பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்பு
வீட்டு ஹாலில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராமலிங்கம்.வயதின் தளர்வு அவர் முகத்தில் தெரிந்தது.பொறுப்புகளை மகன் பேரன் எனக் கொடுத்துவிட்டு ஓய்வாக இருந்தார்.அவருக்கென்று எந்த குறையும் இல்லை.
அவர் நிழலாக இருக்கும் மனைவி,தந்தை சொல்லை மதிக்கும் மகன்...
பருத்தியூரின் எல்லையில் நுழைந்தது அந்த வெள்ளை நிற மாருதி கார்.அதில் முன் சீட்டில் அமர்ந்திருந்தார் ராமலிங்கம்.நான்கு நாட்களாக வெளியூரில் இருந்து விட்டு அன்று தான் ஊர் திரும்பியிருந்தார்.வீடு நெருங்க நெருங்க அவரின் மனதில் சிறு நெருடல்.அவர் குடும்பத்தை பற்றி அவர் நன்கு அறிந்தவர் தான்.குடும்பத்தவர்...
பருத்தியூரின் பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம்.ஊரின் பெரிய மனிதர்.நூறு ஏக்கர் வயல் கரும்பு தோட்டம் தேங்காய் தோப்பு சக்கரை மற்றும் அரிசி ஆலை இவை எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர்.அவரின் மனையாள் முத்துலட்சுமி.
அவரின் ஒரே மகன் சுந்தரேசன்.அவர் மனைவி மங்கையர்க்கரசி.
அவர்களின் மூத்த மகன் மணிமாறன்.இரண்டாமவன்...