Suchu
Member
வாவ்.. வள்ளுவன் முதல்சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..
புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..
அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..
இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..
தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..
இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..
இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..
மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..
வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..
ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
வாசகர் வரை.. அழகு.
ஆழமான யோசிப்பில்
உருவான கவிதை
கலக்கல்.
பெருமையோடு கூட
வேரின் வறட்சியும்
நாசுக்காய் சுட்டி..
அருமை.
தமிழுக்கான மயக்கும் சக்தி
உங்கள் எழுத்துக்கும்
உண்டு
இந்த கவிதையை நான்
எடுத்துக்கொள்கிறேன்
என் Diary க்கு அழகூட்ட.