அத்தியாயம் 14 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-14

சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க
அந்த வேலை விஷயமாக 10
நாட்களுக்குச் சென்னை கிளம்பிச்
செல்ல வேண்டி இருந்தது அவன்.

"மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட்
விஷயமா நான் சென்னை
கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10
டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும் நீங்க
அந்த மால் ப்ராஜெக்ட்-ட கொஞ்சம்
பாத்துக்கங்க" என்று கார்த்திக்
சொல்ல அவர் பதில் பேசாமல்
இருப்பதை உணர்ந்தவன் அவரை
நிமிர்ந்து பார்த்தான்.

ஏதோ பதட்டமாக இருந்தவரைப்
பார்த்தவனுக்கு ஒன்றும்
புரியவில்லை.. அவர் ஏதோ சொல்ல
நினைக்கிறார் என்பதைப் புரிந்து
கொண்டவன் "என்ன அங்கிள் என்ன
ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க"
என்று வினவ அவர் சொன்னதைக்
கேட்டு கார்த்திக் சிரித்தான்.

"இங்க பாருங்க அங்கிள்.. நம்ம ஃபீல்ட்
ல இதெல்லாம் இருக்கிறது தான்..
இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா..
நம்ம கரெக்டா அமவுன்ட் போட்டோம்..
நமக்கு கிடைத்து விட்டது.. இதெல்லாம்
நினைச்சு கலங்காதீங்க அங்கிள்..
ப்ரீயா விடுங்க" என்று சொன்னவன்
மாலை மது வரக் காத்திருந்தான்.

வழக்கம் போல மதுவை அழைத்துக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தவன்,
இரவு உணவை முடித்துக் கொண்டு
அனைவரும் உட்கார்ந்து பேசும் சமயம்
தனக்குக் கிடைத்த ப்ராஜெக்ட் பற்றிக்
கூறினான். பத்து நாட்கள்
சென்னையில் தங்க வேண்டும்
என்றுக் கூறினான். அனைவருக்கும்
சந்தோஷம் தாங்கவில்லை.

"ஏன் கார்த்திக் மாலை வந்தவுடனே
சொல்லி இருக்கலாம் இல்லை?"
என்று குறையாகக் கேட்டார் ஜானகி.

"இல்லை அம்மா... உங்க மூன்று
பேருக்கும் ஒன்றாக சொல்லி
விடலாம் என்று இருந்தேன்" என்று
மூன்று பேரையும் பார்த்துச்
சொன்னான்.

"அப்போ மதுவிற்கும்
சொல்லவில்லையா நீ" என்று
வியப்பாகப் பார்க்க 'இல்லை' என்று
தலை ஆட்டினான். மதுவும்
மாமியாரின் பார்வையைக் கண்டு
அவரிடம் உதட்டைப் பிதுக்கினாள்.

மகனின் மூளையை மனதிற்குள்
மெச்சிய வேலுமணி "என் மகன்
கெட்டிக்காரன் ஜானகி" என்று கூறி வேலுமணி சிரிக்க "ஆமாம் பெரிய
ப்ராஜெக்ட் இல்லை" என்று
கணவரிடம் திரும்பி கண்ணை
உருட்டினார்.

"அதில்லை.. இந்தப் ப்ராஜெக்ட்
டென்டர் வரும் போதே.. அதெல்லாம்
பிடித்து விடுவான் என்று தெரியும்"
என்று சிரித்தார். "பின்னே.. வேறு
என்ன?" என்று புருவத்தைச் சுருக்கிக்
கேட்டார் ஜானகி.. மதுவும் என்ன
சொல்ல வருகிறார் என்று உற்றுக்
கவனித்தாள்.

"ஆமாம் தனித்தனியாகச் சொன்னால்..
மாமியார் மருமகளுக்கு ஈகோ
பிரச்சினை வந்து விடும் என்று
எல்லோருக்கும் பொதுவாகச்
சொல்லிவிட்டான் பார்" என்று
சிரித்தவர் "இந்த விஷயத்தில்
என்னை விடக் கெட்டிக்காரன் தான்"
என்று ஜானகியை வேலுமணி
வம்பிற்கு இழுத்தார். மதுவிற்கு
கார்த்திக் வம்பு இழுக்கும் பழக்கம்
எங்கு இருந்து வந்தது என்று தெரிந்து
கொண்டாள்.

எல்லோரும் சிரிக்க ஜானகி தன்
கணவனிடம் திரும்பி
"பார்த்துக்கொள்கிறேன்" என்று
முறைத்தார்.

பிறகு பேசிவிட்டு அறைக்குள்
நுழைந்த மது பால்கனிக் கதவைத்
திறந்துவிட்டு பால்கனியில் நின்றாள்.
பாத்ரூம் சென்று விட்டு வந்த கார்த்திக்
மதுவைத் தேடிப் பால்கனிக்கு
வந்தான். பால்கனி லைட்டை
அணைத்தவன் "ஏன் மது.. ஏதோ
யோசனையில் இருக்க.. என்ன
யோசனை?" என்று பின்னால் இருந்து
அணைத்து அவள் தோளில் தன்
முகத்தை வைத்தபடிக் கேட்டான்.

"அது... சென்னை போறீங்கள்ள..
பர்ஸ்ட் டைம் மேரேஜ் அப்புறம் பத்து
நாள் நீங்கள் இல்லாமல்.. போர்
அடிக்கும் எனக்கு அதான் யோசித்துக்
கொண்டு இருந்தேன்" என்று அவன்
கன்னத்தில் தன் தலையைச் சாய்த்த
படிச் சொல்ல கார்த்திக்கின்
அணைப்பு இன்னும் இறுகியது.

"பேசாமல் நானும் உங்க கூட வரவா?"
என்று தலையை மட்டும் திருப்பிக்
கார்த்திக்கிடம் கேட்டாள்.

"கஷ்டமே மது.. பர்ஸ்ட் டாக்டரம்மாக்கு
ஹாஸ்பிடல்ல லீவ் கிடைக்கனும்ல"
என்று அவளிற்கு நினைவூட்டினான்.

"எப்படி அதை மறந்தேன்' என்று மது
நினைக்க... கார்த்திக் தொடர்ந்தான்
"அதுவும் இல்லாமல் எனக்கு
அலைச்சல் இருக்கும் மது..
உன்னையும் அப்படிக் கூட்டிக்
கொண்டு அலைய முடியாது.."
என்றவன் அவளைத் திருப்பி "இந்த
பத்து நாள் இடைவெளியையும்
அனுபவித்துப் பார்க்கலாமே மது"
என்று அவளின் முகத்தில் விழுந்த
கற்றைக் கூந்தலை ஒதுக்கி மதுவின்
நெற்றியில் முத்தமிட்டான். இந்த
நெற்றி முத்தம் சிறுமுகையில் இருந்து
வந்த நாளில் இருந்து கார்த்திக்கும்
மதுவும் பழகி விட்ட ஒன்று. அதுவும்
இவர்களை விடவில்லை.. இவர்களும்
அதை விடவில்லை.

"பேசாம உங்க வீட்டில் போய்
இருந்திட்டு வா நான் வரவரைக்கும்"
என்றான் அவளது மூக்கை ஆட்டியபடி.

"அதெல்லாம் வேண்டாம்.. நீங்க
போனோன நான்பாட்டுக்கு அங்க
போன அத்தை என்ன நினைப்பார்கள்..
ஏதோ உங்களுக்காக மட்டுமா இங்க
இருக்க மாதிரித் தோணாதா.."
என்றவள் "அவங்களும் தனியா
இருப்பாங்க அவங்க கிட்ட பேசிட்டு
இருப்பேன் நான்.. நீங்கள் இல்லாமல்
எப்படி அங்க தனியாப் போவேன்..
நீங்கள் இல்லாமல் போர் அடிக்கும்
தான் சொன்னேன் தவிர இங்க
இருக்க போர் அடிக்கும்ன்னு சொல்ல"
என்று முழுதாகப் பேசி முடித்தவளைக்
கண் இமைக்காமல் பார்த்துக்
கொண்டு இருந்தான்.

எல்லாரும் அம்மா வீட்டுக்கு எப்போ
எப்போ என்று இருக்கையில் அவள்
இப்படி சொன்னது ஏதோ அவனுக்கு
இதமாக இருந்தது. அவனே
பார்த்திருக்கிறானே தன் அன்னை
கூட அப்பா வர முடியவில்லை
என்றால் அவர் மட்டும் தன்னையும்
தங்கையையும் சிறுமுகை அழைத்துச்
சென்றது நினைவு வந்தது.

காதலும் மையலுமாக அவளை
நோக்கியவன் அவளின் தலையில்
முட்டி "சரி பத்து நாள் போறேன்ல..
ஏதாவது தர்றது..." என்று கழுத்தில்
புதைந்ததவனைத் தள்ளியவள்
"அய்யோ என்ன இது" என்றாள்
முறைப்பாக.

"ஏய் நீ என் பொண்டாட்டி டி.."
என்றவன் மறுபடியும் அருகில் வர
அவனைத் தடுத்தவள் "அதை தான்
நானும் சொல்றேன்" என்றவளைப்
புரியாமல் கார்த்திக் பார்க்க நமட்டுச்
சிரிப்பு சிரித்தவள் "புரியலையா.. இது
பால்கனி.. இதே பெட்ரூம்-னா யாரு
கேக்க போறா உங்க பொண்டாட்டி
உட்பட" என்று மது சொல்ல
அவனுக்குப் புரிந்தது.

"ஏய்ய் கேடி.... ரொம்ப முன்னேறிட்டடி"
என்று அவளைத் தூக்கிக் கொண்டு
உள்ளே சென்றவன் என்றுமில்லா
காதலுடனும் மையலுடனும் அவளுள்
புதைய அவனின் மணையாள்
அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

பின் அடுத்த நாள் மாலை கார்த்திக்
கிளம்ப மது அவனிற்குத் தேவையான
அனைத்தையும் பாக் செய்து கொண்டு
இருந்தாள். சுற்றிச் சுற்றி பாக்
செய்தவளைப் பார்த்தவன் "இவளின்
அராத்து இல்லாமல் எப்படி 10 நாள்
இருக்கப் போறேனோ" என்று
எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பத்து நாள் தாங்குமாறு வம்பு இழுக்க
நினைத்தவன் "ஏன் மது.. நான்
பிசினஸ் விஷயமாகச் செல்லாமல்
அங்கு ஏதாவது... வந்து இன்னொரு
பெண்ணைப் பார்க்கச் சென்றால்
என்ன செய்வாய்" பாக் செய்து
கொண்டு இருந்தவளை இடித்தபடி
நின்றுக் கேட்டான்.

"டேய் உன்னை அவ்வளவுதான்" என்று
நிமிர்ந்தவள்.. சட்டென்று ஒன்று
நினைவு வர வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். "ஏய்
என்னடி சிரிக்கற?" என்று கார்த்திக்
கேள்வியாய் மதுவைப் பார்க்கச்,
சிரித்து முடித்தவள் "இல்லை நான்
ப்ரபோஸ் பண்ணதுக்கே இங்க 4
வருஷம் கழிச்சு தான் ரெஸ்பான்ஸ்
கிடச்சுது.. இதுல இன்னொருத்திய
நீங்கப் பார்க்கப் போயிட்டாலும்" என்று
சிரித்த மதுவைக் கார்த்திக் முறைக்க
"சரிசரி கீழே போலாம்" என்று
அவனைத் திருப்பி முதுகில் கை
வைத்து நடந்தாள்.

"என் மேல் உனக்கு சந்தேகமே வராதா
மது?" என்று அவளின் கையைப்
பிடித்து வினவினான்.

மது ஏதோ குறும்பாக யோசிக்க "ப்ளீஸ்
மது.. சிரீயஸாக் கேட்கிறேன்..
விளையாடாமல் பதில் சொல்"
என்றான். அவனின் கேள்வியை
உணர்ந்தவள் "சீ.. உங்களை எப்படி
சந்தேகப்படுவேன்.. என்னிடம்
யாராவது நேரில் வந்து உங்களைப்
பற்றிச் சொன்னால் கூட நான் காது
கொடுத்துக் கேட்க மாட்டேன். அந்த
அளவு எனக்கு நம்பிக்கை இருக்கு
உங்க மேல.. அது கூட நமக்கு
கல்யாணம் ஆன புதிதில் நீங்கள்
நடந்து கொண்டதை வைத்துத்
தெரிந்து கொண்டது தான்" என்று தன்
கரங்களை அவன் கழுத்தில்
மாலையாகச் சுற்றியவள் "என்ன வம்பு
இழுக்க தான் அப்படிக் கேட்டிங்க-ன்னு
தெரியும்.. அப்படி ஒருத்தி இருந்தால்
கூட்டிட்டு கூட வாங்க.. ஓட ஓட விரட்டி
அடிக்கலைன்னா பாருங்க" என்று மது
புருவத்தைத் தூக்கி சிரிக்க... அவளின்
தலையில் தன் தலையை
மென்மையாக முட்டிச் சிரித்தான்.

பிறகு அவனை அனுப்பி விட்டு உள்ளே
நுழைந்தவளால் சும்மா இருக்க
முடியவில்லை.. மாமியாரிடம் சிறிது
நேரம் பேசிவிட்டு வேலையை
முடித்துக் கொண்டு மேலே வந்தவள்,
போர் அடிக்க ஒரு புத்தகத்தை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
இருவருமே இந்தப் பத்து நாள் பிரிவில்
தவித்துத் தான் போயினர்.
கார்த்திக்கிற்கு தான் எப்போதுமே
அவளிடம் வம்பிழுத்து விளையாடி
விட்டு இப்போது இந்த 10 நாட்களைக்
கடத்துவது கடினமாக இருந்தது.
வேலை நேரத்திலும் அவ்வப்போது
அவளது நினைப்பு வந்து அவனை
இம்சித்து உண்மைதான்.

மாலை ஹோட்டல் அறைக்கு வந்ததும்
அவளிடம் போன் செய்து பேசுவான்.
மதுவிற்குமே அவனது பிரிவு
வாட்டினாலும் வேலையாகச் சென்று
இருப்பவனிடம் எதையும் காட்டக்
கூடாது என்று இருந்தாள். ஒருநாள்
பேசிக் கொண்டு இருக்கும் போது "ஐ
மிஸ் யூ" என்றாள் மது.

"என்ன மது கேக்கல" என்றான்
கார்த்திக்.. மது சொன்னது
நன்றாகவே அவன் காதில் விழுந்தது.
ஏனோ மறுபடியும் கேட்க ஆசை..
அதான் கேட்கவில்லை என்று
சொல்கிறான்.

"ஐ மிஸ் யூ" என்றாள் மது. இப்போது
சிக்னல் ப்ராப்ளத்தில் மெய்யாகவே
கார்த்திக்கிற்குக் கேட்கவில்லை...
மறுபடியும் "ஆ... கேக்கல" என்று
கார்த்திக் கத்த "முருகா.. இவன்கிட்ட
போன்ல பேசறதே வேஸ்ட்... 'ஐ லவ் யூ'
சொன்னப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல...
இப்போ 'ஐ மிஸ் யூ' சொல்றப்பவும்
ரெஸ்பான்ஸ் இல்ல... உனக்கு tube
light-ன்னு பேரு வச்சதில்ல தப்பே
இல்ல" என்று நினைத்தவள் "ஒன்னும்
இல்லைங்க... சென்னை எப்படி
இருக்குன்னு கேட்டேன்" என்றாள் மது.

"அதெல்லாம் சூப்பர்.... மது உன்கிட்ட
கேட்கனும் என்று நினைத்தேன். உன்
ஹிப் சைஸ் என்ன?" என்று
வினவினான்.

"என்ன... ட்ரெஸ் எடுக்கப்
போறீங்களா?" என்று வினவ.. "நோ..
இது வேற.. சொல்லு ஹிப் சைஸ்
என்ன?" என்று கேட்டான். மது சொல்ல
மண்டையில் ஏற்றிக் கொண்டவன்
"ஓகே ஒரு வித்தியாசமான ஒன்று..
அதான்" என்றான்.. பிறகு இருவரும்
சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை
வைத்தனர்.

இந்த ஒரு வாரத்தில் மாமியாருடம்
அதிக நேரம் செலவழித்தாள் மது..
அவரும் இல்லை என்றால் மதுவிற்கு
போர் அடிக்கும். ஒரு நாள் ஜானகி
"இப்போது தான் எனக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கு மதுமா..
கார்த்திக்கிடம் நிறைய மாற்றங்கள்"
என்று மதுவிடம் புன்னகைத்தார்.

"என்ன கல்யாணம் ஆகி பையன்
மாறிவிட்டால் எந்த அம்மாவும்
சந்தோஷப்பட மாட்டார்களே.. இவர்
என்ன சந்தோஷமாகச்
சொல்லுகிறார்" என்று யோசித்தவள்
"புரியவில்லையே அத்தை" என்றாள்
மது.

"அது ஒரு கதை டா.. கார்த்திக் காலேஜ்
முடிச்சிட்டு வந்த சமயம் அது.. ரொம்ப
கோவப்பட்டுட்டே இருந்தான்.. அப்படி
எல்லாம் இருக்கவே மாட்டான்.. ரொம்ப
கலகலப்பாக இருப்பான்
எல்லோரிடமும்.. பக்கத்து வீட்டு
வாண்டுகள் கூட 'கார்த்திக் அண்ணா'
'கார்த்திக் அண்ணா' என்று இவன்
லீவிற்கு வந்தால் வருவார்கள்.
ஆனால் ஆளே மாறிப் போயிருந்தான்.
சின்னதாக ஏதாவது சொன்னால் கூட
எரிந்து எரிந்து விழுந்தான்..ஏன் என்று
விளங்கவில்லை எங்களுக்கு" என்று
வெங்காயத்தை உரித்தபடியே ஜானகி
சொல்ல மதுவும் ஏன் என்று யோசிக்க
'அந்த டைம் தானே லவ் ப்ரேக் அப்
ஆச்சு' என்று நினைத்தாள். 'ஆனால்
அந்த சமயம் தானே நாமும் போன்
செய்தோம்... நம்மிடம் நன்றாக தானே
பேசினான்' என்று மதுவும்
குழம்பினாள்.

மது யோசனையில் இருக்க ஜானகி
தொடர்ந்தார் "அப்புறம் இறுக்கமாகவே திரிந்தான் மது.. உன் மாமா தான்
தொழிலிற்கு இழுத்துச் சென்றார்.
கோபம் எல்லாம் அடக்கினானே தவிர
பழைய மாதிரி இருக்கவே இல்லை
அவன். நிலா ஏதாவது நச்சரித்து
அவனிடம் பேசுவாள். எனக்குத்
தெரிந்து நிலா கல்யாணத்திற்கு பிறகு
தான் கொஞ்சும் மாறினான். அதற்குப்
பிறகு அந்தப் பழைய கலகலப்போடு
அவனை இப்போது உங்கள்
கல்யாணத்திற்குப் பிறகு தான்
பார்க்கிறேன் நான். கடவுளை
வேண்டாத நாள் இல்லை மது.
இப்போது தான் நிம்மதியாக
இருக்கிறது எனக்கு..." என்று
மதுவைப் பார்த்தபடியே புன்னகை
முகத்துடன் சொல்லி முடித்தார்.
மதுவின் மனம் தன்னால் தானோ
என்று துள்ளிக் குதித்தது. சாப்பிட்டு
விட்டு அறைக்குள் நுழைந்தவள்
நேற்று வந்த அவர்களின் கல்யாண
ஆல்பத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் வந்த பின்பு அவனுடன்
பார்க்கலாம் என்று நேற்று
எண்ணியவள்... அவனைப் பார்க்க
எண்ணி ஆல்பத்தைப் பார்க்கலானாள்.
எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவள்
பிறகு அதை எடுத்து வைத்து விட்டு
வந்து தன் போனை எடுத்து,
அவனிற்குத் தெரியாமல் தன்
போனில் அவனைப் பிடித்தப்
படங்களைப் பார்த்தாள்.. சொல்லப்
போனால் அவன் சொன்ன மாதிரி
இந்தப் பிரிவில் இன்னும் ஏதோ
இருவரும் மனதால் நெருங்கியபடி
உணர்ந்தாள் மது. அவனது
போட்டோவிற்கு ஒரு முத்தத்தைத்
தந்துவிட்டு... அவனிற்கு "குட் நைட்"
என்ற குறுஞ்செய்தியை அனுப்பி
விட்டு படுக்கைக்கு வந்தாள். மது
அவன் திரும்பி வர எவ்வளவு நாள்
என்று எண்ணிக் கொண்டே
இருந்தாள்.

எட்டாம் நாள் காலை போன்
செய்தவன் "மது குட் மார்னிங்"
என்றான்.. அவனது குரலில் அப்படி
ஒரு சந்தோஷம். கிளம்பிக் கொண்டு
இருந்தவள் அப்படியே படுக்கையில்
உட்கார்ந்தாள்.

"குட் மார்னிங்" என்றவள் "என்ன
காலையிலேயே போன்
பண்ணிற்கீங்க" என்று அவன் குரல்
கொடுத்த புன்னகையில் கேட்டாள்.

"மது... வேலை முடிந்துவிட்டது.. நாளை
அங்கு வந்து விடுவேன்.. அந்தப்
ப்ராஜெக்ட்டும் டபுள் ஓகே.. நான்
சொன்ன அவுட்லைன் ப்ளான் எல்லாம்
அவர்களுக்குப் பிடித்து விட்டது"
என்று மனைவியிடம் பெருமையாகச்
சொல்லிக் கொண்டு இருந்தான்.

"வாவ் சூப்பர்-ங்க..
வாழ்த்துக்கள்..நாளை எப்போது
வருவீங்க.. என்ன டைம்" என்று
வினவினாள் மது..

"நான் வர ஈவ்னிங் ஆயிரும் மது..
எப்படியும் ஆறு மணி ஆகிவிடும்"
என்றான்.. "மது.. ஐம் ஸோ ஹாப்பி"
என்றான் கார்த்திக்.

"ரொம்ப குஷியா இருந்கீங்க போல...
ஊருக்கு வர சந்தோஷமா அல்லது
ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆனதிலா?"
எனக் கேட்டாள் மது.. கேட்டுவிட்டு
அவனது பதிலிற்காகக் காதுகளைக்
கூர்மை ஆக்கினாள்.

"ஒன்னு temporary.. அவ்வப்போது
வரும்.. சில நேரம் வராமல் கூடப்
போகலாம் இன்னொன்று permanent
ஹாப்பினஸ் மது.. என்கூட
எப்போதுமே எல்லா நிலையிலும்
என்னுடன் இருப்பது" என்று சொன்னான்.

மதுவிற்கு தான் எப்போது நாளை
மாலை வரும் என்று இருந்தது.. அவன்
முகத்தை எப்போது பார்ப்போம் என்று
இருந்தது. பிறகு சிறிது நேரம்
பேசிவிட்டு இருவருமே அடுத்த நாளை
எதிர்நோக்கி காத்திருந்தனர்.

அடுத்த நாள் ஹாஸ்பிடலில் மதிய
உணவை தன் உடன் வேலை பார்க்கும்
ரம்யாவுடன் அமர்ந்து தன் மாமியாரின் சமையலை ருசித்துக் காலி செய்து
கொண்டு இருந்தாள் மது. ஏனோ பசி
வேறு மதுவிற்கு அதிகமாக இருந்தது.
ஏதோ அறிவுப்பு(notification)
மொபைலில் வர போனை எடுத்துப்
பார்த்தாள் மது. கார்த்திக் தான்
மெசேஜ் செய்து இருந்தது.. உதடு
தன்னால் புன்னகையில் விரிந்தது
மதுவிற்கு.. "மது.. மிஸ்ஸிங் யூ... On the
way d.. 6 க்கு வீட்டில் இருப்பேன்..
கணவனைக் காக்க வைக்காமல்
சீக்கிரம் வந்துவிடு மதுமா" என்று
இதயத்தை கூட வைத்து அனுப்பி
இருந்தான்.

"ட்ரைப் பண்றேன்" என்று
வேண்டுமென்றே நாக்கை துருத்திக்
கொண்டு இருந்த ஒரு எமோஜியோடு
பதிலை அனுப்பி வைத்தாள்.

பின் உணவை முடித்துக் கொண்டு Out
patients பார்க்க வந்த மதுவிற்கு தலை
கிறுகிறுவெனச் சுத்தியது. ஒரு
நிமிடம் தலையை சிலுப்பி மீண்டும்
நடந்தாள். ஆனால் நடக்க முடியாமல்
கண் இருண்டு கீழே விழப்
போனவளை அவள் உடன் பணிபுரியும்
ரம்யா வந்து டக்கென்று
தாங்கிவிட்டாள்.

மது விழிக்கையில் "வாழ்த்துக்கள்
மதுமிதா.. அம்மா ஆகிட்ட" என்று
கையை குலுக்கினாள் ரம்யா.
மதுவிற்கு அப்படியே சந்தோஷத்தில்
உறைந்து விட்டாள்.

"ஹே... என்னப்பா யோசனை" என்று
ரம்யா மதுவின் கண் முன்னால்
சொடக்குப் போட சுயநினைவிற்கு
வந்தாள் மது.

மது சந்தோஷக் கடலில் குளித்தாள்..
தன் வயிற்றை தடவி பார்த்தவளுக்கு
எந்த வித்தியாசமும் இல்லை தான்..
ஆனால் தனக்குள் ஒரு உயிர் அதுவும்
கார்த்திக்கின் வாரிசு வளர்வதை
உணர்ந்தளுக்கு பரவசமாய் இருந்தது.
அப்போது தான் 15 நாள் தள்ளிப்
போயிருப்பதை மது உணர்ந்தாள்.
எப்படி மறந்தோம் என்று யோசித்தவள்
அவனோடு அடித்த கூத்துகளில்
எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்
பார் என்று தன்னைத் தானே
நினைத்துச் சிரித்தாள். ஏனோ
கார்த்திக்கை இப்போதே பார்க்க
வேண்டும் என்று இருந்தது.
தன்னுயிரை இன்னொரு உயிராக்கி
என்னுள் விதைத்து.. உள்ளே தவழச்
செய்யும் ஒரு தளிராக்கி
விட்டனவனைப் பார்க்க மதுவின்
மனம் துடித்தது. ஏனோ மதுவின் மனம்
எப்போது வீடு செல்வோம் என்று
துடித்தது.

"என்ன மதுமிதா யோசனை?" என்று
ரம்யா கேட்க... "ஒன்றுமில்லை
ரம்யா.. தேங்க்ஸ்" என்றாள்.

"ஒன்றுமில்லையா...." என்றுக் கேட்டு
சிரித்த ரம்யா "வீட்டுக்காரர் வேறு
இன்று வருகிறார்.. செம சர்ப்ரைஸ்
தரப் போறாய்" என்று கேட்க மது தன்
கணவனை நினைத்துப்
புன்னகைத்தாள்.

"மது டெஸ்ட் ரிசல்ட் ஈவினிங்கே
வாங்கிட்டு போயிக்க" என்றாள் ரம்யா.

"ம்ம் ரம்யா" என்றுவிட்டு தன்
வேலையைத் தொடந்தவள் ஈவ்னிங்
ரிசல்ட்டை வாங்கித் தனது Handbag
இல் வைத்து விட்டு தன்
சித்தப்பாவிற்கு போன் செய்தாள்.
கார்த்திக் சென்ற பின் எட்டு நாட்களாக
திருமுருகனுடன் தான் சென்று
வந்தாள் மதுமிதா.

திருமுருகன் போனை எடுக்க
"சித்தப்பா உங்களுக்கு வேலை
முடிந்ததா?" என்று வினவினாள் மது.

"முடிந்தது டா... இப்போது
கிளம்புகிறேன்" என்று பதிலைத்
தந்தார் திருமுருகன்.

கீழ் உதட்டைக் பற்களால்
மென்மையாகக் கடித்து யோசித்தவள்
"இல்லை சித்தப்பா.. எனக்கு வேலை
இன்னும் இருக்கு.. ஒரு ஒரு மணி
நேரம் கழித்து வாங்களேன்" என்று
மது சொல்ல "சரி பாப்பா" என்று
போனை வைத்தார். எப்பவுமே
செல்லமாக அழைப்பது தான்..
ஆனால் மதுவிற்கு சிரிப்பு வந்தது..
"எனக்கே பாப்பா வரப்போது
சித்தப்பா" என்று நினைத்துச் சிரித்து
போனை வைத்தாள்.

ஹாஸ்பிடலை விட்டு வெளியே
வந்தவள் எதிரே இருந்த கடைக்குச்
சென்று ப்ளூ கலர் கிப்ட் ரிப்பன்
ஒன்றை வாங்கினாள். வாங்கி
அழகாக தனது ரிப்போர்டில் கட்டினாள்.
கட்டி ஒருநிமிடம் பார்த்தவள் மீண்டும்
ஹேண்ட் பாக்கில் பத்திரமாக
வைத்தாள்.

பின்பு பக்கத்தில் இருந்த முருகன்
கோயிலிற்குச் சென்று சாமியை
நன்றாகச் சுற்றி வந்து அப்படியே சில
நிமிடம் அமர்ந்துவிட்டாள். ஏனோ
முருகனிற்கு மனம் உருக நன்றி
சொன்னாள் மது. தேய்பிறையாய் தன்
துன்பத்தைக் கார்த்திக் துடைத்து
எறிய, வளர்பிறையாய் தன்னுள்
வளரும் குழந்தையை எண்ணி மகிழ்ந்தாள் மது. ஏனோ முகம்
அறியாது தன்னுள் வளரும்
குழந்தையைப் பார்க்க நினைத்தாள்
மது. தன் தாயிடம் கண்ட சுகம்
அனைத்தையும் தன் குழந்தைக்குத் தர
எண்ணினாள். அது பிறந்து "ங்கா"
என்று பொக்கை வாயில் சிரிப்பதை
எண்ணும் போதே மதுவிற்கு உடல்
சிலிர்த்தது. பிறகு எழுந்து ஹாஸ்பிடல்
வாயிலை நோக்கி நடந்து தன்
சித்தப்பாவிற்காகக் காத்திருந்தாள்.

ஆயிரம் யோசனையுடன் இருந்தாள்
மது. கார்த்திக்கிடம் இதைச்
சொன்னவுடன் அவன் முகம்
சந்தோஷத்தில் மாறுவதைக் காண
மதுவின் மனம் ஏங்கியது. இரு
குடும்பமும் சந்தோஷத்தில் மிதக்கப்
போவதை எண்ணி எண்ணி
நின்றிருந்தாள்.

முக்கியமாகப் பார்வதி பாட்டியிடமும்
சொல்ல ஏங்கினாள். அவர்கள்
வீட்டிற்கு போய் வந்து 45 நாட்கள்
ஆகிறது என்று மனதிற்குள் கணக்குப்
போட்டுச் சிரித்தாள்.

திருமுருகன் வந்தவுடன் காரில் ஏறிய மதுவைக் கண்டவர் "என்ன மதுக்குட்டி
மாப்பிள்ளை வந்துவிட்டாராமே?"
என்று கேட்டார்.

"ஆமாம் சித்தப்பா.. வேலை
முடிந்துவிட்டது என்று நேற்று போன்
பண்ணிச் சொன்னார்" என்று
கூறினாள். பின் இருவரும் பேசிய
படியே வீடு வந்தனர். வீட்டில்
இறங்கியவுடன் "உள்ளே வாங்க
சித்தப்பா" என்று அழைத்தாள் மது.

"இல்லைடா... ரொம்ப அசதியா
இருக்கு.. இன்னொரு நாள் வருகிறேன்" என்று சென்று விட்டார்.
கார்த்திக் வந்து விட்டான் என்பதை
வெளியில் நின்ற காரே சொன்னது.
மிதுனா வீட்டின் காரும் நிற்பதைப்
பார்த்தவள் "ஓ இவளும் வந்து
இருக்கிறாளா" என்று நினைத்தபடியே
உள்ளே நுழைந்தாள்.

உற்சாகமாக உள்ளே வந்த மதுவின்
புன்னகை அப்படியே நின்றது.
ஏனெனில் ஹாலில் கார்த்திக்..
வேலுமணி.. மிதுனாவுடைய
அண்ணன் சிவா மற்றும்
மிதுனாவுடைய அப்பா அம்மா
அமர்ந்திருக்க ஜானகி அம்மாள்
சமையல் அறையில் இருந்து
வெளியே வந்தார். ஒருவரின் முகமும்
சரி இல்லை. ஏதோ தப்பாகத்
தோன்றியது மதுவிற்கு. மது உள்ளே
வர எல்லாரும் மதுவின் முகத்தையே
ஒரு வித இறுக்கமும்
எதிர்ப்பார்ப்புமாக நோக்கினர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top