடிக்கை

இரவு ரிஷி வராத கோபத்தில் இருந்த அனு அம்முவின் கெஞ்சலால் பாலை மட்டும் குடித்து விட்டு மருந்தை நீரில் போட்டு கொண்டு படுத்ததால் அவளுக்கு இப்போது மிகவும் பசித்தது சுற்றி முற்றி பார்த்தாள் அனு படுக்கைக்கு இடது புறம் சில ஆப்பிள் பழங்கள் இருந்தன அதை எடுக்க போர்வையை விலக்கிய போது தான் தன் உடைகள் கலைந்து இருப்பதை உணர்ந்த அனு தன் பக்கத்தில் இருந்த ரிஷியின் சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள் அந்த சட்டை அவளுக்கு மிகவும் தொள தொள வென்றும் முட்டி வரையும் இருந்தது பின் அவள் இருப்பதோ 5 அடி தான் ஆனால் ரிஷியோ 6.30 அடி உயரம் அதோடு அனு மிகவும் ஓல்லியாக இருப்பாள் ஆனால் ரிஷியோ உடற்பயிற்சி செய்து உடலை கட்டு கோப்பாக வைத்திருப்பவன் அப்போது வேறு எப்படி இருக்கும் அனுவிற்கு அது வேடிக்கையாக இருந்ததோடு. பிடித்தும் இருந்தது அச்சட்டையை அணிந்த உடன் ரிஷி தன்னுடன் இருக்கும் போது தன் மனதில் வரும் பாதுகாப்பு உணர்வு இப்போதும் இருப்பதை உணர்ந்தாள்

பின் வயிறு நான் இருக்கிறேன் என்று சத்தமிடவும்

அவள் பழகூடையை நோக்கி சென்று அதை எடுத்து கொண்டு திரும்பவும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்

அப்போது தான் கவனித்தாள் முழு பழத்தை எப்படி உண்பது என்று அவளுக்கு தெரியவில்லை அவளுக்கு பசியில் அழுகை வந்துவிட்டது

அதனால். வேறு வழியில்லாமல் ரிஷியை எழுப்ப அழுது கொண்டே அவனை உலுக்கினாள்

ஷிவ் … ஷிவ் ..ஷிவ்

அனுவின் குரலில் லேசாக கண் திறந்து பார்த்த ரிஷி அனு அழுது கொண்டிருப்பதை கண்டு தூக்கம் போதை எல்லாம் பறக்க எழுந்தவன். அப்போது தான் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தையும் கவனித்தான் பின் அந்த அறையையும் சுற்றி பார்த்தவன் தன் உடைகளும் அனுவின் உடைகளும் சிதறி இருப்பதையும் அனு தன் சட்டையை அணிந்து இருப்பதையும். அவளின் தலை கலைந்து இருப்பதையும் கண்டு அவனுக்கு. அந்த நிமிடமே தான் மறித்து விடமாட்டோமா என்று தான் தோன்றியது.

இன்னும் இவன் குற்ற உணர்ச்சியை கூட்ட வேண்டும் என்பதற்காக நடந்ததோ இல்லை எதேச்சையாக நடந்ததோ

ஷிவ் ….. ஷிவ். என்று அனு அவனை மறுபடியும் உலுக்கி. பசிக்கிது என்றாள் அவள் கண்களை பார்த்தவன் அதில் இருந்த நம்பிக்கையில் பிரம்மித்து போனான்

பின் அவளை இழுத்துக் அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவன் அணைப்பில் அடங்கியவள் அவன் அணைப்பில் இருந்தவாறே அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து மீண்டும் பசிக்கிறது என்று கூறி. ஆப்பிள் கூடையை அவன் மடியில் வைத்தாள் அவளின் குழந்தை தனத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அனுவை கவனிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து தன் யோசனையையும் குற்ற உணர்ச்சியையும் தள்ளி வைத்தவன் போர்வையை கொண்டே உடைகள் கலைந்து இருந்த தன்னை சரி செய்து கொண்டு அனுவிடம் சென்று அவளை தூக்கினான் அவன் தன்னை தூக்கிய உடன் அவன் கழுத்தில் கையை போட்டு கொண்டு மகிழ்ச்சியோடு அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரிஷி அவளை ரெஸ்ட் ரூமில் விட்டு காலை கடன்களை முடிக்க கூறி விட்டு மீண்டும் அறையினுள் நுழைந்து அறையை வேகமாக சுத்தம் செய்து விட்டு. குளித்த பின் அணிந்து கொள்ள மாற்றுடை தனக்கும் அனுவுக்கும் எடுத்து கொண்டு. குளியலறை நோக்கி சென்றான் அங்கு அனு அழகாக பாத்டப்பில் இருந்த தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தாள் அதை பார்த்து அவளிடம் விரைந்தவன் அவளை குளிக்க வைத்து துணி மாற்ற வைத்து அவளை அறைக்கு அழைத்து வந்தான்

பின் இண்டர்காம் மூலமாக அனுவிற்கு உணவு தயார் செய்து வைக்க உத்திரவு இட்டு விட்டு அனுவை. அமைதியாக இருக்க வைக்க டி.வி.யில் கார்டாடூன் போட்டு அனுவை அதை தான் பார்க்க கூறினான் பின் அவனும் சில நிமிடத்தில் தன் காலை கடன்களை முடித்துவிட்டும் குளித்து. தயாராகியும் வந்தான்

எல்லாம் முடித்து ரிஷி அனுவை அழைத்து கொண்டு கீழே வரவும் அம்மு பூஜையை முடித்து கொண்டு பூஜை அறையில் இருந்து பிரசாதத்துடன் வந்தார்

மாடியில் இருந்து ரிஷியின் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்த அனு எதேச்சையாக திரும்ப அங்கு அம்மு பிரசாத்துடன் வருவதை பார்த்தவுடன் அதாவது பிரசாரதமாக இனிப்புகளை கண்டவுடன் அனுவிற்கு அதுவரை ரிஷியின் அருகாமையில் மறந்திருந்த பசி ஞாயபகத்திற்கு வந்தது உடனே அதுவரை படியில் மெதுவாக ரிஷியுடன் இறங்கி அவனின் கைகளை பிடித்துக் கொண்டும் தோளில் தொங்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தவள். துள்ளி குதித்து அம்முவை நோக்கி சென்றவள் அம்முவின் முன் நின்று கையை நீட்டினாள்

முதலில் தீடிரென்று தன் முன் துள்ளி குதித்து வந்து நின்ற அனுவின் செயலில் திகைத்து நின்றவர் பின் அனு வந்து நின்ற வேகத்தில் கையை நீட்டவும் புரியாது. விழித்தார்

அம்மு புரியாமல் இருப்பதை உணராமல் இருந்த அனு அம்மு அமைதியாக இருந்ததால். சிறு பிள்ளைகள் தான் கேட்டது கிடைக்கவில்லை என்றால் வரும் கோபத்தில் ஒன்று தான் கேட்டதை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயற்சிக்கும் அல்லது. தர மாட்டேன் என்பவர் கையில் இருந்து பிடுங்கும் இதில் அனு இரண்டாவதை செய்தாள் அம்முவின் கையில் இருந்த இனிப்பு பாத்திரத்தை அவர் தான் கேட்டும் தரவில்லை என்ற கோபத்தில் அவரிடம் இருந்து பிடுங்க முயற்சித்தாள்

அனு பிரசாதத்தை பிடுங்க முயற்சிக்கும் போதுதான் அவள் இனிப்புகளை கேட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த அம்மு. அதை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவளிடம் கொடுத்துவிட்டார்

அனு அந்த இனிப்புகளை கைப்பற்றிய குஷியில் அதைபற்றி சொல்ல ரிஷியிடம் திரும்பி

ஷிவ்.... ஷிவ் ....ஷிவ்................................................என்று அழைத்தாள்

அவள் அவ்வளவு தடவை அழைத்தும் ரிஷி அதற்கு எதிர்வினை கொடுக்காததால் வந்த கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அழ ஆரம்பித்தாள்

அனுவின் அழுகை சத்தத்தில் ரிஷி மீண்டும் உணர்வுக்கு வந்தான் அதுவரை ரிஷியையே கவனித்துக் கொண்டிருந்த அம்மு அனு அழ ஆரம்பித்தவுடன். அவளிடம்சென்றுஅவளைசமாதானபடுத்தமுயன்றார்

ரிஷி தன் அருகில் வரவும் அவனிடம் முகம் திருப்பி கொண்டாள் அனு

என்ன அனும்மா எதுக்கு இப்போ இந்த அழுகை-ரிஷி

ரிஷி கேட்டதும் அனுவின் அழுகை அதிகரித்தது

அப்போது தான் அனு கைகளில் இருந்த இனிப்புகளை பார்த்தான் உடனே தான் அவனுக்கு அனுவின் பசி ஞாயபகத்திற்கு வர தலையில் அடித்து கொண்டான்

அவன் தலையில் அடித்து கொள்ளவும் அனு தன் அழுகையை நிறுத்தி விட்டு அவன் அடித்து கொண்ட இடத்தில் அழுத்தமாக தேய்த்து விட்டாள் பின்

ஷிவ் தலையில் அடிச்சுக்காத வலிக்கும் சரியா-அனு

இதை கேட்ட உடன் ரிஷிக்கு இரவு தான் சுய நினைவு இல்லாமல் எவ்வளவு வலிக்க செய்தோமோ என்றிருந்தது

அப்போது அவனை யாரோ உலுக்குவது போல் இருந்தது அது வேறு யாருமில்லை பா க்ரிஷ் தான்

அண்ணா ராத்திரி 12 மணிக்கு மேல் ஆயிடுச்சு எனக்கும் ரொம்ப கலைப்பா இருக்கு அதோட நீங்களும் ரொம்ப சோர்ந்து தெரியரீங்க அதனால இந்த ஹோட்டல்ல தங்கிட்டு நாளைக்கு இங்கிருந்து கிளம்பலாமான அண்ணா-க்ரிஷ்

சரி- ரிஷி







வசந்தம் பூக்கும்..............................................................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top