அக்ஷய் ரொம்ப சந்தோசமாக உணர்ந்தான். தன் காதலி கொடிமலர் தன் கண் முன்னால் நடமாடிக் கொண்டிருந்தாள். காண்பதெல்லாம் கனவா என்று நினைக்கும் அளவுக்கு சந்தோசம் மனதி நிறைத்திருந்தது. இத்தனை நாளும் யாரிடமும் சொல்லாத ரகசியம் அது.
முஜன்மம் பற்றி சினிமாவில் பார்த்த போது சிரித்திருக்கின்றான். "புல் ஷிட்" என்று வாய் விட்டே கூறியும் இருக்கின்றான். ஏன் காதல் என்ற வார்த்தையையும் வெறுத்தான் அது அவன் அன்னை தந்தை மேல் வைத்த அதீத காதலால் காதலையே வெறுத்தான்.
அந்த காதலால் தானே அன்னை தந்தைக்கு மூன்றாம் தாரமானார். அவப்பெயரோடு வாழ்ந்து மறைந்தார் என்று கொதிக்கும் உள்ளம். அப்படிப்பட்டவன் காதல் என்று நெருங்கும் பெண்களை மாத்திரமன்றி பணத்துக்காக தன்னிடம் நெருங்கும் பெண்களையும் ஒதுக்கினான்.
அவன் நினைத்திருந்தால் பணத்தால் விரும்பும் பெண்ணை விலைபேசி இருந்திருப்பான். தந்தையிடம் பணம் கொட்டிக் கிடப்பதால் தானே பெரியன்னை அவரை நெருங்கி அஜய் உண்டான பின் முதல் தாரத்தை விவாகரத்து செய்து மணந்தார் என்ற புரளி இருக்க அவனை நெருங்கும் பெண்களை நம்ப மறுத்தான். அதனால் தான் அஜித்துக்கு இலகுவாக அக்ஷையை பற்றிய வதந்திகளை கிளப்ப முடிந்தது.
தனது இருபத்தியோராம் வயதில்லையே தன் முன்ஜென்ம நியாபகங்கள் கனவாக வர அதை பெரிதாக கண்டு கொள்ளாதவன் பாஸ்கரிடம் மட்டும் அதை பகிர்ந்து டாக்டரை அணுகினான். ஆனால் அவனுக்கு தெளிவான பதில் தான் கிடைக்கவில்லை.
மதியழகியை முதன் முதலாக கண்ட போது கூட பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால் உள்மனம் அவளை விடாதே என்று மட்டும் கூவ அவள் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான்.
மீண்டும் கனவு வந்தது கனவில் கொடிமலரின் முகம் மதியழகியாக தெரிந்தாள். வினோதமான கனவு என்று நினைத்தவன் பாஸ்கரிடம் பகிர அவன்தான் முன்ஜென்மமாக இருக்கும் என்று சொல்ல யோசனையில் விழுந்த அக்ஷய் அதை பற்றி ஆராய்ச்சி செய்யலானான்.
அவன் கனவில் கண்ட ஊரை பற்றி தேடிப்பார்த்தவன் அவன் கனவில் கண்டது போல் தான் இருந்திருக்கிறது என்று அறிந்து கொண்டதும் ருத்ரமகாதேவி என்று ஒருத்தி உண்மையாகவே இருக்கிறாளா என்று ஆச்சிரியமடைய மதியழகியின் மூலம் அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது.
அவன் நல்ல நேரம் அவன் இறந்த பிறகு நடந்த சம்பவங்களும் கனவில் வர ருத்ரமகாதேவியின் சபதமும் நியாபகத்தில் வர ருத்ரமகாதேவியை சந்திப்பதை தவிர்த்தான்.
அவனுக்கே குழப்பமாக இருந்தது. தான் இந்த ஜென்மத்தில் அக்ஷையாக பிறந்திருப்பது உண்மை. கொடிமலர், பிறந்திருக்கிறாள், வெற்றி என்ன ஆனான் என்று தெரியவில்லை. வெற்றியும் தன் ஆழ்மனதில் இருக்கிறானோ? அம்மன் சொன்னது போல் ருத்ரமகாதேவியை சந்தித்தால் வீரவேலன் மறைந்து வெற்றிவேலன் தோன்றி ருத்ரமகாதேவியின் பின்னால் சென்று விடுவேனோ! என்ற அச்சம் அக்ஷையை ஆட்டுவிக்க ஆரம்பித்திருந்தது.
இந்தியாவிலையே தலைசிறந்த சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுவாமி ஜெகதீஸ்வரன் சுவாமிகளை சந்தித்தவன் ஆலோசனை கேட்க அவன் குழப்பம் தீர ஒரே வழி மதியுடனான திருமணம். திருமணம் நடந்து விட்டால் எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க முடியாது என்று விட்டார்.
காதலை சொல்லி மதியை அணுக பயந்தான் அக்ஷய் மதிக்கு பழைய நியாபங்கள் இல்லை. காதலால் பழைய நியாபங்கள் திரும்பி ருத்ரமகாதேவியை பழி வாங்கவென்று கிளம்பிவிடுவாளோ என்ற அச்சம் வேறு. திருமணத்தை முடிப்பதே சரியான தீர்வு அதன் பின் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.