அவளே என் தோழனின் வசந்தம்-2

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-2-அ


அனுவின் செய்கையை பார்ப்பவர்கள் ஆச்சரியபடாவிட்டால் தான் அதிசயம் ஏனெனில் அந்த கொடுமையான கோர சம்பவத்தின் பின் அனுவின் நடவடிக்கையே முற்றிலும் மாறியிருந்தது அவளுக்கு யாரையும் தெரியவுமில்லை தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை சொல்ல போனால் ரிஷியை தவிர யாராலும் அவளை நெருங்க கூட முடியவில்லை

ரிஷியிடம் கூட முதலில் எல்லாம் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் கூறுவாள் அப்படி பட்டவள் இன்று இவ்வாறு நடந்து கொண்டால் அனைவருக்கும் ஆச்சரியத்தை மட்டுமில்லை சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்த அதே நேரத்தில் ரிஷியிடம் சில காலமாக உண்டான அதித மாற்றம் நடுக்கத்தையும் பயத்தையும் ஓரு சேர கொடுத்தது என்றால் மிகையாகாது.

ஆனால் இதை எல்லாம் பற்றி கவலை கொள்ள வேண்டியவளோ அதை பற்றிய சிந்தனையோ பயமோ துளியுமின்றி ரிஷியிடம் உத்தரவுயிட்டு விட்டு நேரா அங்கிருந்த சோபாவிற்கு சென்று தன் முக்கியமான வேலையை தொடர ஆரம்பித்து விட்டாள் ( அதான் பா தூங்கறது நமக்கு சாப்பாடும் தூக்கமும் தான் முக்கியம் :p)

அனுவின் இச்செயலை கண்டு ஓருவனுக்கு கொலைவெறி கிளம்பியது (அது ரிஷி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு) அவளை கண்டு கோபம் கொண்டது ரிஷி அல்ல ராம்சரண் (இனி ராம்) [இப்போ இவன் ஏன் மூக்க நுழைக்கிறான் நீங்க யோசிக்கறது புரியுது வேற ஓன்னும் இல்லை அது தன்னோட காலை தூக்கத்தை கெடுத்துட்டு அவ அழகா படுத்து தூங்கினா யாருக்கு தான் கோபம் வராது அதிலையும் இந்த ராம் எத வேண்டுமானாலும் விட்டு கொடுப்பான் அவனோட தூக்கத்தையும் சாப்பாட்டையும் விட்டே தரமாட்டான்

சுருங்க சொன்னால் இவனும் அனுவும் அடித்து கொள்வதே இவ்விரு விஷயத்திற்காக தான் இருக்கும்.] ராம் கோபத்துடன் அங்கிருந்த சோபாவில் சுகமாக எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த அனுவை நெருங்கினான்

ஆனால் இவ்வளவு நேரம் தன் சுய உணர்வில் இல்லாமல் அனுவின் மாற்றத்தில் சந்தோஷம் அடைந்திருந்த ரிஷியின் கோபம் சூரியனை கண்ட பனி துளியாக விலக ராம் கோபத்துடன் அனுவை நெருங்குவதை கண்டவன் ராமை தடுத்தான் பின் ரிஷியே அனுவின் அருகில் அவள் தலையை கைகள் நடுங்க கோதினான்

அதோடு அவள் நெற்றியில் மென்மையாக இதழோற்றி அவளை தன் கைகளில் சிறு பிள்ளை போல ஏந்தி கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான் ரிஷி அனுவை தூக்கிச் செல்வதை அங்கு இருந்த சிலர் கண்களில் பழிவெறி மின்ன பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனுவை ரிஷி மாடிக்கு தூக்கிச் சென்ற பிறகு ராம் மணியை பார்க்க அதுவோ ராமின் மனநிலை தெரியாமல் நேரம் காலை 7.10 என காண்பித்து தன் வேலையை சரியாக செய்தது

அதை கண்டு அதிர்ந்த ராமோ தூக்கம் பறி போன வருத்தத்தை விட இன்றைய மீட்டிங் பற்றி நியாபகம் வர அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் சரி பார்க்க வேண்டும் என்பதும் அம்மீட்டிங் பற்றி ரிஷிக்கு நினைவு படுத்தவில்லை எனில் அவனின் இன்னொரு ருத்ர தாண்டவத்தை காண வேண்டியிருக்கும் என்பதும் ராமுக்கு பயத்தை ஏற்படுத்த வேலையாட்களை அழைத்து அந்த ஹாலை சுத்தம் செய்யுமாறு கூறி விட்டு தன் அறைக்து செல்ல திரும்புவதற்க்கும் அம்மு [காயத்ரி] ஹாலின் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

கடவுளிடம் மனுக்களை போட்டு விட்டு அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தார் அவர் வீட்டின் உள்ளே நுழையும் போது அந்த ஹாலில் பொருட்கள் உடைந்து சிதறிக் கிடப்பதும் வீட்டில் உள்ளவர்கள் அங்கு கூடியிருந்ததும் அவ்விடத்தில் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்தார் அதை உணர்ந்தவுடன் அவரை அறியாமலே என்ன நடந்ததோ என்ற பதட்டம் அவரிடம் வந்து ஓட்டிக் கொண்டது.

அம்முவின் பதேட்டத்தை நொடியில் உணர்ந்த ராம் அவரை அமரவைத்து அவருக்கு அருந்த நீர் கொடுத்து அவரிடம் பக்குவமாக அங்கே நடந்ததை எடுத்துரைத்தான்.

ராம் கூறிய உடன் தான் ஹாலில் புதிதாக மாட்டப்பட்டிருந்த படத்தை கவனித்தார் அதை கண்டவுடன் அப்பெண்ணின் முகம் அவருக்கு மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது பின் அப்படம் எவ்வாறு அங்கு வந்தது? அப்படத்தில் இருக்கும் பெண் யார் ? இப்படத்தைக் கண்டு ரிஷிக்கு ஏன் கோபம் வந்தது ? என ராமிடம் கேட்டார் ராமும் தனக்கு ஓன்றும் தெரியாது என்றும் தானும் அதை பற்றி தான் யோசிப்பதாகவும் கூறினான்.

பின் ராம் அம்முவிடம் அம்மு இன்னைக்கு ஆஃபிஸ்ல் பத்து மணிக்கு ஓரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கான ஏற்ப்பாடு சரியா இருக்கா பாக்க வேண்டும் அதனால நான் போய் சீக்கரமா கிளம்பறேன் என அம்முவிடம் கூறி சென்றான்.



(அவர்களுக்கு எங்கு தெரியப் போகிறது அப்பெண்ணை பற்றிய முழு உண்மை ரிஷிக்கே தெரியாதென்பதும் எல்லா விஷயங்களும் ஓரே ஓருத்திக்கு
தான் தெரியும் என்பதும் ஆனால் அ்வ்வோருத்தியும் யார் கண்களுக்கும் புலபட மாட்டாள் அப்படி அவள் புலப்பட்டு விட்டாள் இத்தனை காலமாக மண்ணோடு மண்ணாக புதைந்து போன பல ரகசியங்கள் வெளி வரும் அப்படி வெளி படும் ரகசியம் அக்குடும்பத்தையே திசை தெரியாமல் இழுத்து செல்வதோடு அவர்கள் அனைவரையும் உரு தெரியாமல் அழிக்கும் வல்லமை கொண்டது என்பதை யார் அவ்விருவரிடம் சொல்வது)





வசந்தம் பூக்கும்.........................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top