மௌனமாய் எரிகிறேன் 24

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சேனா தன்னோட அத்தமாவை பார்க்க வந்துட்டா... அம்மாவும், பையனும் சேர்ந்து அவளை அமெரிக்காவுக்கு போக விடுவாங்களா?
 
Last edited:
  • Like
Reactions: MAR

Novel-reader

Well-Known Member
கலை அம்மாக்கு பையனும் வேணும் மருமகளும் வேணும். அதுவும் பையனோட அடாவடி past மறந்து அவனோட wife அப்படியே அவனோட சேர்ந்து வாழணும். அதுக்கு தான் இப்படியெல்லாம் கண்டிப்பா அவ வருவான்னு சொல்லி indirect-ஆ பையனை வெச்சு சாதிச்சுட்டாங்க.

சேஷனுக்கு சத்யா மேல கோவமெல்லாம் பட அருகதையே கிடையாது. அவன் சொன்னது ஒன்னுமே தப்பில்லை. இவனுக்கும் கூடப்பிறந்த பெண் யாராவது இருந்திருந்தா அப்ப புரிஞ்சுருக்கும் சத்யனோட வேதனையும் அவனோட கோவத்துக்கான நியாயமும்.

அடேய் ஆதிசேஷா, உன்னோட trap miss-ஆகி இன்னும் 10 வருஷம் கழிச்சு தான் ஆத்மநாதன் செத்து போறான்னு வெச்சுப்போம், அப்ப அதுக்கு அப்புறம் தான் பொறுமையா உன் 'அம்மு'வோட வாழ mood வருமா உனக்கு? அது வரைக்கும் அவளோட அண்ணன், தன் தங்கச்சி வாழ்க்கை நிலையை பார்த்து, சகிச்சு மௌனமா கடந்து போகணும். உனக்கு வாழ ஆசை வந்த பின்ன அவன் அந்த புண்ணிய தருணத்தை ஆனந்த கண்ணீர் சிந்தி ரசிச்சு, தன் தங்கையை உன்னோட சேர்த்து வைக்கணுமா? நீயெல்லாம் மனசாட்சியை கொன்னவன்டா. அதுனால தான் உனக்கு சத்யா மேல கோவம் வருது.

ஏம்மா சேனா, இந்த ஜென்மத்துக்கு நீ வேற எவனையும் கல்யாணம் செய்யப்போறதில்லை. அதுக்கு பேசாம இந்த 'உத்தம நேசமணி'-யோடயே போய் குப்பை கொட்டு. அவன் தான் கல்யாணத்துக்கு பின்ன உனக்கு உண்மையா இருக்கறதா அவன் வாயாலையே ஆதாரம்(?) கொடுக்கறானே. அதை நம்பு. வேற வழியில்லை உனக்கு.

அது மட்டுமில்லாம அவன் உன்கிட்ட இருந்து நகர்ந்தது அவன் மேல நம்பிக்கை இல்லாமல் தான், உனக்கு பயந்தில்லை. அவனுக்கு குடியை விட்டுட்டு உன் மூலமா அவனோட அம்ரு மறைவை ஆத்திக்க பழகிடுவோமோன்னு அவனை நினைச்சே பயம் போல. So அவனை மன்னிச்சு விட்டுடு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top