நயனா சாப்பாடு போட பக்கத்துல வந்தாலே கதிருக்கு பறக்கறதை போல இருக்குதாம். சமையல் அவ செஞ்சதுன்னு சொன்னதும் முகமே மலர்ந்துருச்சு.ஆனா,இது காதல்னு ஒத்துக்க மாட்டேங்கறான்.
சட்டையை ஒழுங்கா தைக்கலைன்னு சொல்றாரு என அர்ச்சனா,கதிரை பற்றி குறை சொல்ல,அவள் செய்த தவறை பற்றி கூறுவதுடன்,அப்பா,நான் எவ்வளவு முக்கியமோ அவரும் அப்படித்தான் என நயனா கூறுவது அருமை.
ஒரே இடத்தில் ஒன்னா வேலை செய்யறப்போ ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது.
இன்னும் எத்தனை நாளைக்கு கதிர் தன் காதலை சொல்லாமல் இருப்பானோ பார்க்கலாம்.
விலோ கண்ணுல தண்ணி வந்தா வெங்காயம் அரிஞ்சு கண்ணுலே வைப்பேன்னு சொல்லுறீயே நயனா.கல்யாணம் ஆனதில் இருந்து விலோ தான் ஆதி கண்ணுல தண்ணிய வர வைக்கிறான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ.அருமையான பதிவு சவீதா.
ஹா ஹா ஹா
செங்கதிர் டெய்லருக்கு துணி தைக்க மட்டும்தான் தெரியும் போலவே
அடுத்தவரை அதட்டி வேலை வாங்கும் ஆளுமைத்திறன் இல்லையோ?
ஒண்ணும் பிரச்சனையில்லை கதிர்
நயனாவைப் பொஞ்சாதியாக்கிக்கோ
அவளையே எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணச் சொல்லு
மேட்டர் ஓவர், கதிர் பையா
விலோசனா எல்லாவற்றிலும் வெண்டைக்காய்தானா?
நயனா எப்படி தெளிவாய் பேசுறாள்?