அழைத்தது யாரோ! intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ புதுக்கதையோட வந்த்துட்டேன். புதுக்கதையை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி ரொம்ப நாளா உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் share பண்ணனும்னு இருந்தேன்.

என்னோட உயிரே! உன் உயிரான நான் இருப்பேன் மற்றும் உன் கண்ணில் என் விம்பம் என்ற இரண்டு கதைகளும் புத்தகமா வெளிவந்திருக்கு. மல்லி mam and அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் ரொம்ப நன்றிகள்.

Screenshot_20201206-185750_Instagram.jpgScreenshot_20201206-185723_Instagram.jpg

எனக்கு publishing பத்தி சுத்தமா தெரியாது சோ யார் யாரெல்லாம் இதற்கு பின்னால இருக்காங்களோ! அவங்க எல்லாருக்கும் நன்றி.

corona பிரச்சினையினால் books கைல கிடைக்கல கிடைச்ச பிறகு சொல்லலாம்னு இருந்தேன். corona எப்போ முடியுமோ!

இதெல்லாம் சாத்தியமானது வாசக நண்பர்களான உங்களால்தான் நீங்கள் தரும் ஆதரவுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்.


Screenshot_20200225-205847_Instagram.jpg

நம்ம ஹீரோ க்ரிஷ்ணாவேல் ராஜாவுக்கு அறிமுகம் அவசியமில்லை.


நம்ம நாயகி யாரு? அவங்க வாழ்க்கைல என்ன பிரச்சினை? அவங்க பிரச்சினைகளை கிருஷ்ணா தீர்த்து வைப்பானா? இல்ல மேலும் குழப்பங்களை ஏற்படுத்துவானா? பார்க்கலாம் வாங்க.

download (3).jpg


"என்னமா இவ... இன்னமும் தூங்குறா? காலேஜ் முடிச்சாலும் முடிச்சா காலைல லேட்டா எந்திரிக்கிறா? குடும்பத்துக்கு இது நல்லதில்லை. போங்க போய் உங்க பேத்தியை எழுப்புங்க" குளித்து முடித்து தலையில் துண்டை கட்டிக்கொண்டு பூஜையறைக்குள் நுளைந்தவாறே! அபரஞ்சிதா அன்னையை அதட்ட



"ஆமா இங்க வாய் சவுடாலு எல்லாம் என் கிட்டாதான். எங்க அவ கிட்ட போய் பேசி பாரேன். உன்ன கிழிகிழினு கிழிப்பா" முணுமுணுத்த அம்மாச்சி வடிவுக்கரசி "என் பேத்தியை பேசுற ஏன் உன் செல்ல பையன் கூட இன்னமும் கும்பகர்ணன் மாதிரி தூங்கிக் கிட்டுதானே! இருக்கான். அவனை மட்டும் ஒன்னும் சொல்லாத" கழுத்தை நொடித்தவர் தீபாராதனையை மகளிடம் கொடுத்து விட்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தார்.



அவள் இந்த உலகத்தில் வெறுக்கும் ஒரே! நபர் அவளை பெற்ற அன்னை அபரஞ்சிதா என்றால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மையும் கூட.



"என்ன பண்ணிக்கிட்டு இருக்க அபி..." கணவனின் குரல் காதில் தேனாக பாய



"இப்போதாங்க குளிச்சிட்டு பூஜையை முடிச்சேன். அம்மா இட்லி வேக வைக்கிறாங்க... சாம்பாரு தாளிக்கணும், சட்டினி அரைக்கணும், பசங்க தூங்குறாங்க" புதுசாக திருமணமாக பெண் கணவனிடம் ஒப்பிப்பது போல் அபரஞ்சிதா ஒப்பித்துக்கொண்டிருக்க, கண்ணபிரான் புன்னகை முகமாகமாகவே! கேட்டுக்கொண்டிருந்தார்.



"அப்பா... எங்க இருக்கீங்க?"



அலைபேசியை காதில் வைத்தவாறே "மொட்டை மாடில இருக்கேன் மா..." என்று கண்ணபிரான் சொல்ல



"யாருங்க ராதையா? எப்படி இருக்கா அவ நல்லா இருக்காளா? கல்யாணத்துக்கு மாப்புள பாக்குறீங்களா?" தன் கணவனிடமே! அவருக்கு பிறந்த மகளை பற்றி அபரஞ்சிதா விசாரிக்க, அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் தவித்த கண்ணபிரான்



"நான் கால் பண்ணது உனக்கு பிறந்த பொண்ணோட கல்யாண விஷயம் பேச அபி.. அவளுக்கு மாப்பிள பாத்திருக்கேன்" என்று புருவம் சுருக்கிய கண்ணபிரான் மேற்கொண்டு எதுவும் தகவல் சொல்ல முனையவில்லை.



"என்னங்க பேசுறீங்க? ராதை இருக்குற போ... கோதைக்கு எப்படீங்க கல்யாணம் பண்ணுறது?" என்னமோ தான் பெத்த பெண்ணுக்கு திருமணம் செய்வது போல் அபரஞ்சிதா பதற



இந்த கதையில் இருக்கும் இன்னொரு ஹீரோ நம்ம க்ரிஷ்ணாவோட அண்ணன் அருள்வேல் ராஜா. நாயகி அன்பழகி.

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் ஜோடியெல்லாம் கதையின் போக்கில் முடிஞ்சா சந்திக்கலாம்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அழைத்தது
யாரோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Intro,
பஸ்மிலா டியர்

ஆமாம் அதென்ன "அபரஞ்சித்தை"?
ஒண்ணு அபரஞ்சிதம் வரணும்
இல்லை அபரஞ்சிதா வரணும்
அபியிடம் கணவர் பேசும் முன்னாடி பாராவில் வரும் அபியை வெறுக்கும் நபர் யாரு?
ராதை இங்கே வீட்டிலில்லையா? எங்கேயிருக்கிறாள்?
பெற்ற பெண் ராதையைவா யாரோ மாதிரி அபி பேசுறாள்?
கோதை யாரு?
ராதைக்குத்தானே கண்ணபிரான் மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொன்னார்
ஆனால் பொண்டாட்டி கோதையை ஏன் இழுக்கிறாள்?
கொஞ்சம் குழம்பு ஆகுதே
சீக்கிரமா ரசம் கொண்டு வாங்க, மிலா டியர்
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
டியர்.....கிருஷ்ணவேல் ராஜா யாரு அருள்வேல் யாரு....எந்த கதைல வந்திருக்காங்க...எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி நீங்க சொல்லிடுங்களேன்
 

Saroja

Well-Known Member
மகளுக்கு கல்யாணம்
இது என்ன வேற யாரோ
போல பேச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top