Naan Ini Nee - Precap 23

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
தீபனின் கரம் பிடித்து ஆர்த்தி நிற்க, அடுத்த இரண்டொரு நொடியில் மிதுனோடு அனுராகா அங்கே அந்த அறையினுள் நுழைய, அங்கிருந்த பெரியவர்களில் உஷாவிற்குத்தான் சந்தோசம் பிடிபடவில்லை..

‘பார்த்தீங்களா??!!’ என்று சக்ரவர்த்தியைப் பார்க்க, தாராவோ தன் மகளை குழப்பமாய் பார்க்க,

அனுராகா “டாட் வர சொன்னீங்களா..” என, தீபனோ “ம்மா..” என்றான் அம்மாவிடம்.

“என்ன தீபன்..” என்று உஷா சொல்லும்போதே, “அப்பா அம்மா சொன்னது உண்மையாகிடுச்சா??!!” என்றான் சிரித்தபடி மிதுன் சக்ரவர்த்தி.

தீபனுக்கும், அனுராகாவிற்கும் என்னவென்பது சிறிதும் புரியவில்லை என்றாலும், அனுராகாவோ தன் அப்பா முகம் பார்க்க, தீபனோ “என்னம்மா??!!” என்றான் திரும்பவும் உஷாவிடமே..

ஆர்த்தியோ “தீப்ஸ்... ஆன்ட்டிக்கு நம்ம விஷயம் தெரியும்..” என்று மெதுவாய் சொல்ல,

‘என்ன விஷயம்??!!’ என்பதுபோல் அனுராகா இம்முறை தீபனைப் பார்த்தாள்.

---------------------------------------------

தீபன் அங்கில்லை..

அனுராகா செய்வது அறியாது நின்றிருக்க, மிதுன் எதுவுமே தெரியாதது போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் என்கையில் எந்த பெற்றவர்களுக்குத் தான் சந்தோசம் இருக்காது. அப்படியொரு பூரிப்பு தான் சக்ரவர்த்தி, உஷா தம்பதியினர் முகத்தினில்.

சக்ரவர்த்தி “இப்போ உறுதி செஞ்சுடலாம்.. எலக்சன் முடியவும் கல்யாணம் வச்சுக்கலாம்..” என,

லோகேஸ்வரன் “நாளைக்கு எங்க ஆபிஸ் பார்ட்டி, நான் லீகலா என்னோட மருமகன் மிதுன்னு எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்கணும்..” என,

“அதுக்கென்ன தாராளமா செய்ங்க..” என்றார் அவரும்..

அனுராகாவோ ‘என்ன இதெல்லாம்..’ என்று தாராவைப் பார்க்க, அவரோ ‘இப்போ எதுவும் பேசாதே..’ என்று மகளை அடக்கினார்.

---------------------------------------------

அனுராகா ‘ஏதாவது செய்..’ என்று தீபனை காணும் போதெல்லாம், அவனால் எதுவுமே செய்திட இயலாது நின்றது அவனுக்கு எப்படியொரு வேதனை கொடுத்திருக்கும் என்பது அவன் மட்டுமே அறிவான்.

அப்படியிருக்கையில், அவளை அங்கே விட்டுவிட்டு, தான் இப்படி கிளம்பி வந்ததும் கூட அவனால் சகிக்க முடியவில்லை..

அந்த ஷர்மா.. அவன் கையில் இருக்கும் ஆதாரங்கள்.. இப்போது வெளியானால், அவ்வளவு தான்.. அவனின் அப்பாவின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் பெரும் வீழ்ச்சி ஏற்படும்..

இவை அனைத்தும் சேர்த்து தீபன் சக்ரவர்த்தி என்ற மனிதனின் மன நிலையை மிக மிக மாற்றி அமைத்தது..

--------------------------------------------

பெயருக்காகவேனும் சிரிக்க வேண்டிய கட்டாயத்தில் அனுராகா இருக்க, அவளருகே நின்றிருந்த மிதுனோ அப்படியொரு பூரிப்பில் இருந்தான்.. தன்னைப்போல் ஒரு மிடுக்கு, ஒரு தோரணை அவனுக்கு வந்திட, லோகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தவர்களோடு பேசிக்கொண்டு இருக்க, நொடிக்கொரு முறை அனுராகா மீது தான் பாய்ந்தது அவனின் பார்வை.

அனுராகா, தீபனை வீழ்த்த அவனே எதிர்பாராது அவனுக்குக் கிடைத்த பெரிய துருப்புச் சீட்டு..

வெளி விசயத்தில் எத்தனை வீழ்ந்தாலும் தீபன் எழுந்திடுவான் என்று மிதுனுக்கு நன்குத் தெரியும்..

ஆனால் அவனின் மனது விரும்பிய ஒன்றில் அவன் வீழ்ந்தான் என்றால்??!! அதுவும் அவன் கண் முன்னேயே தன் அண்ணனோடு அவள் வாழ்கிறாள் என்றால்??!!!

கண்டிப்பாய் தீபன் இங்கே இருந்திட மாட்டான் என்பது திண்ணம்..

அனுராகா தக்க சமயம் பார்த்து காத்திருக்க, அங்கே பார்ட்டி ஏரியாவில் இருந்த பாரிலோ பிரஷாந்த், தீபன் சக்ரவர்த்தி முன் அமர்ந்திருந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
நினைத்ததை சாதித்த கர்வம்,
மிதுனுக்கு
திருமணம் நடக்கும்பொழுது
பார்த்துக் கொள்ளலாம்

தீபன் எங்கே சறுக்கினான்?
ஷர்மாவை தீபன் என்ன
செய்யப் போகிறான்?

தம்பி மீதுள்ள பொறாமையால்
கூமுட்டை மிதுன் அப்பாவுக்கே
ஆப்பு வைக்கப் போறானோ?
 
Last edited:

Joher

Well-Known Member
Tks சரயு......

நீ breakup party யா வச்சி தள்ளினா......
இப்போ அது உன் தலையில் விடியுது தீபா......
விதி வலிது......
ராகாக்கு எத்தனை பேர் அடிச்சுக்க போறீங்க???
உங்கப்பாக்காக ராகாவை விட்டு கொடுக்க போறியாடா தீபா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top