தனிமையில் ஊஞ்சலாடிய உள்ளங்கள் நிரஞ்சனன் ராதிகா இருவரின் கதைதான் இது. இவங்களுக்கு இடையில நம்ம மாட்டுனது போதாதுன்னு அவங்க பையன் அத்துவும் மாட்டுனதுதான் அவன் மட்டும் இல்லைனா இவங்க கதை கந்தல் ஆகிருக்கும்.
சரயுக்கா நாவல்ல ஆனந்த பூந்தோராணத்திற்கு பிறகு பெண்ணோட நுண்ணிய உணர்வுகள் பேசியது ஊஞ்சலாடும் தனிமைகள்ல தான்
மற்ற கதையை விட இது ரெண்டிலும் லட்சு, ராதிகா உணர்வுகள் தான் கதையை நகர்துற பீலிங்.
எப்படித்தான் இப்படி எழுத்துறீங்களோ நான் கூட உங்களை தெரிஞ்சிக்குறதுக்கு முன்னாடி ரொம்ப பெரியவங்கன்னு நினைச்சேன் இந்த வயசுலயே இவ்ளோ maturity எதிர்பார்க்கலை
அழுது அழுது கதை படிக்க வச்சது நீங்களா தான் இருப்பீங்க... ராதிகா எண்ணங்கள் எல்லாம் எனக்கு கண் கலங்க வைத்தது. அம்மாக்கு தெரியாம வேற அழுது குஷ்டம்டா சாமி ஏன் அழுறன்னு கேட்டு கதை படிச்சின்னு விளக்கம் சொன்னா விளக்குமாத்தால அடி வாங்குறது உறுதி
(லட்சுமி ஈஸ் மாமா கூட கடைக்கு போயிக்குறேன்னு சொல்லும் போதும் இதே அழுகை தான்... அது ஆச்சு படிச்சி மூணு வருஷம் ஆனாலும் )
ஒன்னு கண்டிப்பா தோணிச்சு ஒரு கை மட்டும் தட்டிக்கிட்டே இருந்தா என்னைக்கும் ஓசை வராது அதுவும் திருமண வாழ்க்கையில் சுத்தமா வராது
ராதிகா மன்னிச்ச அளவு பெரிய மனசு எனக்கு இல்லை என்னா பேச்சு பேசுனான் அடிச்சி முகரைய உடைக்குற அளவு வந்துச்சு எனக்கு காதல் இருந்தா மன்னிக்க வைக்கும் வாழ வைக்கும் போல அது புருஷன் பாடு பொண்டாட்டி பாடு தனி department நமக்கென்ன இன்னும் அந்த department எனக்கு புரியாத புதிராதான் இருக்கு
அதுவும் டிவோர்ஸ் வாங்குனதை பெருமையா சொல்லுற ஹீரோவை ஒன்னும் சொல்றதுக்கில்லை ஹாஹா.
அட்லாஸ்ட் எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்குக்கா.. இதை படிச்ச உடனே ஆனந்த பூந்தோராணம் திரும்ப படிக்க ஆசை வந்துருச்சு ச்ச ஈஸ் மாமாவைப் போய் திட்டி திட்டி படிச்சேன்னே அவன் எவ்வளவோ பரவால்லையே
மேன்மேலும் பெண்களின் உணர்வுகளை பேச வாழ்த்துகள்க்கா phd தாண்டி அதுல பட்டம் இருந்தா வாங்குங்க வாங்கி எழுதுங்க நாங்க படிக்குறோம்